என் மலர்
தலைப்புச்செய்திகள்
ஆர்.ஜே.-வாக இருந்து நடிகர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம், இவர் மீண்டும் வர்ணனை செய்வதை ஒட்டி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் விரைவில் ரிலீசாகலாம் என்றும் கூறப்படுகிறது.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
- படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
- சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
திரையுலகின் உச்ச நட்சத்திரம், ரேசர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜித் குமார். திரைத்துறை கடந்து, தற்போது கார் ரேசிங்கில் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள ரேசர் அஜித் குமாரை திரைப்பிரபலங்கள் நேரில் சந்தித்து கார் ரேசிங்கில் பங்கேற்று வருவதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், நடிகை மஞ்சு வாரியர் ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்துள்ளார். கார் பந்தயக் களத்தில் அஜித் குமாரை சந்தித்தது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ``AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்,'' என குறிப்பிட்டுள்ளார்.
- முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. நாளை மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாளை மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முகுல் வாஸ்னிக் மற்றும் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
- தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது.
கேரளாவின் 10 மாத உறுப்பு தானம் செய்தவரான அலின் ஷெரின் ஆபிரகாமை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 131வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எந்தவொரு பெற்றோருக்கும் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமி ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கம் பெற்று வருகிறது, உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்ற பலர் உள்ளனர்..." என்று அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில் நடந்த ஒரு சாலை விபத்தை தொடர்ந்து அலின் ஷெரின் மூளைச்சாவு ஏற்பட்டது. விரைவில் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர். அவளுடைய பெற்றோர்களான அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் ஆன் ஜான், அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தானம் செய்யப்பட்டன. சிகிச்சையில் இருந்த ஆறு மாத குழந்தைக்கு கல்லீரல் கிடைத்தது. இதன் மூலம் கேரளா மாநிலத்திலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் குழந்தை என்ற பெருமையைப் பெற்றது.
சிறுநீரகங்கள் மற்றொரு குழந்தைக்கு ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்றப்பட்டன. விரைவில், கேரள காவல்துறை 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு மரியாதை செலுத்தியது, அவரது தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
- படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
- படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
வி.கே.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் வடம். உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக காளை அடக்குதல் போட்டியை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமல் உடன் நட்டி சுப்ரமணியம், சனக்ஷா ஸ்ரீ, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பலரும் விமலின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
- நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
- இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் அவரது தாயார் பெரியம்மாள் அவர்களுக்கும் இன்று 22.02.2026 எனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கினேன்" என்று தெரிவித்தார்.
- கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார்
- மஹிகா சர்மாவை டேட் செய்துவருகிறார் ஹர்திக்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காரின் பின்னால் "தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு" என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024-ல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர்.
விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
- கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த அழைப்பிதழை வைத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகை அவர்களால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த பதிவை பகிர்ந்து திருமுருகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், "இந்த நாராயணன் போல கீழ்த்தரமானவர்களை நாம் அதிகமாக பாஜகவில்தான் பார்க்க இயலும். இவர்கள் கோமியத்தை மட்டுமே குடித்து வளர்வதால், மூளை செயலிழந்து இருப்பது இயல்பானதுதான். திருமணப்பத்திரிக்கையை பார்த்தால் திரு.செல்வப்பெருந்தகை கிருத்துவராக தெரிகிறது, ஆகவே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்பதாக 'தற்குறி' நாராயணன் எழுதுகிறார். தமிழுக்கு எதிரான 'ஸ்மார்த்த மதத்தை' சார்ந்த நாராயணின் சாணிமூளையை எளிதில் அம்பல
திரு.செல்வப்பெருந்தகையும், அவரது மனைவி, மகளின் பெயரும் கிருஸ்துவப்பெயர் அல்ல. திரு.செல்வப்பெருந்தகையின் மனைவி திருமதி உமையாள் என்பதும், மகள் செல்வி அக்ஷயா பிரியா என்பதும் கிருஸ்துவப்பெயரல்ல. நாராயணனின் சாணி மூளைக்கு புரியும்படி சொன்னால்,
'உமையாள்' என்பது முழுமையான தமிழ் தெய்வத்தின் பெயர், சைவப்பெயர். சிவனின் மனைவி பார்வதியின் மற்றுமொரு பெயராக திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. பிறகெப்படி, திரு.செல்வப்பெருந்தகையை கிருத்துவர் என முத்திரை குத்துகிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மணமகன் குடும்பத்தார் பெயரே கிருத்துவ பெயராக உள்ளது. மதம்-சாதி கடந்து ஆண்-பெண் நேசத்தை போற்றுகிற பண்பைத்தான் திரு.செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமணம் நமக்கு உறுதி செய்கிறது.
தன் மகளை திருமணம் செய்யப்போகும், மணமகன் குடும்பம் கிருத்துவராக இருப்பதற்காக திரு.செல்வப்பெருந்தகையை எவ்வாறு கிருத்துவரென முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்யச் சொல்கிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மகள் திருமணம், மருமகனின் இல்லவழியில் கிருத்துவ முறையில் நடப்பதால் செல்வப்பெருந்தகை கிருத்துவர், அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதியிழக்க வேண்டும் என நாராயணன் சொல்வது கலவர புத்தி, சங்கித்தன புத்தி.
சனாதன-சாணிகளுக்கு மதம், சாதி பாகுபாடு பார்ப்பதைத் தவிர, ஆக்கப்பூர்வமாக மூளை செயல்படாது. இவர்களை போன்ற கலவரக் கும்பல்களை குஜராத்துக்கு விரட்டுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
நாராயணன் போன்ற 'ஸ்மார்த்த' மதத்தை சார்ந்த பார்ப்பனர்கள், ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்குள் தமிழர்களுக்கு எதிராக கலவரம், கொலை, கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் என்பது வரலாறு.
செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமண விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். மணமகள் செல்வி அக்ஷயா ப்ரியா மணமகன் திரு.ஆர்ஜன்ராயர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் மொழிபோல், தமிழ்நாடு போல் அனைத்து வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். உங்களது வம்சாவழியினர், சாதி-மத-சனாதன பேதமற்ற தமிழ்நிலத்தில் வாழும் வகையில் சங்கிகளை விரட்டியடித்து, தமிழ்நாட்டை தூய்மைப்படுத்துவோம் என உறுதி கூறி வாழ்த்துகிறோம். நீங்களும் வாழ்த்துங்கள். சனாதனம் ஒழியட்டும். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் வெளியேறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.
செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.
டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.
எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.






