என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அனுமதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
- லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தந்தையின் விருப்பத்தை மகள்கள் நிறைவேற்றும் வகையில் லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.
லக்னோ சவுக்கில் வசிக்கும் முகமது இக்பால், தனது மகளின் திருமண தேதி நெருங்கி வரும் வேளையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லக்னோவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
முகமது இக்பாலின் உடல் நலம் மோசமாக உள்ளதால், தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்ட மகள், அவர் முன்பாகவே திருமணம் நடைபெற முடிவு செய்தார்.
அதன்படி, மருத்துவமனையின் ஒப்புதலோடு ஐசியுவில் தந்தை முன்பாக இஸ்லாமிய முறைப்படி ஒரு வித்தியாசமான திருமண விழா நடந்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மகளின் இந்த செயல் தந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என இணைய வாசிகள் மணமகளை வாழ்த்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திருமணம் முடிந்த நிலையில் குடும்பத்தினர் முகமது இக்பால் குணமடைய தொடர்ந்து நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.
- கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
- மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.
நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
- தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
- கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.
ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
- புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.
இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A wedding like no other ? Locals in Varanasi, UP arranged a "wedding" between a male and a female frog, in hopes of appeasing the rain gods and getting respite from the heat. We can't be sure if it works, but it makes for a whimsical tale for sure ?️☀️ pic.twitter.com/GKDOipKp8a
— Khabar Lahariya (@KhabarLahariya) June 13, 2024இதற்கிடையே தாய்லாந்தில் மழை வேண்டி, சிறுவர்களின் விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரமான டோரேமானின் பொம்மையை கூட்டுக்குள் வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று விழா நடத்துவது குறிப்பிடத்தக்கது.
- 30 வருடத்திற்கு முன் மூன்று பேர் 40 வயது நபரை தாக்கியுள்ளனர்.
- தற்போது மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் ஒரு அடிதடி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 30 வருடங்களை சந்தித்து, 15 நீதிபதிகள் கைகளை கடந்த தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
1994-ம் ஆண்டு கமாசின் காவல் விலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராம்ரூப் ஷர்மா என்பவரை மூன்று பேர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட அவர்கள், குடிப்பதற்கு பணம் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் ராம்ரூப் ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடக்க விசாரணைக்குப்பின் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகள் ஆஜராக நிலையில் வழக்கு அப்படியே நிலுவையில் இருந்துள்ளது. இறுதியாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் விசாரணை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 30 வருடத்தில் 15 நீதிபதிகள் மாறியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இருவர் சம்பவம் நடைபெற்றபோது வாலிபர்களாக இருந்தவர்கள். தற்போது 50 வயதை தாண்டியுள்ளது. ஒருவர் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு அப்போது 40 வயதாகும். தற்போது 70 வயதை தாண்டியுள்ளது. தன்னை தாக்கியவர்கள் ஏராளமான வழக்கில் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் தொழில்முறை குற்றவாளிகள். இந்த சிறிய தண்டனை அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.
- காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.
- இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தத்க்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பாடம் எடுத்த பெண் யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். 20,50 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட இந்த சேனலில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்குவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பரத்வாஜ் தனது புகாரில், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் [NIFT] பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
- 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை வெட்கமின்றி ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.
அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
गर्लफ्रेंड की हत्या करने वाले अदनान उर्फ बल्लू को सुनिए..."मोहब्बत में धोखा देने वालों की सिर्फ एक ही सजा है मौत, चाकू से गर्दन काट डाली"
— Sachin Gupta (@SachinGuptaUP) June 12, 2024
? बुलंदशहर, उत्तर प्रदेश https://t.co/KEZ4adMLgv pic.twitter.com/0njxzOHcst
காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு "மரணம்" தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. "நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, "பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை "பல்லு" என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று கூறப்படுகிறது.
மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் "எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.
இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
यूपी : बुलंदशहर जिले के खुर्जा में कब्रिस्तान में महिला आसमा की हत्या। बॉयफ्रेंड अदनान ने ही वारदात की। महिला अपने हसबेंड को छोड़कर बॉयफ्रेंड संग रह रही थी। अब बॉयफ्रेंड को शक था कि उसका कहीं और भी चक्कर है। पुलिस ने आरोपी अरेस्ट किया। pic.twitter.com/HnDzSRo15l
— Sachin Gupta (@SachinGuptaUP) June 11, 2024
- இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் பதவி பறிபோகும்.
- சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பா.ஜனதாவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது.
இதனால் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது. இதற்கு உத்தரபிரேதசத்தில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்ற உத்தரபிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.
இதில், காஜிபூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அப்சல் அன்சாரி பா.ஜ.க.வின் பராஸ்நாத் ராயை 1, 24, 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடிந்தது.
ஜூலை மாதம் அவரது வழக்கில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்புதான் அவரது புதிய எம்.பி. பதவி நீடிக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும்.
இதேபோன்று அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திரயாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவேளை அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும்.
ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவரது எம்.பி. பதவியும் கைவிட்டுப் போய்விடும்.
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சந்தவுலி தொகுதியில் பா.ஜ.க.வி.ன் மகேந்திரநாத் பாண்டேவை தோற்கடித்த சமாஜ்வாடியின் வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் அவரது எம்.பி. பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது.
இறுதியாக, உ.பி.யில் சுயேச்சையாக வென்ற பட்டியலின தலைவர் சந்திர சேகர் ஆசாத்மீது 30 வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதால் அவரது அரசியல் வாழ்க்கைக்கே பேராபத்து நேரும் அபாயம் உள்ளது.
இதனால் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.
- வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வென்றார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.
அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.
ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.
பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.
- கட்டணம் கேட்டதால் ஜேசிபி டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.
- புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது.
- வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும் திடீரென ஏ.சி. பெட்டிகளில் ஏறி பயணிப்பதும், அவர்களுடன் சக பயணிகள் சண்டையிடும் காட்சிகளும் இணையத்தில் அடிக்கடி வெளியாவது உண்டு.
இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் உத்தரகாண்டின் டேராடூனுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் ஏராளமான பயணிகள் நின்றபடி பயணம் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் பயணிகள் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.
வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது வந்தே பாரத் ரெயிலுக்குள் இவ்வளவு பயணிகள் கூட்டம் வந்தது எப்படி என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களில் மெட்ரோவில் இருப்பதை போன்று டிக்கெட் இல்லாமல் யாராலும் உள்ளே வர முடியாது என்ற முறையை கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
Now Premium Vande Bharat is also facing the same fate as other trains.
— Gems of Engineering (@gemsofbabus_) June 9, 2024
We do not need a puppet Railway Minister, we need a new Railways which is at least accountable. pic.twitter.com/1V5NwiavQI
- ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர்.
- இந்த மோசடிவேலையில் தந்தையும் உடந்தை என்று தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கூட்டாக சேர்ந்து மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், இல்லத்தரசிகள் என வகைதொகை இல்லாமல் பலரை ஏமாற்றி ரூ.400 கோடி வரை திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது.
நிகாரிகா வென்டியூர்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்தி வந்த அபிஷேக் திவேதி அவரது மனைவி நிஹாரிகா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த மோசடி வேலையில் அபிஷேக்கின் தந்தை ஓம் பிரகாஷும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் போலீசார் FIR பதிந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகாரிகா நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.






