search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defeated"

    • ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
    • ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.

    ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

    இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.

    அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். #AusOpen2019 #NaomiOsaka
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது. #AusOpen2019 #NaomiOsaka
    முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது. #TripleTalaq #RajyaSabha #Venugopal
    கொச்சி:

    இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் விவகாரத்து முறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு மசோதா உருவாக்கி உள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது.

    இது குறித்து கட்சியின் எம்.பி.யான வேணுகோபால், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முத்தலாக் மசோதாவை மக்களவையில் 10 எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. பல்வேறு பிரச்சினைகளில் அரசை ஆதரிக்கும் அ.தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்சிகளுடன் இணைந்து மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த மசோதாவை தற்போதைய வடிவத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்’ என்று தெரிவித்தார். முத்தலாக் மசோதாவில் கடுமையான பிரிவுகள் இருப்பதாக கூறிய வேணுகோபால் எம்.பி., சிவில் தவறை குற்றமாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்த மசோதா உதவாது என்றும் அவர் கூறினார். #TripleTalaq #RajyaSabha #Venugopal
    ×