search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்ஸ்டாகிராம் காதல் உயிரை பறித்தது: வாலிபரை 50 இடங்களில் கத்தியால் குத்திக்கொன்ற கும்பல்
    X

    இன்ஸ்டாகிராம் காதல் உயிரை பறித்தது: வாலிபரை 50 இடங்களில் கத்தியால் குத்திக்கொன்ற கும்பல்

    • வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.
    • பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு பிளக்ஸ் தயாரிப்பு கடையில் வேலை பார்த்து வந்தவர் மாஹிர் என்கிற இம்ரான் ( வயது 18) இவருக்கும் 21 வயது பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.

    இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணுக்கு அர்மான் கான் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக நட்பு உருவானது. சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்தனர். அந்த சமயம் அப்பெண் வீடியோ காலில் மாஹிருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததை அம்ரான்கான் பார்த்தார். இது தொடர்பாக அவர் அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அவர் தான் மாஹிரை விரும்புவதாக தெரிவித்தார். இது அம்ரான்கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்த அம்ரான்கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    நேற்று அவர் மாஹிரை தொடர்பு கொண்டு காதலியின் செல்போனை திருப்பி தருகிறேன் என்றும் அதனால் வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.

    இதையடுத்து மாஹிர் அந்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு குறுகிய சந்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அர்மான்கான் மாஹிரை சரமாரியாக கத்தியால் குத்தினார். 3 பேரும் சேர்ந்து அவரை 50 தடவை கத்தியால் குத்தினார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இக்கொலை தொடர்பாக அர்மான்கான் மற்றும் அவரது நண்பர்கள் பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×