என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

    ஆலந்தூர்:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் டெல்லி சென்றது, அவசரப் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பயணம் தான். எனது டெல்லி பயணத்திற்கும், பஞ்சாப் மாநில கவர்னரின் திடீர் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதைப்போல் டெல்லியில் மத்தியமந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசியதும், திடீர் சந்திப்பு அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புதான்.

    அவரிடம் புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனை நடத்தினேன்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று, அவரை வாழ்த்துகிறேன். நமது நாடு, ஜனநாயக நாடு. இங்கு இவர் தான் அரசியலுக்கு வரவேண்டும், அவர் வரக்கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

    நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டிகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • சசிகலாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன்.
    • பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று விதியை உருவாக்கி இருந்தார்.

    பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றினார்.

    அப்படி என்றால் பணம் படைத்தவர்களால் மட்டும் தான் பொது செயலாளராக முடியும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். அதற்காக தான் இந்த உரிமை மீட்பு கூட்டமும் நடைபெறுகிறது.

    அண்ணா நினைவு நாளன்று சசிகலாவை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசவில்லை.

    பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.
    • கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம்.

    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை காலை இருப்பதால் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    செயற்குழு கூட்டத்திற்கு பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும்.

    கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது. செயற்குழு உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் கருத்துக்களை கூறிய பிறகு தான் முடிவு களை கூற முடியும். மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அந்த அதிகாரமும் இல்லை.

    பாரதிய ஜனதா தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கி றது. அது புதிதல்ல. தேர்தல் குறித்து பேசுகின்ற நேரம், காலம் இருக்கின்ற போது அதைப் பற்றி பேச தானே செய்வோம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம். அத ற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை, தடங்கலும் கிடையாது அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களது முடிவு தான் இறுதி முடிவு. மேலும் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ம.தி.மு.க. குழுவில் இடம் பெற்றிருந்த ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்டுள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளதால் அவா் பயணம் முடித்து வந்ததும் அதுபற்றி முடிவெடுத்து அறிவிப்பார்.

    கேள்வி:- எந்தெந்த தொகுதி என்று பட்டியல் கொடுத்து விட்டீர்களா?

    பதில்:- தொகுதிகள் எது எது என்பதை இனிமேல் முடிவு செய்வோம்.

    கேள்வி:- கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியை கேட்கிறீர்களா? அல்லது வேறு தொகுதியா?

    பதில்:- அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும். அது எந்தெந்த தொகுதி என்பதை பின்னர் சொல்வோம்.

    கேள்வி:- கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்? இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டியிட கேட்டிருக்கிறீர்களா?

    பதில்:- இந்த முறை கண்டிப்பாக எங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    கேள்வி:- அதற்கான உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களா? பேச்சுவார்த்தையில் அதுபற்றி பேசப்பட்டதா?

    பதில்:- எங்களுடைய கோரிக்கையை வைத்து உள்ளோம். அது பின்னாடி தெரியும். தனி சின்னத்தில் எங்களது கட்சி சின்னத்தில் தான் நாங்கள் நிற்க வேண்டும் என்பது எங்களது கட்சியின் நிலைப்பாடு.

    கேள்வி:- அடுத்து எப்போது பேச்சுவார்த்தைக்கு வருவீர்கள்?

    பதில்:- முதலமைச்சர் வந்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடை பெறும்.

    கேள்வி:- அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வைகோ வருவாரா?

    பதில்:- அதுபற்றி அப்போது தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. விரும்புகிறது. அதுவும் ம.தி.மு.க.வின் சொந்த சின்னத்தில் போட்டியிட நினைக்கிறது.

    இதற்காக விருதுநகர், திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக தி.மு.க.விடம் வழங்கி உள்ளது.

    • நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
    • என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ.50 ஆயிரம் செலவு செய்தார். ஆனால் போதுமான நெல் விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் விவசாய நிலத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டார். அதன் பிறகு ஜெயராஜ் தனது வயலுக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயராஜிடம் உங்கள் வயலில் நெல் கதிர் விட்டு பயிர்கள் தலைசாய்ந்துள்ளது. இன்னும் ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது அங்கு நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

    இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த நிலையில் அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலை பார்க்க சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    நான் நெல் விதை விதைக்கவில்லை, நடவு நடவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை வீதம் 16 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை நெல்கதிர் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.

    இந்நிலையில் கதிர் அறுத்த பிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப்போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.

