என் மலர்tooltip icon

    இந்தியா

    • பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு இன்று பீகாரில் பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், அரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலைத் திருடிவிட்டனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.

    மக்களவை, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் திருடியதாக நாங்கள் ஆதாரங்களுடன் கூறினோம், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.

    கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை. பீகார் ஜென் z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள்.

    இந்த வாக்குத் திருட்டு அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உங்கள் நிலத்தை வழங்கவும், உங்கள் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கவும் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது.

    நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z  இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

    நேற்று முன் தினம் அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
    • இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியை குறை கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

    மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.  

    • பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

    இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் பெற, 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யும் பக்தர்களில் முதல் 750 பேருக்கு மட்டும் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதற்கான டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும் என்பதால் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்க பிரதட்சணம் செய்ய டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 61,718 பேர் தரிசனம் செய்தனர். 21,937 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார்.
    • வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

    மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று காலை ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் ஐ எம் சாரி ஸ்ரீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.

    பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பிரதமர் மோடி 'வந்தே மாதரம்' பாடலின் நினைவு தபால்தலை-நாணயத்தை வெளியிட்டார்.
    • இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் "வந்தே மாதரம்" பாடல் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    'வந்தே மாதரம்' பாடலை மேற்கு வங்காள கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றியுள்ளார். இந்த பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது.

    'வந்தே மாதரம்' பாடல் தேசத்தை தட்டி எழுப்பிய ஒரு உணர்வுப்பூர்வமான கீதம் ஆகும். 'வந்தே மாதரம்' தேசிய பாடலின் 150 ஆண்டு கள் கொண்டாட்டம் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.

    இதில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி, வந்தே மாதரம் ஒற்றை நாதம், ஓராயிரம் வடிவங்கள் சிறப்பு பொருட் காட்சி, வந்தே மாதரம் வர லாறு குறித்த குறும்படம், கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியீட்டு விழா ஆகியவையும் நடந்தது.

    இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் கஜேந்தி ரசிங் ஷெகாவத், டெல்லி துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்ப தற்காக பிரதமர் மோடி காலை 9.30 மணியளவில் வந்தார். அங்கு நடைபெற்று வரும் பொருட்காட்சியில் வந்தே மாதரம் பாடலின் இசைத் தட்டுகள்இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்தே மாதரம் பாடல் என்னென்ன இசைத் தட்டு வடிவங்களில் கிடைத்தன என்பது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதில் பலவிதமான இசைக் தட்டுகளும் இடம் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் பிரதமர் மோடி ஒவ்வொன்றாக பார்த்து அதனை பற்றி அறிந்து கொண்டார்.

    மேலும், வந்தே மாதரம் பாடல் கொண்ட இசைத் தட்டு ஒன்றை கிராம போன் மூலம் பிரதமர் மோடி ஒலிக்க விட்டார். கண்காட்சி யை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி காலை 9.50 மணியளவில் வந்தார். பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் 'வந்தே மாதரம்' பாடலை பாடகிகள் உணர்வுப்பூர்வமாக பாடினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருமே எழுந்து நின்று 'வந்தே மாதரம்' பாடலை பாடினார்கள். பாடல் முடிந்ததும் 'வந்தே மாதரம்' என அனைவரும் குரல் எழுப்பினார்கள்.

    அதன் பிறகு விழாவில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தெடர்ந்து ஒரு வருடம் கொண்டாடப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் "வந்தே மாதரம்" பாடலின் நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு களை கொண்டாடும் வகையில் vandemataram 150.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பொது மக்கள் 'வந்தே மாதரம்' பாடலை தங்களின் தனித்து வமான குரலில் பாடி பதி வேற்றம் செய்வது தொடர் பான நடைமுறைகள் விளக் கப்பட்டன. பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் தனித்துவ தத்தை விளக்கும் குறும் படம் ஒன்றும் வெளியிடப் பட்டது.

