என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • வாக்கு வங்கியை திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.
    • மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:-

    பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

    கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

    சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

    வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

    'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

    சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

    பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

    ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

    தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

    அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்?

    கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    • அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.
    • அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அங்கு சமாஜ் வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு உத்தரபிரதேச வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்க இங்கு வந்துள்ளேன். நான்கு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். முதலில் இந்த தேர்தலில், அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

    பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது. அன்று அவர் அமித் ஷாவை தனது வாரிசாக்கி, பிரதமராக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மோடி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    தற்போது அமித் ஷாவுக்கு பதிலாக ஒரே ஒரு தலைவராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. இந்த விதி

    முறையை (75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்) பா.ஜனதா கட்சியில் மோடி ஏற்படுத்தினார். இந்த விதியை அவர் பின் பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    2-வதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 2 அல்லது 3 மாதங் களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

    3-வதாக, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். போகிறார்கள். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்குவார்கள்.

    பா.ஜனதாவினர் எப்போதுமே இட ஒதுக்கீட் டிற்கு எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை (மாற்றி) இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். நான்காவதாக, ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 220 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களது இடங்கள் குறைய போகிறது. பா.ஜனதா ஆட்சியை அமைக்கப் போவதில்லை.

    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, 543 தொகுதிகளில் 143 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று பா.ஜனதாவே நம்புகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.
    • கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    5-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அசம்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் ஜனநாயக திருவிழா பற்றிய செய்திகள் உலக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வருவதை நான் முதல் முறையாக பார்க்கிறேன். இந்தியாவின் அடையாளம் உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆசீர்வாதம் இருப்பதை உலகமே உற்று நோக்குகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடியும் சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தன.

    உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் தங்களால் இயன்றவரை எரிக்க முயன்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் மோடி சி.ஏ.ஏ. கொண்டு வந்தார். அவர் போகும் நாளில் சி.ஏ.ஏ. அகற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர். நாட்டை வகுப்பு வாத தீயில் எரிய செய்தீர்கள்.

    நாட்டில் எங்கிருந்தும் பலத்தை திரட்டி உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.

    மகாத்மா காந்தியின் பெயரை கூறிக் கொண்டு அவர்கள் (காங்கிரஸ்) அதிகார படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். ஆனால் காந்தியின் வார்த்தை அவர்களுக்கு நினைவில் இல்லை.

    இந்த மக்கள் (அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர்) எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்று மகாத்மா காந்தியே உறுதி அளித்தார்.

    கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் வாக்கு வங்கியாக இல்லாததால் அவர்களை பற்றி சிந்திக்க காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    உங்கள் (காங்கிரஸ்) முகமூடியை அவிழ்த்தது மோடிதான். நீங்கள் ஒரு கபடவாதி. வகுப்புவாதி. இந்த நாட்டை 60 ஆண்டுகளாக மதவெறியில் விட்டு விட்டீர்கள்.

    நான் தெளிவாக சொல்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

    370-வது சட்டப்பிரிவை திரும்ப கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியலை யாராலும் செய்ய முடியாது. ஸ்ரீநகரில் நடந்த வாக்குப்பதிவில் மக்கள் காட்டிய உற்சாகம் இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

    நாட்டின் பட்ஜெட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க காங்கிரசும், சமாஜ்வாடியும் விரும்புகின்றன.

    யோகி ஆதித்யநாத் உ.பி.யில் மாபியா, கலவரக்காரர்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    • தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும் என்றார்.

    லக்னோ:

    டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்றார். லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்துக்குச் சென்ற கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:

    டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும். பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெறும்.

    தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும்.

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார். அமித் ஷாவை பிரதமராக்கவே பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார்.

    பா.ஜ.க.வில் 75 வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெறுவர் என்ற விதியை பிரதமர் மோடி பின்பற்றுவார் என நம்புகிறேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 143 இடங்கள்தான் கிடைக்கும் என தெரிவித்தார்.

    • அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும்.
    • ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார்.

    நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தற்போது ஜவுளித்துறை மந்திரியாக உள்ளார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தையும் வைத்திருக்கிறார்.

    2003-ல், இரானி பாஜ.க.வில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, அவர் 2004-ல் மகாராஷ்டிர இளைஞர் பிரிவில் துணைத் தலை வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் போது, அவர் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் வெற்றிபெறவில்லை.

