என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா, இன்று பாஜகவில் அதன் மாநிலப் பிரிவுத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் இணைந்தார். அவருடன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமார் ஜோஷி, கங்கன் தாஸ், ககன் சந்திர போரா உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர்.

    பிப்.16 அன்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக போரா அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் உயர்மட்டக் குழு அவர் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராகுல் காந்தியும் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து யோசிக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாளே முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வீட்டிற்கு சென்று, பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த இவர், அசாம் மாநிலத் தலைவராக 2021 முதல் 2024 வரை பணியாற்றினார். அதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் அரசியலில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். தருண் கோகோய் முதலமைச்சராக இருந்தபோது, அரசின் செய்தித் தொடர்பாளராகவும், நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    அசாமின் தற்போதைய முதலமைச்சராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் காங்கிஸில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    • பா.ஜ.க.வின் கலவர அரசியல் ஒருபோதும் எடுபடாது.
    • சங்கிக்கூட்டத்தின் முகத்தில் மக்கள் கரி பூசுவது உறுதி

    கோவை, கருமத்தம்பட்டியில் தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எழுச்சியுடன் தொடங்கியது.

    இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

    மாநாட்டில் பேசிய உதயநிதி, "இன்றைக்கு மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் கோவையில் உங்களையெல்லம் சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் டிசம்பர் மாதம் வடக்கு மண்டல நிர்வாகிகளைச் சந்தித்தோம். அதன் பிறகு விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகளை எல்லாம் சந்தித்தோம். அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் வந்து நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னார்கள். இன்றைக்குப் பல்வேறு பணிச்சூழல் காரணமாக கழகத் தலைவர் அவர்களால் வர முடியவில்லை. அதனால் உங்களையெல்லாம் சந்திப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.

    நிச்சயம் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பேன். நம் கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் முதல்வராக வென்று இந்த மேற்கு மண்டலத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், வெற்றி விழாவில் நிச்சயமாகக் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பார். இன்றைக்குத் தலைவர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் அவரின் எண்ணம் முழுவதும் இந்த இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதுதான் தலைவர் அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பார்.

    இந்த மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இவ்வளவு சிறப்பாகக் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மண்டலப் பொறுப்பாளர் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், மாநாட்டின் வெற்றிக்காகக் கடந்த பத்து பதினைந்து நாட்களாகக் கடுமையாக உழைத்த அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து அமைப்பாளர்களுக்கும் இந்தப் பகுதியின் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களுக்கும், செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களுக்கும் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 16 கழக மாவட்டங்கள், 39 தொகுதிகளில் இருந்து சுமார் 80 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் எழுச்சியைப் பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் உறுதி, வெஸ்டிலும் தி.மு.க தான் பெஸ்ட் என்பதை இந்தக்கூட்டம் நிச்சயம் நிரூபித்துக் காட்டும். அதற்கு உங்களின் எழுச்சியே உதாரணம், சாட்சி.

    இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு பணியை இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை மாநாடு போலத் தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்குப் பல கட்சிகள் தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடிகள் இருக்கின்றன என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இப்பொழுதுதான் கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிகளுக்கு என்று இத்தனை நிர்வாகிகளை நியமனம் செய்து, தரவுகளுடன் களப்பணியில், கட்சிப்பணியில், இளைஞர் அணி பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இளைஞர் அணியில் மட்டும் ஐந்து லட்சம் நிர்வாகிகளை நாம் பெற்றிருக்கிறோம். ஐம்பது லட்சம் உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவிலேயே எந்த இயக்கத்தின் ஒரு அணிக்கும் இப்படிப்பட்ட சிறப்பு கிடையவே கிடையாது.

