search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Railway"

    • இஸ்ரோவுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் வழித்தடத்தை அறிய முடியும்.

    நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய தொழில்நுட்பத்தை ரெயில் இஞ்சின்களில் பொருத்தும் நடவடிக்கையை இந்திய ரெயில்வே மேற்கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் முலம் ரெயில் நிலையங்களில் ரெயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் வழித்தடம், ரயில்கள் இயக்கப்படும் நேரம் உள்ளிட்டவை கட்டுப்பாட்டு அலுவலக விளக்கப் படத்தில் தானாகவே பெறப்படும். நிகழ்நேர தகவல் அமைப்பு தொழில்நுட்பம், 30 விநாடிகள் கால இடைவெளியில், புதிய தகவல்களை வழங்குகிறது.

    இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இஞ்சின்கள் மூலம், ரயில்களின் இருப்பிடம், இயக்கப்படும் வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும். இதுவரை 2,700 ரெயில் இஞ்சின்களில் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்
    • உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது வாங்கினால் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என விளக்கம்

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரெயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் இந்த உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் மூலம் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே, ரெயில்களில் உணவு சமைத்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் பயணத்தின் போது ஒரு கப் டீ குடிப்பதற்கு ஒரு பயணி 70 ரூபாய் செலுத்திய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதாப்தி ரெயிலில்தான் இந்த அளவுக்கு காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், '20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கப் டீக்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்திய ரெயில்வேயால் 2018இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சரி.

    இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் உணவு சேவை கட்டாயமாக இருந்தது, ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரெயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு வழங்கவேண்டியதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென் மாவட்டத்தில் இருந்து நெல்லை வந்த நவீன எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் ஆர்வமாக பயணம் செய்தனர்.
    நெல்லை:

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்களில், ஐ.சி.எப். தயாரிப்பிலான பழைய ரெயில் பெட்டிகளை மாற்றி அதிநவீன பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தற்போது தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிநவீன ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

    நேற்று சென்னை எழும்பூரில் இந்த ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதில் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தார்கள். இந்த ரெயில் இன்று காலை நெல்லை வந்தது. நெல்லை பயணிகள் இந்த நவீன பெட்டிகளை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் 2 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்றும், 3 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 6, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 11, பொது பெட்டிகள் 3, 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.

    ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பெட்டிகளின் எடை 52 டன்னுக்கும் குறைவானது. இதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்துடன் இந்த ரயில் பெட்டிகளை எளிதாக இயக்க முடியும். பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதும், விபத்து நேரங்களில் எளிதாக கவிழ்ந்து விடாமல் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்பக்கூடிய பயணி பெட்டிகள் என்பதால் இனிமேல் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் அமைதியை வழங்க கூடியதாகவும் இந்த வகை பெட்டிகள் அமைந்துள்ளன.

    இந்த பெட்டிகளில் நவீன வாஷ்பே‌ஷன்கள், கழிவறைகள் உள்ளன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் கூடுதலாக 8 பெர்த் என மொத்தம் 80 படுக்கைகள் இடம்பெற்று உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நாளை முதல் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இத்தகைய நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. அதிவேகத்தில் செல்லும் வகையில் இந்த பெட்டிகள் உள்ளதால் இரட்டை ரெயில் பாதை வந்த பின்னர் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயண நேரம் மேலும் மிச்சமாகும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
    மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து அரசு துறைகளும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்திய ரெயில்வே துறை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.



    மேலும் டெல்லி, மும்பை, லக்னோ, சூரத், பெங்களூரு உள்ளிட்ட 43 ரெயில் நிலையங்களில் அக்டோபர் முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் வாசகங்கள் இடம் பெறவும், பூரி, அமிர்தசரஸ் ஹரித்துவார் உள்ளிட்ட 28 ரெயில் நிலையங்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரம், அமைதி, தன்னார்வ சமூக சேவை, இன ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் வாசகங்கள் 43 ரெயில் நிலைங்களில் இடம் பெற இருக்கின்றன.  #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    ×