    2004 டிசம்பரில், பா.ஜனதாவின் தேர்தல் தோல்விக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கூறிய இரானி, அவர் ராஜினாமா செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டினார். இருப்பினும், பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் சாத்தியமான நடவடிக்கை யின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை வாபஸ் பெற்றார்.

    கட்சிக்கு இரானி செய்த பங்களிப்புகள் அவரை பா.ஜ.க.வின் மத்திய குழுவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது. 2009-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

    2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், இரானி பா.ஜ.க.வின் தேசிய செயலா ளராக நியமிக்கப்பட்டார், மேலும் ஜூன் 24 அன்று, பா.ஜ.க.வின் மகளிர் பிரிவான பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    2011-ல், இரானி பாராளு மன்றத்தில் அறிமுகமானார், குஜராத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மேல்சபை எம்.பி. ஆக பதவியேற்றார்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து உத்தரப்பிர தேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இரானி போட்டியிட்டார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் ராகுலிடம் 107,923 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை நியமித்தார்.

    மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக இரானி பதவி வகித்த காலத்தில், பல்கலைக்கழகங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார்.

    2016-ல், ஆறு கூடுதல் பல்க லைக்கழகங்களில் புதிய யோகா துறைகளை நிறுவுவதாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், இரானி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.

    2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வெங்கையா நாயுடு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரானி அமேதியில் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார், ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை பா.ஜ.க. மேலிடம் களம் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் அவர் அமேதி தொகுதியில் குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அமேதி தொகுதியில் வாக்காளராக மாறியுள்ளார்.

    அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மாவாய் கிராமத்தில் தனக்கென ஒரு வீட்டைப் பெற்று வாக்காளராக விண்ணப்பித்தார். அவர் இப்போது கிராமத்தின் வாக்காளராக மாறியுள்ளார்.

    ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார். அமேதி குடும்பத்தின் மத்தியில் வாழ்வதற்காக அவர் தனது குடியிருப்பை இங்கு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு இருந்தால் ஏற்பட்டிருக்கும் களத்தின் விறுவிறுப்பு, தற்போது போட்டியில்லை என்பதால் ஏமாற்றம் அளிக்கிறது.

    அதே நேரத்தில், இந்த முறை போட்டி ஒரு புதிய முனையைக் கொண்டுள்ளது: "பியூன்" என்று அழைக்கப்படுபவருக்கும் ஒரு மத்திய மந்திரியும் இடையிலான யுத்தம்.

    இங்கு காந்தியின் தேர்தல் பிரசாரங்களை 40 ஆண்டுகளாக நிர்வகித்து, பா.ஜ.க.வால் "பியூன்" என்று அழைக்கப்பட்ட முகம் தெரியாத காங்கிரஸ் தேர்தல் மேலாளர் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். மறுபுறம், ஸ்மிருதி இரானி தன்னைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மந்திரியாக காணப்படுகிறார், அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    சர்மாவின் காந்தி குடும்ப பக்தி அவரது வலிமையான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்றால், பா.ஜ.க தொண்டர்கள் ஸ்மிருதி இரானியின் செல்வாக்கு மற்றும் அது அவர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும், 2014 இல் ராகுலிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2019-ல் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமேதியில் தான் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டுமே ஸ்மிருதி இரானி ஏற்படுத்தி வருகிறார். உண்மையில் ஸ்மிருதி இரானிக்கு எதிரான சில அதிருப்தியை அமேதியில் காண முடிகிறது.

    காங்கிரஸ் தனது பிரச்சாரத்தில், அமேதியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டு பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தடுக்கப்பட்ட திட்டங்களை மேற்கோள் காட்டுகிறது, டிரிபிள் ஐ.ஐ.டி 2016-ல் மூடப்பட்டு பிரயாக்ராஜுக்கு மாற்றப் பட்டது. மெகா புட் பார்க்' மற்றும் ஒரு காகித ஆலை, ஒருபோதும் வெளிச் சத்தைக் காணவில்லை. "பழிவாங்கும் அரசியல்" என்று கூறி, ராஜீவ் காந்தி காலத்தில் வந்த பி.ஹெச்.இ.எல், எச்.ஏ.எல், ஆர்டினன்ஸ் பேக்டரி, சிமென்ட் ஆலை போன்ற திட்டங்களை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

