என் மலர்tooltip icon

    மதுரை

    • திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.
    • திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்து வருகிறார்.

    த.வெ.க தலைவர் விஜயை அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

    மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடப்பட்ட பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன்.

    திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.

    திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார்.

    திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது.

    இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். முதலில் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக காட்டட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 27). நேற்று இரவு இவரும், இவரது அண்ணன் மகள் பிரமில் லாஸ்ரீ (7) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கீதா (29) ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    இவர்கள் மதுரை-தேனி மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், ராஜகுரு ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் பிரமில்லாஸ்ரீ, சங்கீதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செக்கானூரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த குழந்தை பிரமி லாஸ்ரீ, சங்கீதாவையும் போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதுகுறித்து ராஜகுரு மனைவி கவுசல்யா செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சரக்கு வாகனம் ஓட்டி வந்த டிரைவர் குறவகுடியை சேர்ந்த பாண்டி (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
    • சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.

    இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
    • அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட விமர்சனம். இருந்தாலும் அவர் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும், அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். தி.மு.க. அரசு முடிவுக்கு வந்துவிடும்.

    கூலிப்படை தான் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் நடக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் தி.மு.க. கூட்டணியில் இருக்க போகிறார்களா, இல்லையா என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கட்டிஷனில் இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமா என்ற கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்ஸன் வந்தாலும் கவலை இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை, இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் என்றார். 

    • சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
    • மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளது

    மத்திய, மாவட்ட சிறைகளில் புகையிலை பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்தக்கோரியும், சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று சையத் அலி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    சிறைகளில் புகையிலை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.

    • தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம்.
    • வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட அறிவுரை.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு தினசரி காலை, மாலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் இருந்து போடிக்கு மதுரை வழியாகவும், போடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் இன்று தண்டவாளத்தின் அதிர்வு, அசைவு மற்றும் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிர்வு மற்றும் நகர்வு ஆய்வு ரெயில் இன்று மதுரையில் இருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த வாகனத்தில் ரெயில் என்ஜின் மற்றும் தண்டவாள அதிர்வு அறியும் கருவி பெட்டி ஒன்று, அதிகாரிகள் பணியாளர்கள் ஆய்வு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு வருகிறது.

    காலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் மதுரையிலிருந்து போடிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓ.எம்.எஸ். ஆய்வு ரெயில் வரவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக 110 கிலோ மீட்டர் வேகம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து போடி வரை உள்ள தண்டவாள இருப்புப் பாதைகளில் அதிர்வுகள் மற்றும் நகர்வுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வு பரிசோதனை என்றாலும் 120 கிலோமீட்டர் வேகத்தில் வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தண்டவாள பகுதிகளில் அமர்ந்திருப்பதோ, தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் பொழுது எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர், ஆனையூரில் தி.மு.க. சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும். ஆனால் அந்த கட்சி வேண்டாமென்று சொல்லவில்லை.

    விஜயகாந்த் இருந்தபோது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று தே.மு.தி.க. இரு கட்சியினருடமும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்கேயும் அங்கேயும் பேசுவது சரியாக இருக்காது. விஸ்வாசமாக இருந்து தே.மு.தி.மு.க. ஒரு பக்கம் வரவேண்டும்.

    த.வெ.க. பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் இருப்பவர்கள் எல்லாம் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து அரசியல் செய்தார். 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எடப்பாடி வியாபாரம் செய்து வந்தவர். தற்போது பா.ஜ.க.விடம் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னை பெரிய ஆளாக நினைத்து கொள்கிறார். அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும். ஆனால் ஒருவரை அழித்து வரக்கூடாது. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது. மேலூர் தொகுதியில் தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். இம்முறை மேலூரில் தி.மு.க. தான் போட்டியிடும். தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்றார்.

    அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தி.மு.க. இல்லையென்றால் இண்டியா கூட்டணியே இல்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று பேசினார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கூட்டணி வைக்க முயற்சிக்கும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. குறித்து சர்ச்சக கருத்து கூறியிருப்பது கூட்டணிக்கு முட்டுக் கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது.
    • இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மை பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்கினார் எடப்பாடியார். 2011-ல் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஜெயலலிதா மடிக்கணினி வழங்கினார். ஆனால் தற்போது தேர்தலுக்காக தி.மு.க மடிக்கணினி வழங்குவதாக கூறியுள்ளது. 525 வாக்குறுதிகள் கொடுத்தும், தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்ற வில்லை.

    ஆனால் தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. சொத்து வரி வீட்டு வரியை கூட அரசாணை வெளியிடாமல் உயர்த்தி விட்டார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்று கைகட்டி நிற்கிறது.

    இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள். அரசு அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை தலை விரித்து ஆடுகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க. அரசு சொன்னது எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை. ஆனால் அ.தி.மு.க வாக்காளர்களை தெய்வமாக மதிக்கும் இயக்கம், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைவருக்கும் வீடு அம்மா இல்ல திட்டம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக வந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை.
    • சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த ஆண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் சாக்லேட் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அந்த பாக்கெட்டுகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பயணியிடம் இருந்து 9.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 9.5 கோடி ரூபாய் ஆகும். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது.
    • இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. மாஞ்சோலை தொழிலாளர்களை தி.மு.க. அரசு விரட்டி அடிக்கிறது. அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், பஸ் வசதி, ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து விசாரணை செய்ய வக்கீல் ஆணையம் அமைக்க ஐகோர்ட்டில் முறையிட இருக்கிறோம்.

    10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சியினர்கூட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, 36 நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அந்த சமயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டசபை தேர்தலுக்கு பின்பு தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும். 2026-ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம். அதனை கொடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம். வாக்குகளை அளித்து விட்டு, கோரிக்கைக்காக கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.

    கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேளாண் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிப்படையும். அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏன் இந்தியா அடிபணிகிறது? என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் கூட்டணி வைத்ததால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. மயானம், சாலை வசதிகள் இல்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தொகுதிகளில் புதிய தமிழகம்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. யாரை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்.
    • நடிகர்கள் எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து பகுதியில் ரூ.42 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    தமிழக வரலாற்றில் குரூப்-2 அரசு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது இதுதான் முதல் முறை. இதன் மூலம் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு என்பதை இளைஞர்கள் மத்தியில் எடுத்துக்காட்டி உள்ளது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு இருக்க வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினை விட நிர்வாக திறன் மிக்கவர் என்று மக்களே கருதுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பார்த்து மு.க. ஸ்டாலின் பயப்படுகிறார்.

    த.வெ.க. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அந்த கட்சியில் உள்ள செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவர்கள் மக்கள் மத்தியில் எந்த வகையில் செல்வாக்கு பெற்று இருக்கிறார்கள் என்பதை வருகிற தேர்தல் முடிவு எடுத்துக்காட்டும் எனவே தேவையற்ற அவர்களை பற்றி விமர்சிக்க தேவையில்லை.

    எப்போதும் தமிழக அரசியலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வும் தான் நேரடி போட்டி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை அந்த நிலைதான் இருக்கிறது.எனவே தேர்தல் களத்தில் தி.மு.க.வை நேரடியாக எதிர்க்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் மற்றவர்களை பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நடிகர்கள் எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.

    வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அநாகரிகமாக விமர்சனம் செய்து வருகிறார். அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்வதற்கு ஒரு வரம்பு இருக்கிறது கருணாநிதியின் அரசியல் பண்பை அவரது பேரன் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் அரசியல் பண்பாட்டை மீறி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலினும், உதயநிதியும் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் தட்ட பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
    • காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி.

    மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    தி.மு.க. இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.

    சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி குறித்து மாவட்ட தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் பேசுவது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிரானது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி. தங்களது ஆசையை நிர்வாகிகள் வெளிப்படுத்துவதில் தவறில்லை.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பிரதமர் என்டி.ஏ. கூட்டணி என்று கூறுகிறார். மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா பேசி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க.வினர் இதுபோல பேச முடியுமா?

    காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×