என் மலர்tooltip icon

    இந்தியா

    • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
    • அஜித் பவார் மரணத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 3 பேரும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இது தொரபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அஜித் பவாரின் திடீர் மறைவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்! மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும் அவருடன் பயணித்தவர்களும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு கோரமான விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர், இதனால் நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்.

    அவரது சித்தப்பாவான சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் நண்பர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

    இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.

    இந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். துணை முதல்-மந்திரிகளாக அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிறிய வகை விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அஜித்பவாரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.

    அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று பாராமதி தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் (வி.டி-எஸ்.எஸ்.கே.) பாராமதிக்கு புறப்பட்டார். அவருடன் 2 பாதுகாப்பு அதிகாரிகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்றனர்.

    இன்று காலை 8.48 மணியளவில் அந்த சிறிய ரக விமானத்தை விமானி பாராமதி விமான நிலையத்தில் 11-வது ஓடுபாதையில் தரை இறக்க முயற்சித்தார். அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் மோதி 2 ஆக உடைந்து நொறுங்கியது. விமானம் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து அஜித்பவார் உள்பட 6 பேரையும் மீட்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித் பவார் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதே போல் அஜித்பவாருடன் சென்ற 5 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். 

    • வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

    சண்டிகரில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

    • அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
    • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் பவாருடன் எடுத்து புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அஜித் பவார் அவர்கள் அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பைக் கொண்ட ஒரு மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். மகாராஷ்டிர மக்களின் சேவைக்கு முன்னணியில் நின்று உழைக்கும் ஒருவராக அவர் பரவலாக மதிக்கப்பட்டார். நிர்வாக விஷயங்களில் அவர் கொண்டிருந்த புரிதலும், ஏழை எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது பேரார்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • பாராமதி விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
    • தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    பாராமதி விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

    இன்று காலை 8.45 மணிக்கு அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
    • பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

    பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்த சிதறி பற்றி எரிவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • வருகிற 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் தொடங்குகிறது.

    முதல் நாளான இன்று, பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

    வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுநர் மாளிகை நோக்கி நடந்த பேரணியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதலவர் டி.கே. சிவக்குமார் கலந்துகொண்டனர்.
    • மத்திய அரசு இத்திட்டத்திற்கு 90% நிதி வழங்கிய நிலையில், தற்போது புதிய முறையின்படி மாநிலங்கள் 40% நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டதில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இதை கண்டித்து நேற்று கர்நாடகாவில் ஆளுநர் மாளிகை நோக்கி நடந்த பேரணியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதலவர் டி.கே. சிவக்குமார் கலந்துகொண்டனர்.

    அப்போது, 6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூடும் அரசின் முடிவை அவர்கள் அறிவித்தனர்.

    மத்திய அரசு இத்திட்டத்திற்கு 90% நிதி வழங்கிய நிலையில், தற்போது புதிய முறையின்படி மாநிலங்கள் 40% நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி காந்தியின் பாரம்பரியத்தை அழிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விவாதத்திற்காகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.  

    • இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது
    • ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோசமான நிலையை எட்டியுள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    1922 முதல் 2023 வரையிலான இந்தியாவின் வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு குறித்த ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், "மோடியின் பில்லியனர் ராஜ் ஆட்சி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை விட அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக உள்ளது.

    கடந்த பத்தாண்டுகளில் சாதாரண குடிமக்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் தேக்கமடைந்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    அரசு தனக்குச் சாதகமற்ற பொருளாதாரத் தரவுகளை மறைக்கிறது. 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது மற்றும் நுகர்வோர் செலவின ஆய்வுகளை வெளியிடாதது போன்றவை மிகப்பெரிய கொள்கை தோல்வி" என்று தெரிவித்துள்ளார். 

    • அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
    • அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார். 

    அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.  

    • மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.
    • ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் உள்ளன.

    இந்தியாவின் 77வது குடியரசு தினம் கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்துக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.

    இரு நாடுகளின் மக்கள் நலனுக்காகவும், மாலத்தீவு மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

    ஆனால், அந்தப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 'Grok' ஏஐ, "மாலத்தீவு அரசு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டது" என்றும், குடியரசு தினத்திற்கு பதிலாக சுதந்திர தினம் என்றும் தவறாக மொழிபெயர்த்தது.

    ஏஐ கருவிகளை முழுமையாக நம்புவது ஆபத்தானது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

    ×