    நம் இளைஞர் அணியைக் கழகத்தின் இராணுவம் என்று தலைவர் சொல்வது போல ஒரு கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணமாகக் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் களப்பணிகளை, கழகப் பணிகளை, மக்கள் பணிகளைச் செய்திருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றால் நீர்நிலைகளைத் தூர்வாரியது, சிறுபான்மையினர் நலன் காக்க சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்தது, கொரோனா காலத்தில் மக்களைக் காப்பதற்கு உதவி எண் தொடங்கியது, மாணவர்களின் கல்வி உரிமையை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம், தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தொகுதிதோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், 200-க்கு அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது, வாசிப்பை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம், கழக வரலாற்றைச் சொல்கின்ற முரசொலி பாசறைப் பக்கம், கொள்கை உணர்வைக் கொண்டாட அறிவுத் திருவிழா - இப்படி எத்தனையோ பணிகளை நம் இளைஞர் அணி வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது என்றால், இங்கே வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த வெற்றியின் உழைப்புக்கு முழு காரணம்.

    மெயின் மேட்ச் விளையாடுவதற்கு முன்னால் எல்லாம் நெட்டில் பயிற்சி செய்வார்கள். கழகத்தில் பணியாற்றுவதற்கு இன்று இளைஞர் அணி ஒரு பயிற்சிக் களமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை ஏன் நான் இன்றைக்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் எல்லாம் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துத் தாய்க்கழகத்திற்குச் சென்றவர்கள். அதற்கு இந்த மேடையே ஒரு சிறந்த உதாரணம்.

    இன்றைக்கு அமைச்சராக, கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருக்கும்போது தலைவருக்குத் துணையாக இருந்தவர். அதன் பிறகு அவரும் இளைஞர் அணியின் செயலாளராகப் பணியாற்றியவர். அதேமாதிரி நம் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர். நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள், கோவை மாநகர பொறுப்பாளர் அன்புச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜேஷ் இப்படி இங்கே இருக்கக்கூடிய ஏராளமானவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்றைக்குத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரையும், முதலமைச்சரையும் கொடுத்தது கழக இளைஞர் அணி என்று சொன்னால் அதுதான் இளைஞர் அணியின் பெருமை.

    அப்படிப்பட்ட இளைஞர் அணி தந்த நம் தலைவர் அவர்கள் இன்றைக்கு ஆட்சி, அரசியல் என இரண்டிலுமே இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்கு இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு ஜனநாயகப் போரை நம் தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலத் தலைவர்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் நம் தலைவர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

    ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். 2021-இல் ஆட்சிக்கு வந்ததும் நம் தலைவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். அடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்காக புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம். 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குகின்ற திட்டம். இவை அனைத்தையும் விட இன்றைக்கு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக இந்த மாதம் நம் முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு சர்ப்ரைஸ் (Surprise) கொடுத்தார். எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஓர் ஷாக்கை (Shock) கொடுத்தார். மகளிரின் வங்கிக் கணக்கில் காலையில் 6 மணிக்கு எழுந்து பார்த்தால் திடீரென்று 5,000 ரூபாய் வரவு வைத்துவிட்டார். இது மகளிருக்கு மிகப்பெரிய ஆச்சரியம், அடிமைகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. என்ன காரணம்? பா.ஜ.க, அதன் அடிமைக் கூட்டம், பாசிசக் கூட்டம் சட்டமன்றத் தேர்தல் வருகிறது, அதைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு சென்று எப்படியாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று முயற்சி செய்தார்கள். நம் தலைவர் 'என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுக்கக்கூடிய 1,000 ரூபாயை நீ தடுக்க முயற்சி செய்கிறாயா? இதோ நான் கொடுக்கிறேன் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய்' என்று கொடுத்திருக்கிறார் நம் தலைவர் முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமல்லாமல் கோடைக்கால சிறப்பு நிதியாக 2,000 என்று 5,000 ரூபாய் சேர்த்துத் கொடுத்திருக்கிறார்.

    இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடனே, நம் தலைவர் முதலமைச்சர் ஆனவுடன் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பேன் என்கின்ற வாக்குறுதியையும் இன்றைக்குக் கொடுத்திருக்கிறார். இதுதான் நம் ஆட்சிக்கும் சங்கிக் கூட்டத்திற்கும் இருக்கக்கூடிய ஒரு வித்தியாசம்.

