search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
    X

    விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

    • முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதிஉலா.
    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    விராலிமலை:

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×