என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
- முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள்.
சென்னை:
கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதனிடையே, அஜித் பேட்டி குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு, நடிகர் அஜித்தின் பேட்டியை தான் இன்னும் பார்க்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார். கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தனது செயல்பாடுகளால் அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க.வை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதை உண்மையான அ.தி.மு.க.வினர் உணர்ந்து இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள் என்றார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.
தங்கம் விலை நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகலில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து விற்பனையானது.
நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-10-2025- ஒரு கிராம் ரூ.165
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
- சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
- சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன்படி ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்தவர்களை தவிர்த்து வெளியூர், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பிரதேசமான வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி மற்றும் சோலையாறு அணை இடதுகரை மழுக்குப்பாறை வழி சோதனைச்சாவடியிலும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை வருவதற்கு இ-பாஸ் பெற https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி சோதனைச்சாவடிகளில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் அதே இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து பெற்றுகொண்டால் போதுமானதாகும். அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை. எனவே, வால்பாறை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுதான் வர வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
- நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதில் அவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை பேசினார்.
அப்போது, 'கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகிறார்கள்' என்று பேசியிருந்தார்.
பிரதமரின் இந்த பேச்சு தமிழக கட்சித்தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி சொன்னது போல, தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-
சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கூறியதாவது:-
நான் 5 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்க்கிறேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்தேன். வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு நாள் விடுமுறை. அந்த நாளில் எங்களை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். விருப்பம் இருந்தால் வேலை பார்க்கலாம்.
ஒரு நாள் சம்பளம் ரூ.1,000. எங்களுடன் சேர்ந்து தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். என்னை போல, பலர் இங்கு தங்கி பணி செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் எங்கள் வீட்டில் எப்படி இருந்து வேலை பார்ப்போமோ? அதேபோல்தான் இங்கு இருந்து வேலை பார்க்கிறேன்.
சென்னையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் பப்பு குமார்:-
சென்னைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஓட்டலில் முதலில் 'சப்ளையராக' பணியை தொடங்கி, இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன். கடை உரிமையாளர் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார். சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன்.
கடைக்கு சாப்பிட வருபவர்களும், கடை உரிமையாளர்களும் கடுமையாக நடந்தது கிடையாது. எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. எப்போது லீவு கேட்டாலும் உரிமையாளர் முகம் சுழிக்காமல் கொடுப்பார். தமிழ் ஆட்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ? அதே சம்பளத்தைதான் எங்களுக்கு கொடுக்கிறார். இங்கு வந்து அழகாய் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிட்டேன்.
சென்னையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ஷரீப், சபீர், காசிம் ஆகியோர் கூறியதாவது:-
சென்னை எங்கள் ஊரை விட அருமையாக இருக்கிறது. பருப்பு சாதம், சப்பாத்தி என இருமாநிலங்களுக்கும் பொதுவான உணவுகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தி, வேலை தந்து அழகு பார்க்கிறார்கள். கொடுக்கும் வேலையை நாங்களும் சலிக்காமல் திறம்பட செய்துகொடுக்கிறோம். அதனால் எங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு உருவாகியிருக்கிறது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார்:-
நான் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சாதாரண ஆளாகவே வந்தேன். இப்போது மாஸ்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வேலையை நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கு சூழல் இருக்கிறது. எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,100 சம்பளம் கிடைக்கிறது. கடை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் வேலைக்கு செல்வேன். கடைக்காரரும் என்னை கனிவோடு பார்த்து கொள்கிறார். நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
சென்னையில் உள்ள பீகார்வாசிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஆசிஷ்குமார் கூறியதாவது:-
பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வசித்து வருகிறார்கள். கட்டுமான தொழிலில் தொழிலாளியில் இருந்து, மத்திய அரசு பணியில் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 3-வது தலைமுறையாக சென்னையில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எந்த பிரச்சனையும் நாங்கள் சந்தித்தது இல்லை. யாரும் பீகாரை சேர்ந்தவர்களை துன்புறுத்தி ஒடுக்கவும் இல்லை. தமிழக மக்கள் ஒருதாய் பிள்ளைகளாகவே எங்களை பாவித்து, சகோதரத்துவத்துடன் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.
அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ராமபிரபு:-
பீகார் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கட்டுமான வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்துதான் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது தனியாக ஓரிடத்திலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்வது இல்லை. உணவுக்கும் தேவையான வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். இதுவரை எந்த புகாரும் அவர்கள் தெரிவித்தது இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக வரும் இத்தகைய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சவுகரியமாகவே இருக்கிறார்கள்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி:-
எனது கணவர் சந்தோஷ்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நான் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளேன்.
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள பெண்களும் அக்காள், தங்கை, அம்மா போன்று பழகி வருகின்றனர். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். சொந்த மாநிலத்தை விட இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்.
திருச்சியில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அகிலேஷ்:-
பீகாரில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடையாது. சாதிய பிரச்சனைகளும், ரவுடியிசமும் அங்கு நிறைய உண்டு. அங்கே ஏதாவது வேலை பார்த்தாலும் வருமானம் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற எந்த பிரச்சனையையும் நான் கண்டதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. உணவு, தங்குமிடம் என அனைத்தும் செய்து கொடுக்கிறார்கள். இங்கு மனநிறைவான வேலை. கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு அதுவே போதும்.
மதுரையில் சாலையோரம் ஹெல்மெட் விற்கும் பகராஸ் என்ற வாலிபர் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களுக்கு பிரச்சனை என்றால் சக வியாபாரிகள் ஆதரவாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். அனைவரும் எங்களுடன் உறவினர் போல் பழகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் கோபால் குமார் சிங் கூறியதாவது:-
நான் ராஜபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் 2 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இங்கு எந்த பயமும் இல்லாமல் வேலை பார்த்து வருகிறேன். வேலை பார்க்கும் இடத்திலும் எந்த இடையூறும் கிடையாது. எனது உடன் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் என்னை சகோதரரை போல் நடத்துகின்றனர். பீகாரைவிட ராஜபாளையத்தில் வேலை செய்து வருவதை மகிழ்ச்சியாக உணருகிறேன்.
நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தினேஷ்:-
நாங்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நாங்கள் நலமாக உள்ளோம்.
நெல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வித்யாசாகர்:-
நாங்கள் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் எங்களுக்கு முன்பாகவே பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.
இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.
அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.
செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை (அதாவது இன்று) விளக்கம் அளித்து பேச உள்ளேன். கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு இதற்கான விளக்கத்தை அளிப்பேன்,' என்றார்.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
- த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்று 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கூட்டம் நடந்த இடத்தின் அளவும், அதில் எத்தனை பேர் பங்கேற்க இயலும்? அளவுக்கு அதிகமாக எவ்வளவு பேர் அங்கு திரண்டு இருந்தனர் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு சி.பி.ஐ. தலைமை அதிகாரி பிரவீன் குமார் மற்றும் குழுவினர் வேலுச்சாமிபுரத்துக்கு சென்றனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணியை தொடர்ந்தனர். அப்பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சம்பவம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்தால் கேமராவில் பதிவான பதிவுகளை தங்களிடம் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு காரணமாக கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று கரூரிலிருந்து சென்ற அனைத்து வாகனங்களும் கரூர்-ஈரோடு சாலை முனியப்பன் கோவிலில் இருந்து கோவை ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன.
பின்னர் அந்த வாகனங்கள் ரெட்டிபாளையம் வழியாக ஈரோடு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால் அங்கு டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர்- ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து தடுப்பு வேலியை அகற்றுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள், போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.
இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜன் முன்னிலையில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஆர் பி முருகேஷ், மாநகராட்சி உறுப்பினர் நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
- சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை ஜெயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆக உள்ள அவினாஷ் குமார் ஐபிஎஸ், குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து டிசிபி-யான சங்கு செங்குன்றத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் பயற்சி பள்ளி எஸ்பி ஆக இருந்த மகேஸ்வரி, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
- சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.