    அமேதியில் புதிய கோகோ கோலா பாட்டில் ஆலை பற்றி ஸ்மிருதி இரானி பேசுகிறார், மேலும் காந்தி குடும்பம் 50 ஆண்டுகள் தொகுதியில் இருந்தபோதிலும், தனக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டு, மேலும் ஆதரவு தேடுகிறார். இப்போது அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு சொந்தமாக வீடு உள்ளது என்பதை அவரும் பா.ஜ.க.வினரும் குறிப்பிடுகின்றனர். மற்றும் விரைவில் பிரதமர் மோடி அமேதியில் திட்டமிடப்பட்ட பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    மறுபுறம், காங்கிரசின் அமேதி மற்றும் ரேபரேலி (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) பிரச்சாரங்களை பிரியங்கா பொறுப்பேற்றுள்ளார். பிரியங்கா ஏற்கனவே சர்மாவுடன் அமேதியில் 15க்கும் மேற்பட்ட "தெருமுனை சந்திப்புகளை செய்திருப்பதால், அவரது நுழைவு காங்கிரஸ் பிரசாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    அமேதியுடன் தனது குடும்பத்தின் பழைய தொடர்பை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ராஜீவ் காந்தியால் அமேதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மாவுக்கு தொகுதியின் ஒவ்வொரு பாதையும் தெரியும் என்கிறார் பிரியங்கா.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்மிருதி இரானியும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவர் வெற்றி உறுதி என்று பா.ஜ.க. நம்புகிறது. அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    • சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
    • கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், போட்டியிட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, அவர் கங்கை நதியில் உள்ள தஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

    இதனால் அவர் மிகவும் நல்ல நேரமாக கருதப்படும் 11.40 முதல் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 'அபிஜித் முகூர்த்தம்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றை இணைத்து, பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்ததாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

    பூசம் (புஷ்ய) நட்சத்திரம், மே 13-ந்தேதி அன்று காலை 11.23 மணிக்கு தொடங்கி மே 14-ந்தேதி பிற்பகல் 1.05 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் செய்யப்படும் செயலானது மங்களத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

    ஏனெனில், இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், ஆசீர்வாதங்களையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிறது.

    மேலும், கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    இந்த நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என தெரிவித்துள்ளனர்.

    • தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி - அதானியை வசைபாடுவதை ராகுல்காந்தி நிறுத்திவிட்டார் என மோடி பேசியிருந்தார்.
    • "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    அண்மையில் பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    அந்த சமயத்தில், "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருக்கிறேன். லக்னோ, மும்பை, அகமதாபாத், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் வரை அனைத்து விமான நிலையங்களையும் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் தனது 'டெம்போ நண்பர் அதானியிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு எத்தனை டெம்போவில் காசு வாங்கினீர்கள் என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று 5 நாட்களுக்கு முன்பு தானே மோடி கூறினார். எப்போது சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்ப போகிறீர்கள். சீக்கிரமாக விசாரணையை ஆரம்பியுங்கள்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றிப்பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக மீண்டும் வெற்றிப்பெறும் நோக்கில் பிரதமர் மோடி இன்று மனுத்தாக்கல் செய்தார்.

    அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். அமித்ஷாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். 

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன்.
    • காசியுடனான எனது உறவு அற்புதமானது,

    கங்கை நதியில் சிறப்பு பூஜைக்கு பிறகு பிரதமர் மோடி கூறும்போது, கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    முன்னதாக மோடி, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, காசியுடனான எனது உறவு அற்புதமானது, ஒருங்கிணைந்தது மற்றும் ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும் என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
    • வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

    வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர்.

    பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இன்று காலை 9.30 மணிக்கு கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்துக்கு பிரதமர் மோடி சென்று கங்கை நதிக்கு பூஜை நடத்தினார். அவருக்கு நெற்றியில் புரோகிதர்கள் திலகமிட்டு பட்டு வஸ்திரம் அணிவித்தனர்.

    அதன்பின் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி மனமுருக வேண்டினார். கங்கை நதிக்கு பூ, பால் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்தார். அதன்பின் கங்கை நதிக்கு கங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.

    கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து நமோ காட் என்ற இடத்தில் உள்ள கால பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவரை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மோடியுடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் சென்றார். மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர் பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்தீப்பூரி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார்.
    • வாரணாசியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகல் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில், 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார். அவர் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை பிரதமர் மோடி உத்தர பிரதேசம் சென்றுள்ளார். அங்கு வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், வாரணாசியின் கங்கை கரையில் உள்ள தசஅஸ்வமேத காட் என்ற இடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.

    வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.

    ×