    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும். அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு வரவும் வாய்ப்பு உண்டு. அரசியலில் கடைசி நேரம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அவரது இந்த கருத்து பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது. சுயமரியாதையை இழந்துவிட்டது. தமிழக நலனை இழந்து விட்டது. சிறுபான்மையினர் நலனை இழந்துவிட்டது. மோடியை மட்டுமே தலை குனிந்து வணங்கியதால் அவர்களது சுயமரியாதை தான் பறிபோனது.


    எங்களை பொறுத்தவரை கொள்கைரீதியாக மதசார் பற்ற அணியாக ஒன்றுபட்டு உள்ளோம். எங்கள் எண்ணம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை வேரறுக்க வேண்டும் என்பது தான்.

    தொகுதிகளை பொறுத்த வரை எந்த கட்சிக்கும் கூடுதலாகவும் கிடைக்காது. குறைத்தும் வழங்க மாட்டார்கள்.

    மகாபாரத போரில் கிருஷ்ணர் எப்படி வெற்றி இலக்கை நோக்கி தேரை ஓட்டினாரோ அதே போல் மு.க.ஸ்டாலினும் கடந்த தேர்தலில் அற்புதமாக கூட்டணி தேரை ஓட்டி வெற்றியை தேடி கொடுத்தார்.

    அதே போல் இந்த தேர்தலிலும் மதசார்பற்ற கூட்டணி தேரை அற்புதமாக ஓட்டி மகத்தான வெற்றி பெறுவார்.

    காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினர் குறைவாக இருந்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புள்ளி விவரம் வெளியிட்டு உள்ளார். எங்களுக்கும் புள்ளி விவரம் தெரியும்.

    இது ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம். எந்த காலத்திலும் சிறுபான்மை மக்கள் உங்களோடு கைகோர்க்க மாட்டார்கள். அ.தி.மு.க., பா.ஜ னதாவோடு கைகோர்த்ததால்தான் சிறுபான்மையினர் அவர்களை கைவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும், விசைப்படகுகளை இலங்கைக்கு கொண்டு நாட்டுடமை ஆக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருசில சமயங்களில் மீனவர்களை விரட்டி அடிப்பதும், அவர்கள் காயங்களுடன் கரை திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியவர்களின் இரண்டு விசைப் படகை சிறைபிடித்தனர்.

    இதில், ஜேம்சன் படகில் இருந்த மீனவர்கள் வெக்கர் (27), மார்டின் (27), மணி, சிதம்பரம் (47), ஆரோன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஷ், சுதாகர், ஜெரால்டு, சுமுல், ஆக்கு மற்றும் சகாயராஜ் படகில் இருந்த படகில் இருந்த ராபர்ட் (40), ஜாக் ஷஷன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் 23 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கைதான மீனவர்கள் குறித்த விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படைக்கு ராமேசுவரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 134.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1321 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வருகிற 75 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 29.29 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது.
    • நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

    ஒவ்வொரு கட்சிக்கு கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கும். நாங்களும் கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தோம்.

    இரு தரப்புக்கும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கேள்வி: எந்தெந்த தொகுதிகள் என்று விருப்ப பட்டியல் ஏதும் கொடுத்திருக்கிறீர்களா?

    பதில்: அதெல்லாம் பொருத்தமான நேரத்தில் கொடுப்போம்.

    கே: உங்கள் வசம் உள்ள கோவை தொகுதியை கூட்டணி கட்சிகள் கேட்பதாக சொல்கிறார்களே?

    ப: அதை யாரும் கேட்பார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன உடன்பாடு என்பதுதானே பிரச்சனை. அதனால் அதைப் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. யாருக்கு எந்த தொகுதி என ஒவ்வொரு கட்சியிலும் பதிலை கேட்பார்கள். எங்களை பொருத்தவரையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை தி.மு.க. தலைமையிடம் சொல்லி உள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முடிவுகளை தெரிவிப்போம்.

    கே: தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?

    ப: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது. வந்த பிறகுதான் அதற்கான உடன்பாடு ஏற்படும். நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    கே: தி.மு.க.விடம் கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு தர மனம் உள்ளதா?

    ப: அதெல்லாம் பேச்சுவார்த்தையில் பொருத்தமான முறையில் நாங்கள் முடிவெடுப்போம்.

    கே: அடுத்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறதா?

    ப: வாய்ப்பு ஏற்பட்டால் அது ரொம்ப நல்லது.

    கே: நீங்கள் கூடுதல் தொகுதியை கேட்பதாக கூறுகிறீர்கள்? கடந்த முறை மாதிரி இந்த முறையும் அதே இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    ப: அது சம்பந்தமாக நாங்கள் அரசியலாக என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×