    அதிலும் தலைவர் 7 மணிக்கு வரவு வைத்தார். நம் தமிழ்நாட்டு மகளிர் 9 மணிக்கெல்லாம் வங்கிக்குப் சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு மீது தமிழ்நாட்டு மக்களுக்கு, மகளிருக்கு பயம். குறிப்பாக நீங்கள் ஒன்று நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சியில் வருவார். அவர் எப்போது தொலைக்காட்சியில் வந்தாலும், டிவியில் வந்தாலும் மக்கள் ஒரு விதமான பயத்திற்குச் சென்றுவிடுவார்கள். இந்த முறை என்ன சொல்லப் போகிறாரோ என்று மக்கள் பயந்துவிடுவார்கள்.

    ஏனென்றால் 2020-இல் உங்களுக்கு ஞாபகம் இருக்கும், ஒரு நாள் திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி 'கொரோனா வரப்போகிறது, அதைச் சமாளிப்பதற்கு ஒரே வழிதான், எல்லாரும் வீட்டுக்குள் ஒரு மாதம் ஒளிந்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இன்னொன்று ஞாபகம் இருக்கும், 2016-ஆம் ஆண்டு இதே மாதிரி திடீரென்று டிவியில் வந்தார். 'பண மதிப்பிழப்பு' என்று சொல்லி எல்லாரிடமும் இருக்கின்ற 500 ரூபாய் 1,000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்றைக்கு எவ்வளவு மக்கள், நூற்றுக்கணக்கான மக்கள் வெயிலில் நின்று இறந்தார்கள். இதுதான் நம் தலைவர் தொலைக்காட்சியில் வந்தால் மக்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். இதுதான் நம் தலைவருக்கும் ஒன்றிய பிரதமருக்குமான வித்தியாசம்.

    அதுமட்டுமல்லாமல் மக்களிடம் இருப்பதைப் பிடுங்குகின்ற ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சி. மக்களுக்கு எப்போதுமே கொடுக்கின்ற ஆட்சி நம் திராவிட மாடல் ஆட்சி. இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதனால்தான் இன்றைக்கு நம் முதலமைச்சர், நம் தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் இடைஞ்சல் செய்யலாம் என்று இன்றைக்குத் திட்டம் போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மொழியுரிமை, கல்வியுரிமை, நிதியுரிமை என்று ஒவ்வொரு உரிமையையும் பறிக்கப் பார்க்கிறார்கள். 'புதிய கல்விக் கொள்கை' என்று கொண்டு வந்து தமிழ்நாட்டிற்குள் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நுழைக்கப் பார்க்கிறார்கள். இதுவரைக்கும் தமிழ்நாடு பக்கமே எட்டிப் பார்க்காத திரு. அமித்ஷா அவர்களும் திரு. மோடி அவர்களும் தேர்தல் வருகிறது என்ற உடனே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் வருவார்கள், தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வராது, எந்தத் திட்டமும் வராது.

    சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அந்தத் பட்ஜெட்டை பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்னாலேயே தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராட்டுக் குரல். யாரு? எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள். அதனால்தான் 'பட்ஜெட் சிறப்பு' என்று 'டயர் புகழ்' பழனிசாமி இன்றைக்கு பயர் விட்டிருக்கிறார். அதனால்தான் அடிக்கடி சொல்வேன், அரசியலில் நாம் பல முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம், முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்போம், ஆனால் இன்றைக்கு ஒரு முரட்டு அடிமையாகத் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் திரு. மோடி அவர்களுக்கு மாறியிருக்கிறார்.

    நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், மூன்று நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கிறார். திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படம். பார்த்துவிட்டு அப்படியே கண்கலங்குகிறார், அழுகிறார். நான் யோசித்துப் பார்த்தேன், இந்நேரம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இவரைப் பார்த்து 'என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டீர்களே' என்று பார்த்து எப்படி அழுதிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். 2019-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு அடகு வைத்தார். 2021-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு குத்தகைக்கு விட்டார். இப்போது 2026-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு மொத்தமாக விற்றுவிட்டார். தன் சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க-வை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறார்.

    ஆனால் நம் தலைவர் அவர்கள் நம் தமிழ்நாட்டை அறிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் சங்கிகளுக்குத் தமிழ்நாட்டைப் பார்த்தாலே எப்போதுமே ஒரு வயிற்றெரிச்சல். ஒரு இயக்கத்தை எப்படியாவது மிரட்டலாம், உருட்டலாம் என்று ஈடி (ED), சி.பி.ஐ (CBI) இப்படிப் பல்வேறு அமைப்புகளை வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நம் தலைவர் அவர்கள் நேற்று மதுரையில் தெளிவாக ஒரு பதில் சொன்னார்கள். 'என்ன வழக்குதானே போடுவீர்கள்? தி.மு.க உடன்பிறப்புகள் பார்க்காத வழக்குகளா? மொழிப்போரில் இராணுவத்தையே எதிர்த்து நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மிசாவை பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் தலைவர் அவர்கள். உயிரே போனாலும் எங்களின் சுயமரியாதையை நாங்கள் என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் அடிக்கடி நான் சொல்வேன், நாங்கள் ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடி அல்ல, மோடியின் டாடி வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

    இந்த லட்சணத்தில் திரு. மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பேசுகிறார், என்ன? டபிள் என்ஜின் சர்கார் வேண்டுமாம். தமிழ்நாட்டின் இன்ஜின் பலமான ஒரு திராவிட மாடல் என்ஜின். இது எப்போதுமே தனிப் பாதையில் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிற இயந்திரம். நம்மிடம் இருக்கின்ற என்ஜின் வளர்ச்சி என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் மேம்பாட்டு என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் முற்போக்கு என்ஜின். இன்றைக்கு மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தைத் திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார்.

    'மகளிர் எல்லாரும் பேருந்தில் போய்விடுகிறார்களாம், அதனால் மெட்ரோவுக்குக் கூட்டம் வருவதில்லை என்று சொல்கிறார் திரு. மோடி அவர்கள். ஆனால் அதே மெட்ரோவுக்கு நாம் நிதி கேட்கும்போது கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் நிதி கேட்டோம், அந்த மெட்ரோ நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதில் மகளிர் விடியல் பயணத்தை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒரு பழமொழி, 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்று சொல்வார்கள். அது மாதிரி இன்றைக்கு மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிடைத்திருக்கிறார்.

    இன்றைக்கு பா.ஜ.க-வின் நோக்கம் மக்களை எப்படியாவது தொந்தரவு செய்து வெறுப்பைப் பரப்ப வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு மாநிலமாக வெறுப்பு அரசியலைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாலாட்டலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்ற மகத்தான தலைவர் இருக்கின்ற வரைக்கும் பா.ஜ.க-வின் கலவர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உள்ளே நுழைய விடமாட்டார்கள். சென்ற வாரம் காரைக்காலுக்கு வந்த திரு. அமித்ஷா அவர்கள், ஒரு சுவரில் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். நீங்கள் எவ்வளவுதான் பெயிண்ட் அடித்தாலும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தின் முகத்தில் கரியைத் தான் பூசுவார்கள்.

    இப்போது நடப்பது எட்டு கோடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு போர். பாசிஸ்டுகள், அடிமைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டை எப்படியாவது சீரழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் கைகளில் இருக்கிறது. நிர்வாகிகளுக்கெல்லாம் ஒரு அன்பு வேண்டுகோள். உங்களின் வீட்டை முதலில் அரசியல் படுத்துங்கள். தினமும் உங்கள் வீட்டில் இருப்பவர்களோடு அரசியல் பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். டெல்லி பாசிஸ்டுகளும் உள்ளூர் அடிமைகளும் தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள். உங்களின் வாழ்க்கையை முதலில் நீங்கள் நன்றாக உறுதியாகப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பம் மிக மிக முக்கியம். அதைவிட முக்கியம் உங்களின் அடுத்த தலைமுறையினர். அதனால்தான் நாம் இத்தனை விஷயங்களையும் போராடிச் செய்துகொண்டு இருக்கிறோம்.

    வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடாகப் போய்க் கழகத்தின் கொள்கைகளையும் அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுங்கள்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் வெறும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. இந்த 50 நாட்களுக்கு நீங்கள் கொடுக்கப்போகின்ற உங்களின் உழைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டைக் காப்பாற்றப்போகிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்களின் பணிகளைச் செய்யுங்கள்.

    இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கின்ற ஒரு ஜனநாயகப் போர். இந்தப் போரில் தமிழ்நாடு நிச்சயம் வெற்றிப் பெற்றுக் காட்டும். டெல்லிக்கு என்றைக்கும் அவுட் ஆப் கண்ட்ரோல் தமிழ்நாடு என்பதைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம். அதற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் உழைப்பு மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

    நான் அடிக்கடி சொல்வது உண்டு. இளைஞர் அணியில் சரியாக உழைத்தீர்கள் என்றால் உங்களுக்கான அங்கீகாரத்தை நம் தலைவர் அவர்கள் நிச்சயம் சரியான நேரத்தில் கொடுப்பார். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தலைவரிடம் என் வேண்டுகோளைப் பலமுறை வைத்திருந்தேன். நிச்சயம் தலைவர் அவர்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் உற்சாகமாக வேலை செய்யுங்கள். இன்றைக்குச் சில பேர் நம் இயக்கத்தை அழித்துவிடலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். நம்மை யாராலும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்.

    பேரறிஞர் அண்ணா சொன்னது: "எங்களை அழித்துப் புதைக்கலாம் என்று நீங்கள் நான்கு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் ஆறு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக ஆறு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் எட்டு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக எட்டு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். அதற்குள் நாங்கள் பதினாறு அடி வளர்ந்திருப்போம். நீங்கள் எங்களை வெட்ட நினைத்தீர்கள் என்றால் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம்." என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் கழக இளைஞர் அணியைப் பார்த்துச் சொன்னார். அதேபோல உங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் இத்தனை லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கின்ற வரை நாங்கள் வளர்ந்துகொண்டே தான் இருப்போமே தவிர உங்களால் எங்களை அழிக்கவே முடியாது. இங்கே கூடியிருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் சார்பாக நான் மீண்டும் சொல்கிறேன்.

    எங்களின் உதயசூரியன் என்பது வெறும் ஏதோ சுவரில் வரைந்து வைக்கின்ற சின்னம் கிடையாது. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இரத்தத்திலும் ஊறிப்போன சின்னம் உதயசூரியன். அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். கலைஞர் கட்டி காத்த சின்னம் உதயசூரியன். தலைவர் அவர்களால் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சின்னம் உதயசூரியன். உயிர் போனாலும் போகுமே தவிர உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது. எத்தனை பேர் வந்தாலும் யார் எங்களை எதிர்த்து நின்றாலும் களத்தில் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது உதயசூரியன்தான்.

    நம் தலைவர் அவர்கள் நமக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார்கள் 'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' என்று. நம் இளைஞர் அணி தம்பிமார்கள் அடுத்த 50 நாட்கள் களத்தில் இறங்கிப் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள் என்றால், நம் பணிகளைச் சரியாகச் செய்தீர்கள் என்றால் 200 அல்ல, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

    எனவே அந்த இலக்கை மனதில் வைத்துக்கொண்டு ராக்கெட் வேகத்தில் நம் வேலைகளை நாம் செய்ய வேண்டும். ஆகவே 10 தோல்வி பழனிசாமியையும் மொத்த தோல்வி மோடியையும் மீண்டும் நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். கழக அணியின் வெற்றிக் கணக்கு இந்த மேற்கு மண்டலத்திலிருந்து தொடங்க வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இரவு பகல் பார்க்காமல் பணியாற்றுங்கள். மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களிடம் இருக்கின்ற உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது நம் வெற்றி நிச்சயம் உறுதி என்பதை இங்கே சொல்லிக்கொள்கின்றேன்.

    சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணியின் பங்கு மிக மிக முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். உங்கள் அத்தனை பேருடைய பணிகளும் சிறக்கட்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்வேறு தூரங்களில் இருந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் தயவுசெய்து கேட்டுக்கொள்வதெல்லாம் திரும்பிப் போகும்போது மிகுந்த பாதுகாப்போடு கவனமாக உங்களின் பயணத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பிரச்சாரத்திலும் கழகத்தின் வெற்றி விழாவிலும் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கிறேன். வெல்வோம் ஒன்றாக, தலைவர் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்" என்று தெரிவித்தார்.

    • டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
    • உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்தார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாஷிங்டனில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவிருந்த முக்கியக் கூட்டம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர்
    • பாதிக்கப்பட்ட பெண் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    ஹரியானாவின் குருகிராமில் தன்னுடன்  லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காதலனே சானிடைசரை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர். இவர் ஹரியானாவின் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    இதனிடையே சிவம் என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவம் டெல்லியின் நரேலாவைச் சேர்ந்தவர். இந்த பழக்கம் தொடர நாளடைவில் இருவரும் செல்ஃபோன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி குருகிராமில் இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துவந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்.16 அன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டார். 

    இதனையடுத்து போலீசார் 19 வயது இளைஞர் சிவமை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது கைதான சிவம் மீது 115 (2) (நோக்கத்துடன் காயப்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்), 127 (7) (சிறைவைத்தல்), 69 (திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்து கொள்ளுதல்), 351 (2)(மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பொறுத்து தேவை என்றால் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளனர். 

    • விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி கொல்லமங்கலம் பகுதியில் நாளை நடைபெற உள்ளது.
    • QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூரில் நாளை விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

    காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

    பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.

    காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.

    QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • லீக் சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தோல்வியை சந்திக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    மேலும், கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் களம் கண்டன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை பழிதீர்க்குமா அல்லது இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
    • சரத்குமார் நடித்துள்ள ஆழிப் படமும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

    அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    நிவாஸ் கே. பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின
    • 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    16.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஷால் ஜனநாயகன் திரைப்பட விவகாரம், தணிக்கை வாரியம் பற்றி கருத்து தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனக்கு கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் பற்றி தெரியாது. இதுபோன்ற பிரச்சினையின் போது ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால், இந்த வவிகாரத்தில் ஏதாவது நடந்திருக்கலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தயாரிப்பாளர் சங்கத்தை விட பெரிய அமைப்பு தணிக்கை வாரியம். கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை கட் செய்ய வேண்டும் என்பதை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட அமைப்பு முடிவு செய்கிறது. உண்மையை சொல்லப் போனால், எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. எனினும், விதிமுறைகள் என இருக்கும் போது அதற்கு ஏற்பதான் நடந்து கொள்ள வேண்டும்," என்றார். 

    • மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.
    • மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

    மதுரையில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைக்க குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

    மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.

    மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஒருவேளை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியுமா?

    தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார். 2021 தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி 52.93% வாக்குகள் பெற்று ஆர். டி. சேகர் அபார வெற்றி பெற்றார்.

    1962க்கு பிறகு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 1991, 2001, 2011,2016 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற 10 தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.

    ஆகவே திமுகவின் கோட்டையான பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சற்று சிரமம் தான் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.ஜே.-வாக இருந்து நடிகர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம், இவர் மீண்டும் வர்ணனை செய்வதை ஒட்டி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் விரைவில் ரிலீசாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    ×