என் மலர்
தேர்தல் செய்திகள்
தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.
அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.
ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
சென்னை:
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி.க்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது.
இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.
இவ்வாறு அவர் சர்ச்சையாக கூறியுள்ளார். #SubramanianSwamy #BJP
விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்லுவார், எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது. என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் அடக்கியது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது கூட்டணி கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் சரி நாடும் நமதே 40-ம் நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி மக்களை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் கூலிப்படை போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. மோடியின் பெயரை சொன்னாலே மக்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விளாத்தி குளம்எட்டயபுரம் ரோட்டில் தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். #kanimozhi
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இதனால் பறக்கும்படை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பஸ்களிலும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு சிலர் சைக்கிள்களிலும் பணத்தை பைகளில் போட்டு தொங்க விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்று பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களை பிடிக்கவும் போலீசார் இப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் ரோட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சிட்டி டவர் ஓட்டல் அருகில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் மதியழகன், பரமசிவம் ஆகிய இருவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பூக்கடை போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் உடலில் எதையோ பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களது சட்டையை கழற்றி சோதனை செய்தனர். அப்போது 4 பேரும் தங்களது உடலில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

4 பேரும் பணத்தை தனித்தனியாக பிரித்து தங்களது சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்துள்ளனர். இந்த பணம் எதற்காக எடுத்து வரப்பட்டது? யாருடைய பணம்? என்பது தெரியவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.1.36 கோடியை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் செலவுக்காக இந்த பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
சென்னை திருநீர்மலை பகுதியில் பறக்கும்படை அதிகாரி கவிதா நடத்திய சோதனையில் ரூ.72 ஆயிரம் பணம் பிடிபட்டது. சந்திரமோகன் என்பவரின் காரில் நடத்திய சோதனையில்தான் இந்த பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls #ElectionFlyingSquad
லக்னோ:
உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்குகளை கடைப்பிடித்தார்கள். இதனால்தான் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தது.
அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவரான சாமிபிட்ராடோ இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் வெறுப்பாக பார்க்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இது போன்ற நபர்களால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்படுகிறது. பொறுப்பற்ற முறையில் அவருடைய நடவடிக்கை உள்ளது. அவர் பயங்கரவாதி மவுத் அசாரை பாகிஸ்தானில் வைத்து சந்தித்து உள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நபராக சாம்பிட்ராடோ திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறினார். #LSPolls #YogiAdityanath
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாராளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி வலிமையான, எளிமையான, தூய்மையான பிரதமர். பயங்கரவாதத்தை வேரறுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மன்மோகன்சிங் ஆட்சியின்போது மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணியாக இருந்தது. எதிர்க்கட்சியே இல்லாத நிலையை இந்த கூட்டணி உருவாக்கியது. இந்த கூட்டணி தொடர வேண்டும்.
விஜயகாந்த் தேசப்பற்று மிக்கவர். அவருடைய படத்தில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரை போல அவரும் சாமானிய வேட்பாளரைத்தான் விருதுநகர் தொகுதிக்கு அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்தாகூர் போட்டியிடுகிறார். அவர் பணக்காரர். சாமானியர்கள் சாம்ராஜ்யத்தை சரித்ததாக வரலாறு உண்டு.
எளிமையான அழகர் சாமி இந்த தேர்தலில் மாணிக் தாகூரை தோற்கடிப்பார். மாணிக்தாகூர் இங்கு ஏன் போட்டியிடுகிறார்? உ.பி.யில் போய் நிற்க வேண்டியதுதானே. மாணிக் தாகூரை காங்கிரஸ்காரர்களே தோற்கடித்து விடுவார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் கந்துவட்டிக்காரர். ஓட்டுக்கு பணம் கொடுப்பார். தேர்தலில் தோற்றுவிட்டால் மீண்டும் வாக்காளர்கள் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை கேட்பார். அந்த பணத்தை வட்டி போட்டு வசூலிப்பார்.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
மாணிக்தாகூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் வடமாநில பெயர் போல இருப்பதால் உ.பி.க்கு செல்ல வேண்டியதுதானே என்று அமைச்சர் பேசியுள்ளார். வேட்பாளரை அமைச்சர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

திமுகவின் கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்கும். தேர்தலை நடத்த சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், அதற்கான காரணத்தை கேட்டு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என தெரிகிறது. #LSPolls #TNByelection #DMK
சீர்காழி:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.
பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.
இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.
பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.
இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LSPolls #ADMK
கும்பகோணம்:
அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.
அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
பொன்னேரி:
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் நிலையான, வலுவான மோடியின் ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் வருவதில்லை என்று பொய்யான தகவலை மு.க. ஸ்டாலின் பரப்பி வருகிறார்.
தமிழக நலனுக்காக அ.தி.மு.க. அமைத்த மெகா கூட்டணியில் விருப்பப்பட்டு பா.ம.க., தே.மு.தி.க. தா.மா.க. போன்ற கட்சிகள் சேர்ந்துள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களை தரமற்ற முறையில் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இந்த திமிர் பேச்சை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை முத்தானது. ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யானவை. ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-
புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தால் எப்படி கூட்டணி அமைப்பாரோ அது போல ஒருமித்த கருத்துடைய கூட்டணியை அமைத்து இருக்கிறோம். நம்முடைய மெகா கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறாமை படுகிறார். கூட்டணி வைப்பது கட்சிகளுடைய விருப்பம். ஓவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தந்த கட்சியின் விருப்பத்தின்படிதான் கூட்டணி வைப்பார்கள். தி.மு.க.வுடனா கூட்டணி வைப்பார்கள்?
கூட்டணி வைப்பதை எல்லாம் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தி.மு.க கூட்டணி வெத்து வேட்டு கூட்டணி. மக்கள் பலமில்லாத கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத கூட்டணி. எனவே நம்மை பற்றி விமர்சனம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி. எங்களை பற்றி எந்த விமர்சனமும் செய்திட தி.மு.க. தலைவருக்கு எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami #ADMK
திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று திருச்சி தொகுதியில் போட்டியிட அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக இன்று காலை ரெயில் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி ஜங்சனுக்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தனது அரசியல் வளர்ச்சியை தடுத்தது ப.சிதம்பரம் தான் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியதும் ஏற்கத்தக்கதல்ல. எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #congress #Thirunavukkarasar #KartiChidambaram






