என் மலர்
மகாராஷ்டிரா
- எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இன்றி இளம்பெண் உயரமான கட்டிடத்தில் இருந்து தொங்கிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
- குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனே:
சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் தனது உயிரையே பணயம் வைத்து ஆபத்தான வீடியோக்களை எடுத்து வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்கள் சில நேரங்களில் உயிரையே பறித்து விடுகின்றன.
இதேபோல சமூக வலைதள பிரபலமாக விரும்பிய புனேயை சேர்ந்த மீனாட்சி சலுங்கே (வயது 23) என்ற இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரான மிகிர் காந்தி(27) என்பவரும் இதேபோன்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புனே நகரில் உயரமான பல மாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற மீனாட்சி சலுங்கே, தனது ஆண் நண்பரின் கைகளை பற்றிக்கொண்டு கட்டிடத்தின் விளிம்பில் அந்தரத்தில் தொங்கி சாகசத்தில் ஈடுபட்டார். எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இன்றி இளம்பெண் உயரமான கட்டிடத்தில் இருந்து தொங்கிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
இந்த காட்சிகள் இளம்பெண்ணும், அவரது நண்பரும் விரும்பியபடி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ஆனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் மடத்தனமான சாகசத்தில் ஈடுபட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய புனே போலீசார் சுயவிளம்பரத்திற்காக உயிரை பணயம் வைத்த இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் அதிரடியாக கைது செய்தனர். அதேநேரம் இந்த வீடியோவை எடுத்த 3-வது நபர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இவர்கள் செய்த குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Witness the life-threatening reel made by youngsters from Pune.
— Pune Mirror (@ThePuneMirror) June 20, 2024
Risking their lives to create a viral reel.
This particular video is seen going viral across all platforms
Police appeal: "Don't risk your lives for reels".#youngsters #socialmedia #reels #instagram… pic.twitter.com/UBMWt311g3
- சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
- நடப்பு தொடரில் இந்திய அணியின் விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
எனவே அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்தவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் பேசியதாவது:
விராட் கோலி பார்மில் இருக்கிறாரா, இல்லையா என்பதை பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள்.
இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல், பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.
உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- அடல் சேது கடல் பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி சாலையில் விரிசல்களைச் சுட்டிக்காட்டினார்.
- பொய்யின் துணையுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட 'பிளவு' திட்டத்தை வகுத்துள்ளது என்பது ஒன்று தெளிவாகிறது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், தெற்கு மும்பையை நவி மும்பையை இணைக்கும் மும்பை டிரான்ஸ்-ஹார்பர் லிங்க் என்றும் அழைக்கப்படும் அடல் சேது கடல் பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி சாலையில் விரிசல்களைச் சுட்டிக்காட்டினார்.
பகலில் பாலத்தை ஆய்வு செய்த படோல், பாலத்தின் கட்டுமானத் தரம் மோசமாக இருப்பதாகவும், சாலையின் ஒரு பகுதி ஒரு அடி வரை குழி வந்து விட்டதாகவும் கூறினார். கையில் ஒரு மரக் குச்சி, விரிசல்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் அதை இறக்கி, விஷயத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இதனையடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

அடல் சேது கடல் பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டி சாலையில் விரிசல்களைச் சுட்டிக்காட்டினார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம், அடல் சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
"அடல் சேது பாலத்தில் விரிசல் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த விரிசல்கள் பாலத்தில் இல்லை, ஆனால் உல்வேயிலிருந்து மும்பை நோக்கி எம்டிஎச்எல்லை இணைக்கும் அணுகுமுறை சாலையில் உள்ளது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று எம்எம்ஆர்டிஏ தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
"அடல் சேதுவில் எந்த விரிசலும் இல்லை.
அடல் சேதுவுக்கு எந்த ஆபத்தும் இல்லை."
ஆனால், பொய்யின் துணையுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட 'பிளவு' திட்டத்தை வகுத்துள்ளது என்பது ஒன்று தெளிவாகிறது.
தேர்தலின் போது அரசியல் சட்டத்தை மாற்றுவது, தேர்தலுக்குப் பிறகு தொலைபேசி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறப்பது போன்ற பேச்சுக்கள், இப்போது இதுபோன்ற பொய்யான பேச்சுகள்...
இந்த 'பிளவு' திட்டத்தையும், காங்கிரசின் ஊழலையும் நாட்டு மக்கள் தான் முறியடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- வங்கியில் லோன் கேட்டு சென்றபோது ஆவணங்கள் முழுமையாக இல்லை.
- வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தபோது, வங்கி அதிகாரியை மயக்கியுள்ளார்.
