search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
    X

    தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது.
    • நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

    ஒவ்வொரு கட்சிக்கு கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கும். நாங்களும் கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தோம்.

    இரு தரப்புக்கும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கேள்வி: எந்தெந்த தொகுதிகள் என்று விருப்ப பட்டியல் ஏதும் கொடுத்திருக்கிறீர்களா?

    பதில்: அதெல்லாம் பொருத்தமான நேரத்தில் கொடுப்போம்.

    கே: உங்கள் வசம் உள்ள கோவை தொகுதியை கூட்டணி கட்சிகள் கேட்பதாக சொல்கிறார்களே?

    ப: அதை யாரும் கேட்பார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன உடன்பாடு என்பதுதானே பிரச்சனை. அதனால் அதைப் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. யாருக்கு எந்த தொகுதி என ஒவ்வொரு கட்சியிலும் பதிலை கேட்பார்கள். எங்களை பொருத்தவரையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை தி.மு.க. தலைமையிடம் சொல்லி உள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முடிவுகளை தெரிவிப்போம்.

    கே: தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?

    ப: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது. வந்த பிறகுதான் அதற்கான உடன்பாடு ஏற்படும். நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    கே: தி.மு.க.விடம் கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு தர மனம் உள்ளதா?

    ப: அதெல்லாம் பேச்சுவார்த்தையில் பொருத்தமான முறையில் நாங்கள் முடிவெடுப்போம்.

    கே: அடுத்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறதா?

    ப: வாய்ப்பு ஏற்பட்டால் அது ரொம்ப நல்லது.

    கே: நீங்கள் கூடுதல் தொகுதியை கேட்பதாக கூறுகிறீர்கள்? கடந்த முறை மாதிரி இந்த முறையும் அதே இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    ப: அது சம்பந்தமாக நாங்கள் அரசியலாக என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×