என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venugopal"

    • கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.க்கள் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.

    பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். அப்போது கரூர் எம்.பி. ஜோதிமணி, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்நிலையில், கரூர் பயணம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட துயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்ற செய்தியை அனுப்பி உள்ளோம். உண்மையில் முழு தமிழகமும் இந்தியாவும் வேதனையில் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் முழு நாடும் உங்களுடன் உள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தமிழக மக்களுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
    • யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    1.சந்தான கோபால கிருஷ்ணர்:- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    2.பால கிருஷ்ணன்:- தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

    3.காளிய கிருஷ்ணன்:- காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

    4.கோவர்த்தன தாரி:- கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):- வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

    6.முரளீதரன்:- இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    7.மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

    8.பார்த்தசாரதி:- அர்ஜூன னுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

    முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது. #TripleTalaq #RajyaSabha #Venugopal
    கொச்சி:

    இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் விவகாரத்து முறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு மசோதா உருவாக்கி உள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது.

    இது குறித்து கட்சியின் எம்.பி.யான வேணுகோபால், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முத்தலாக் மசோதாவை மக்களவையில் 10 எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. பல்வேறு பிரச்சினைகளில் அரசை ஆதரிக்கும் அ.தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்சிகளுடன் இணைந்து மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த மசோதாவை தற்போதைய வடிவத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்’ என்று தெரிவித்தார். முத்தலாக் மசோதாவில் கடுமையான பிரிவுகள் இருப்பதாக கூறிய வேணுகோபால் எம்.பி., சிவில் தவறை குற்றமாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்த மசோதா உதவாது என்றும் அவர் கூறினார். #TripleTalaq #RajyaSabha #Venugopal
    ×