என் மலர்
திருச்சிராப்பள்ளி
- ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு.
- தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
திருச்சி:
திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் எனும் தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நானும் திருமாவளவனும் எப்போதும் தமிழினத்தின் உரிமைக்கு வலு சேர்க்கிற அடிப்படையில் தான் இணைந்திருக்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகளும்.
சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டுமானால் ஜனநாயகம் வெல்ல வேண்டும்.
இந்தியாவின் ஜனநாயகத்தை, பன்முகத் தன்மையை, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
இதுதான் நமது இலக்கு. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. பாராளுமன்ற நடவடிக்கையே இருக்காது. ஏன்? மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக மாற்றி விடுவார்கள்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணத்திலும் சிதற கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே திரண்டு வந்த தொண்டர்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் பலராலும் மாநாட்டு திடலுக்கு வர இயலவில்லை.
இந்த மாநாடானது பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சனாதன சக்திகளுக்கு எதிரானது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல நாட்டைக் காக்க, நாட்டு மக்களை காக்க வேண்டும் என்பதற்கானது. இன்றைக்கு ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ராமர் கோவிலை கட்டி முடிக்கும் முன்பாக திறந்திருக்கிறார்கள். இது யாரை எய்ப்பதற்காக?
ராமர் பக்தியை நாம் எதிர்க்கவில்லை. ராமர் அரசியலை தான் எதிர்க்கிறோம்.
அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய சனாதன சக்திகள் முயற்சிக்கிறது. மதுரை தூக்கி எறிந்தால் நாடு என்னாகும்? நாமெல்லாம் தலை நிமிர்ந்து வீதிகளில் நடமாட முடியுமா? சமூக நீதியை பாதுகாக்க முடியுமா? இட ஒதுக்கீட்டினை பெற முடியுமா? நம் குழந்தைகள் உயர்கல்வியை பெற முடியுமா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பாவி உழைக்கும் சூத்திர இந்துக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழகம் சிறுத்தைகள் மாநிலம்.
சிறுத்தைகள் இருக்கும் ஊரில் ஆட்டுக்குட்டிகள் வந்து பார்த்தால் என்ன நிலை என்பது தெரியும்.
தமிழகத்தை பாதுகாக்க படை வீரர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி படை வீரர்கள் இருக்கிறார்கள். உங்கள் கனவு தமிழகத்தில் பலிக்காது.
இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினார். ஆனால் அவர்கள் கருப்பு பணத்தைப் பற்றி இப்போது பேசுவதே கிடையாது. மோடியும் ,அமித் ஷாவும் அதானிக்கும் சேவை செய்வதையே வேலையாக கொண்டுள்ளார்கள்.
நரேந்திர மோடி உலக மகா நடிகர்.
பத்தாண்டு கால ஆட்சியில் இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? விஜய் மல்லையா உள்பட வட இந்திய தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். நீங்களோ நானோ படிப்பதற்கு கல்வி கடன் கேட்டால் தருகிறார்களா?
இது மோடியை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துரத்தி அடிக்கும் மாநாடு.
ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஏ.வ. வேலு, எஸ். எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராஜா, சி பி.ஐ. (எம்.எல்.) விடுதலை தீபங்கர் பட்டாச்சாரியார், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சிபிஐ (எம்.எல்.) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் ஆகியோர் பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேலிட பொறுப்பாளரும் மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா.கிட்டு.
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், திருச்சி கரூர் மண்டல துணை செயலாளர் ராஜா மன்னன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன்,
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மாநாடு குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சட்டமேதை அம்பேத்கர் வழியில் அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களை காக்க திருச்சியில் திரண்டனர் லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகள். வெல்லும் சனநாயகம் மாநாடு வென்றது.
இவ்வாறு திருமாவளவன் அதில் தெரிவித்து உள்ளார்.
- மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.
மாலே:
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விசிக சார்பில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
- இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் வெள்ளி விழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என மும்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்த கூடாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. இது தான் நம் இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்" எனக் கூறினார்
- பாராளுமன்ற கட்டிடம் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம்.
- ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நடைபெற உள்ள மாநாட்டில் புதிய பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. மேடை புதிய நாடாளுமன்ற கட்டிடம், வரவேற்பு வளைவு பழைய நாடாளுமன்ற கட்டிடம், இந்த பாராளுமன்ற கட்டிடம் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம்.
ஆகவே அந்த கட்டிடத்தை நாம் மறந்து விட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் அதனை வரவேற்பு வளைவாகவும் அதன் பக்கத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை திறந்து வைப்பது போல கட்டமைப்பு உள்ளது.
இதில் மூன்று வாயில்கள் கொண்டதாக வளைவை அமைத்துள்ளோம். ஒன்று சுதந்திர வாயில் மெயின் கேட் சமத்துவ வாயில், மூன்றாவது சகோதரத்துவ வாயில் இது அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கியமானதாகும்.
சென்னையிலிருந்து சமத்துவ சுடர் தஞ்சையில் இருந்து சகோதரத்துவச்சுடர் வருகிறது. மதுரை மேலவளைவிலிருந்து விடுதலை களத்தில் இருந்து சுதந்திர சுடர் மூன்றும் இன்று மதியம் மாநாடு திடலுக்கு வரவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து அனைத்து தலைவர்களும் ஜனநாயக சுடர்களை ஏந்துகின்றனர்.
இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை அழித்து எறிந்து விடுவார்கள், தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும் தேர்தல் பழங்கனவாகிவிடும்.
ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள் தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது. இந்தியா கூட்டணி சின்னச் சின்ன முரண்பாடுகள் உள்ளது. இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கும்.
இந்த கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் எவ்வளவு வலிமை மிக்கதாக உள்ளது என்பதை உணர முடியும்.
காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இல்லை என்றால் கூட்டணி உருவாகி இருக்காது. நாங்கள் தேசிய கட்சி என இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது.
காங்கிரஸ் பொறுத்தவரை விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அது என் சொந்த தொகுதி என தெரிவித்தார்.
பேட்டியின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மேலிட தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான இரா.கிட்டு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி கவுன்சிலர் பிரபாகரன் உடனிருந்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.
- சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76-வது நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.
சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
சிலையினை காணொலி காட்சி மூலமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
- தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
திருச்சி:
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.
மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.
முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
- மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.
அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.
பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.
மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து வியாபாரிகள் குருவிகளாக சென்று அங்கிருந்து தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேடிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.35,02 ,800 மதிப்பிலான 556 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சிம்பத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் என்பது தெரியவந்தது.
- மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.
திருச்சி:
திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் 50 என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மேலகொண்டையம் பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்கோவிலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் மற்றும் மணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 19-ந்தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.
காலை 5.15 மணிமுதல் காலை 6 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (25-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடை கிறார். வாகன மண்ட பத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்ப ல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
- முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதிஉலா.
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
விராலிமலை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.
- புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி:
தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 2 மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவரை ராகிங் என்ற பெயரில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, தங்களது அறிக்கையை, பல்கலைக்கழக துணை வேந்தர் நாகராஜ் தலைமையிலான ராக்கிங் தடுப்பு குழு மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சமர்ப்பித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மாணவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழுவினர் பங்கேற்ற கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராகிங் புகாரில் தொடர்புடைய 2 மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) 10-வது பருவத் தேர்வுக்கு படிக்கவும், தேர்வு எழுதவும் தடை விதிப்பது, இந்த பருவப்படிப்பை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) படிக்கலாம் எனவும் முடிவு செய்தது.
இந்த பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேகிங் புகார் குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த நடவடிக்கையை ராக்கிங் தடுப்புக்குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது






