என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்
Byமாலை மலர்17 Jan 2019 4:20 AM GMT (Updated: 17 Jan 2019 4:20 AM GMT)
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார். #DMK #MKStalin
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்து வருகிறது.
மதசார்பற்ற அணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார்.
இதன் தொடக்கமாக கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் நடந்தது.
அப்போது ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற அணியாக செயல்பட்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16-ந்தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
அப்போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம் என்று முழக்கமிட்டனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன் மொழிந்தார்.
இப்போது அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை கொல்கத்தா செல்கிறார். பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர். #DMK #MKStalin
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்து வருகிறது.
மதசார்பற்ற அணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார்.
இதன் தொடக்கமாக கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் நடந்தது.
அப்போது ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற அணியாக செயல்பட்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16-ந்தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
அதன் பிறகு ராயப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இப்போது அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை கொல்கத்தா செல்கிறார். பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர். #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X