    அதனைத் தொடர்ந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் இசையமைக்க பாடகர்கள் மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் முழு தொகுப்பையும் பாடினார்கள். அதை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கான எழுச்சி யூட்டிய பாடல்களில் பிர தானமானது 'வந்தே மாதரம்' பாடலாகும். 'வந்தே மாதரம்' ஒரு பாடல் மட்டு மல்ல, அது ஒரு மந்திரமாகும். 'வந்தே மாதரம்' பாடல் இந்தியர்களுக்கு ஊக்க மளிக்கிறது. இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத இலக்குகள் என்று எதுவும் இல்லை.

    வந்தே மாதரம் இந்தியா வின் சுதந்திர போராட்டத் தின் குரலாக இருந்தது. வந்தே மாதரம் இந்தியாவின் ஒற்றுமையின் சின்னமாகும். ஏனென்றால் அது தலை முறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் எனது இந்திய சகோதர-சகோதரி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடும் வேளை யில் இது நமக்கு புதிய உத்வேகத்தை தருகிறது.

    மேலும், நாட்டு மக்களுக்கும் புதிய ஆற்றலை அளிக்கிறது. 'வந்தே மாதரத்தின் முக்கியமான உணர்வு பாரதம். இந்தியா ஒரு தேசமாக உருவானது. இந்தியாவின் கருத்துருவிற்கும், நாட்டின் சுதந்திரத்திற்கான ஏக்கத்துக்கும் பின்னால் உள்ள கருத்தியல் சக்தியை இந்த பாடல் உள்ளடக்கியுள்ளது.

    இதயத்தின் ஆழத்தில் இருந்தும், உணர்ச்சிகளில் இருந்தும் 'வந்தே மாதரம்' போன்ற ஒரு பாடல் வெளிப்படுகிறது. அடிமைத்தனத்தின் அந்த கால கட்டத்தில் 'வந்தே மாதரம்' பாடல் இந்திய சுதந்திரத்தின் பிரகடனத்தை பற்றியதாக மாறியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

    இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஷியோபூர் மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 



    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.

    விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு உதவிகளை வழங்கின. மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தின.

    நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

    S.I.R. நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது. பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பீகார் S.I.R. தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது. இதனை தொடர்ந்து, தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில், S.I.R. நடைமுறைக்கு எதிராக தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கு அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார்.

    மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு தரவுகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

    தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்றுமுன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இதனிடையே, நேற்று நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா டெல்லி தலைவர் சந்தோஷ் ஓஹா என டெல்லியை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி தேர்தலில் வாக்களித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்பொழுது பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    அனைவருக்கும் தெரிந்த நிர்வாகிகளே இவ்வளவு தைரியமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்றால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படி வாக்களித்து இருப்பார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி சந்தேகத்தை எழுப்பி உள்ளது. 

    • பிரதமர் மோடி மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
    • பா.ஜனதாவிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்குப் பிறகு, மரியாதை மற்றும் அன்பு நிறைந்த இடத்தில் நான் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி தான்.

    அவர் இருக்கும் வரை, பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    நான் என் எதிரிகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை, என் சொந்த பலத்திலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை நாங்கள் 100 சதவீத வெற்றி விகிதத்தை அடைவோம். என்று நான் நம்புகிறேன். 5 கட்சிகளின் இந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி.

    ஜனதா தளம் (ஐக்கிய) வாக்காளர் தளத்திற்குள் வளர்ந்து வருகிறது. அவர்களின் ஆதரவை பெற்று உள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

    ராம் விலாஸ் பாஸ்வான் அரசியலில் இருக்கும்போது தனது மக்களுக்கும் அவரது பிராந்தியத்திற்கும் பாடுபட நேர்மையான முயற்சியை மேற்கொண்டார். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற முறைகேடுகளை தனது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது. மேலும் இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    "ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    எனவே ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதை அறிய இந்த விவகாரம் விசாரிக்கப்படும், உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

    இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்,"

    நில ஒப்பந்தத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் மந்திரி நிச்சயமாக இதனை விசாரிக்க வேண்டும்.

    என்னுடைய உறவினர்களுக்காக சலுகைகளை பெறுவதற்காக நான் எந்த அதிகாரியையும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை" என்றார்.

    ×