என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • லீக் சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தோல்வியை சந்திக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    மேலும், கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் களம் கண்டன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை பழிதீர்க்குமா அல்லது இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
    • சரத்குமார் நடித்துள்ள ஆழிப் படமும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

    அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    நிவாஸ் கே. பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின
    • 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    16.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஷால் ஜனநாயகன் திரைப்பட விவகாரம், தணிக்கை வாரியம் பற்றி கருத்து தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனக்கு கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் பற்றி தெரியாது. இதுபோன்ற பிரச்சினையின் போது ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால், இந்த வவிகாரத்தில் ஏதாவது நடந்திருக்கலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தயாரிப்பாளர் சங்கத்தை விட பெரிய அமைப்பு தணிக்கை வாரியம். கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை கட் செய்ய வேண்டும் என்பதை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட அமைப்பு முடிவு செய்கிறது. உண்மையை சொல்லப் போனால், எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. எனினும், விதிமுறைகள் என இருக்கும் போது அதற்கு ஏற்பதான் நடந்து கொள்ள வேண்டும்," என்றார். 

    • மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.
    • மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

    மதுரையில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைக்க குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

    மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.

    மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஒருவேளை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியுமா?

    தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார். 2021 தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி 52.93% வாக்குகள் பெற்று ஆர். டி. சேகர் அபார வெற்றி பெற்றார்.

    1962க்கு பிறகு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 1991, 2001, 2011,2016 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற 10 தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.

    ஆகவே திமுகவின் கோட்டையான பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சற்று சிரமம் தான் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.ஜே.-வாக இருந்து நடிகர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம், இவர் மீண்டும் வர்ணனை செய்வதை ஒட்டி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் விரைவில் ரிலீசாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
    • படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

    சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
    • சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அஜித் குமாரை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

    திரையுலகின் உச்ச நட்சத்திரம், ரேசர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜித் குமார். திரைத்துறை கடந்து, தற்போது கார் ரேசிங்கில் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள ரேசர் அஜித் குமாரை திரைப்பிரபலங்கள் நேரில் சந்தித்து கார் ரேசிங்கில் பங்கேற்று வருவதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வரிசையில், நடிகை மஞ்சு வாரியர் ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்துள்ளார். கார் பந்தயக் களத்தில் அஜித் குமாரை சந்தித்தது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ``AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்,'' என குறிப்பிட்டுள்ளார். 



    • முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.

    தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

    முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. நாளை மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாளை மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முகுல் வாஸ்னிக் மற்றும் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

    கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
    • தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது.

    கேரளாவின் 10 மாத உறுப்பு தானம் செய்தவரான அலின் ஷெரின் ஆபிரகாமை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 131வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எந்தவொரு பெற்றோருக்கும் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமி ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கம் பெற்று வருகிறது, உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்ற பலர் உள்ளனர்..." என்று அவர் கூறினார்.

    கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில் நடந்த ஒரு சாலை விபத்தை தொடர்ந்து அலின் ஷெரின் மூளைச்சாவு ஏற்பட்டது. விரைவில் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர். அவளுடைய பெற்றோர்களான அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் ஆன் ஜான், அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தானம் செய்யப்பட்டன. சிகிச்சையில் இருந்த ஆறு மாத குழந்தைக்கு கல்லீரல் கிடைத்தது. இதன் மூலம் கேரளா மாநிலத்திலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் குழந்தை என்ற பெருமையைப் பெற்றது.

    சிறுநீரகங்கள் மற்றொரு குழந்தைக்கு ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்றப்பட்டன. விரைவில், கேரள காவல்துறை 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு மரியாதை செலுத்தியது, அவரது தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. 

    ×