கூட்டறவு வங்கியின் முன்னாள் சிஇஓ-விடம் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என மிரட்ட 108 தவணை முறையில் 4 கோடி ரூபாய் மோடிச செய்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 66 வயதான முன்னாள் கூட்டணி வங்கி சிஇஓ வசித்து வருகிறார். இவர் வங்கியில் பணி புரிந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு, பெண் ஒருவர் வடாலா கிளை வங்கிக்கு லோன் தொடர்பாக வந்துள்ளார்.
லோன் தொடர்பான நடைமுறையில் சில ஆவணங்கள் முழுமை பெறாமல் இருந்துள்ளது. மேலும் லோன் தொடர்பாக அந்த பெண்ணின் வீட்டில் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக வங்கி அதிகாரியான சிஇஓ நேரடியாக அந்த பெண்மணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் வலுக்கட்டாயமாக அவருடன் உடல் தொடர்பாக தொடர்பு வைத்துள்ளார். பின்னர் 7300 ரூபாய் தவணையில் 3 லட்சம் ரூபாய் லோன் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த பெண் வங்கி அதிகாரியான சிஇஓ-வை மிரட்ட தொடங்கியுள்ளார். வாட்ஸ்அப்பில் தனக்கு அனுப்பிய நிர்வாண படத்தை குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவருக்கு அனுப்பி விடுவேன். அனுப்பாமல் இருக்க 8 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தள்ளார். தொடக்கத்தில் கடும் நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர் 2017-ல் இருந்து 2023 வரை 108 தவணையாக 4.39 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
அவரது வீட்டை விற்று, வருங்கால வைத்து நிதியை எடுத்து, பல்வேறு தனிநபர்களிடம் கடன் வாங்கி அதை கொடுத்துள்ளார்.
இறுதியாக 5 லட்சம் ரூபாய் கேட்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக கூறுங்கள் என தெரிவிக்க, இறுதியாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். அதன்பின் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீசார் கூறியது போல் தெரிவித்துள்ளார். அதை நம்பி அந்த 45 வயது பெண் வர போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர்.
ஒருநாள் ஆசை, நிர்வாண படத்தால் 4 கோடி ரூபாயை முன்னாள் வங்கி அதிகாரி இழந்துள்ளார். இது தொடர்பான மிரட்டலுக்கு ஆளாகும்போது உடடியாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் தங்களது மானம் பறிபோகிவிடும் என்ற அச்சத்தில் பணத்தை இழந்து வருகிறார்கள்.
- பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும்.
- 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்களில் அவர்கள் உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், சில நேரங்களில் அவை விபரீதத்திலும் முடிந்து விடுகிறது.
இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தில் இருந்து அந்தரத்தில் தொங்குவது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தின் மேற்பகுதியில் நிற்கும் இளம்பெண் ஒருவர் ஒரு வாலிபரின் கையை பிடித்துக்கொண்டு கீழே அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி உள்ளது.
இதனை 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கு வழங்கப்படுவது வழக்கம்.
- கடந்த முறை மோடி அரசு தனி மெஜாரிட்டி பெற்றபோதிலும் துணை சபாநாயகர் பதவியை வழங்க மறுத்துவிட்டது.
மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க பாஜக விரும்பவில்லை. துணை சபாநாயகர் பதவியையும் வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
பாராளுமன்ற வழக்கப்படி ஆளுங்கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். துணை சபாநாயகர் எதிர்க்கட்சியை சேர்ந்த நபருக்கு வழங்கப்படும்.
ஆனால் பாஜக கடந்த முறை 2-வதாக ஆட்சி அமைக்கும்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.
இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாலும், எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாலும் துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சரத் பவாரிடம் துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு "இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
மேலும், எதிர்கட்சி தலைவர் பதவி குறித்த கேள்விக்கு "முன்னதாகவே அதிக இடங்களை பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்" என்றார்.
மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் வாய்ப்பு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.
- மக்களவை தேர்தலில் நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
- மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். இரண்டு கிடைக்காததால் அதிருப்பு எனத் தகவல்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்த கூட்டணிக்கு நினைத்ததுபோல் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அஜித் பவார் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.-க்கள் சரத் பவார் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே அஜித் பவார் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் சகான் புஜ்பால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்த நடைபெற்ற வருவதாக தகவல் வெளியானது.
ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், அப்படி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில் "சகான் புஜ்வால்- சிவசேனா (யுபிடி) இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வந்த செய்தியில் ஒரு துளி கூட உண்மையில்லை. பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை" என்றார்.
ஒன்றாக இருந்த சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் புஜ்பால். இவர் சிவசேனாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிய போது அவருடன் சென்றார்.
மாநிலங்களவை எம்.பி. கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித் பவார் தன் மனைவியை நிறுத்தியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பியபோது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
- அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
- போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் படேல் தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் மராட்டியத்தில் ஒரே ஒரு இடம் காலியானது.
இந்த மேல்சபை எம்.பி. பதவிக்கு மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சுனேத்ரா பவார் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மராட்டிய சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே தெரிவித்தார்.
- ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.
- இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
- ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா சுர்வாசே(வயது23). இவர் சுரஜ் முலே(25) என்ற வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் இளம்பெண் காரில் அவுரங்காபாத், சுலிபஞ்சன் மலைக்கு சென்றார். மதியம் 2 மணியளவில் தத்தாதாம் கோவில் அருகில் சுவேதா சுர்வாசே, காதலனின் காரை பின்னால் நோக்கி ஓட்டினார்.
சரியாக கார் ஓட்ட தெரியாத போதும், சமூகவலைதளத்தில்(ரீல்ஸ்) பதிவிட கார் ஓட்டுவது போல இளம்பெண் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
சுவேதா சுர்வாசே பின்னால் நோக்கி காரை ஓட்ட, காதலன் சுரஜ் முலே செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது இளம்பெண் காரை சற்று வேகமாக ஓட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் 'பிரேக்கை' பிடிக்குமாறு இளம்பெண்ணை எச்சரித்தப்படி, காரை நோக்கி வேகமாக ஓடினார். ஆனால் இளம்பெண் காரை நிறுத்த பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் வேகமாக பின்நோக்கி சென்ற கார், 50 மீட்டர் தூரத்தில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மலையில் வேகமாக கீழே உருண்ட கார் சுக்குநூறாக நொறுங்கியது.
சில வினாடிகளில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து, அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மலை பள்ளத்தாக்கில் இறங்கி காரில் படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
சம்பவம் குறித்து குடாபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளம்பெண் ஓட்டிய கார் பின்னோக்கி வேகமாக சென்று, தடுப்பு வேலியை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது. கார் விழுந்த இடத்தை கண்டுபிடித்து செல்லவே மீட்பு குழுவினருக்கு 1 மணி நேரம் ஆகிவிட்டது" என்றார்.
இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
On Camera, Woman Reverses Car Off #Maharashtra Cliff, Falls 300 Feet, Dies
— NDTV (@ndtv) June 18, 2024
Read Here: https://t.co/KRKKoWvbkh pic.twitter.com/lk2L3BtZHW
- ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
- தடுக்க வந்தவரை தள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார்.
மகாராஷ்ர மாநிலம் மும்பை அருகே வசாயின் கிழக்கு பகுதியில் பரபரப்பான சாலையில் 28 வயது உள்ள ரோஹித் தனது முன்னாள் காதலி ஆர்த்தி ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் யாதவ், தனது முன்னாள் ஆர்த்தி யாதவ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து, ஸ்பேனருடன் அவரைத் துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் சாலையின் நடுவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகளின்படி, ரோஹித் ஆர்த்தியை ஸ்பேனரால் துரத்துவதும், அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை அடிப்பதும் போல் உள்ளது. அந்த வீடியோவில் ஆர்த்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்போது ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ரோஹித்தை தடுக்க முயன்றார். இருப்பினும், தடுக்க வந்தவரைதள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார். இதை அடுத்து அந்த நபர் பின்வாங்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து யாரும் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை.

இந்த கொடிய சம்பவத்தை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அதில் ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்... ஏன் அப்படி செய்தாய்?' என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான்.
இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறு வருட நீண்ட உறவைத் தொடர்ந்து அவர்கள் பிரிந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது.
வசாயின் கிழக்கு சின்ச்பாடா பகுதியில் அதிகாலையில் ஆர்த்தி யாதவ் வேலைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் காலை தொண்டர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியானது.
- தொண்டர் காலை சுத்தம் செய்யவில்லை. தண்ணீர் மட்டுமே ஊற்றினார் என நானோ படோலே விளக்கம்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலில் ஒட்டிய சேற்றை தொண்டர் ஒருவர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் நானோ படோலே காரில் இருந்து கொண்டு காலை நீட்டுகிறார். காங்கிரஸ் கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்து காலில் இருந்து சேற்றை சுத்தம் செய்கிறார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் ஷேசாத் பூனவல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் "மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலை காங்கிரஸ் கட்சி தொண்டர் சுத்தம் செய்கிறார். இவர்கள் தங்களை ராஜா மற்றும் ராணியாக நினைத்துக் கொண்டு வாக்காளர்களையும், தொண்டர்களையும் அடிமைகள் போல் நடத்துகிறார்கள்.
அதிகாரத்தில் இல்லாதபோதே மக்களை இப்படி செய்கிறார்கள் என்றால் நினைத்து பாருங்கள். தவறுதலாக கூட அதிகாரத்திற்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள். நானோ படோலே மற்றும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நானோ படோலே கூறுகையில் "மழைக் காரணமாக தனது காலில் சேறு ஒட்டிக்கொண்டது. ஆகவே, நான் தண்ணீர் கேட்டேன். கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்தார். அவர் காலில் ஊற்ற நான் சுத்தம் செய்தேன்" என்றார்.






