என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.

    இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேசினர்.

    பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.

    இந்நிலையில், விஜய் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

    • தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    • எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
    • 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 10 நாட்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்.
    • இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது.

    ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், தற்போது உள்ள நிதியினை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை; அதிலும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தி தர வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.

    மேலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது. ஜிஎஸ்டியால் தொகுதி மேம்பாட்டு நிதி பாதிக்கப்படுகிறது என்பதால் அதை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.
    • இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது.

    சென்னை:

    மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் 3-ந்தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் 15 ஆயிரம் கல்வியாளர்கள் திரள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தி.மு.க. பவள விழா முப்பெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரக்க சொன்னார்.

    மாநில சுயாட்சியை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் பெரும் முன்னெடுப்புக்கு கிடைத்த பலனாக அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்திருந்தது.

    பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதாவது கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.

    இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று சட்டசபையில் பெருமிதத்துடன் பேசியதோடு, மாநில சுயாட்சி உரிமைகளை மீட்டெடுத்த 'மாநில சுயாட்சி நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசின் சார்பில் மே 3-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    துணைவேந்தரை நியமிக்கின்ற அதிகாரம் முழுவதும் அனைத்து மாநிலத்திற்கும் அந்தந்த மாநில முதலமைச்சரே பச்சை பேனாவால் கையெழுத்து போடுவதற்கு உத்தரவு பெற்றுத்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல பாராட்டு விழா நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதன்படி தமிழகத்தில் இருக்கிற மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விச் சான்றோர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள், துணை வேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும், விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர்களும் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்படும் மகத்தான பாராட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.

    • கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.
    • வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.

    அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

    வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

    வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் .

    கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவரமுடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அவைகளை எழுதிக் கொடுக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

    • கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
    • 1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் இன்றும், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.

    இதற்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னதுதான் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

    • ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
    • தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    சென்னை:

    முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தியும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

    ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.

    எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும்.

    தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதம் ஒன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    ஏற்கனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.

    எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
    • சட்டசபையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வு தொடங்கியது. அப்போது வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    அதனை தொடர்ந்து, உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அப்போது, மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாக அமைச்சர் ரகுபதி பேசினார்.

    சட்டசபையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என்பது குறப்பிடத்தக்கது.

    உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

    அமலாக்கத்துறை வழக்கு காரணமாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என்று கூறப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்யவேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
    • ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தேசம் காப்போம் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்துவது, காங்கிரஸ் மைதானத்தில் 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.

    கூட்டத்தில் கட்சி பிரச்சனைகளையும் மாவட்ட தலைவர்கள் கிளப்பினார்கள். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் பேசும் போது, கட்சி அமைப்பு ரீதியாக நமக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டாமா? தி.மு.க. கூட்டணியில் குறைந்த பட்சம் 60 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும். இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கேட்க கூட கட்சியினருக்கு உரிமை இல்லையா? அதற்காக கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றார்.

    இதே போல் மேலும் சில மாவட்ட தலைவர்களும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டும். ஆட்சியின் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றார்.

    பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது, எம்.எல்.ஏ. பதவி மீது அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும் போது பேசிக் கொள்ளலாம். இப்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். கிராம கமிட்டிகள் அமைப்பதில் சென்னையில் இன்னும் 2 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தரவில்லை என்றார்.

    இதற்கு மாவட்ட தலைவர் திரவியம் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். மற்றொரு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் மேலிட பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு இதுவரை அவரது முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இறுதியாக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் போது, என் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கட்சியினர் தங்கள் பிரச்சனைகளை என்னிடம் நேரிலேயே தெரிவிக்கலாம் என்றார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×