என் மலர்
மகாராஷ்டிரா
- கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார்.
- ஆர்டர் நிலை ‘இன்று வந்து சேர்ந்துவிடும்’ என்று காட்டி உள்ளது.
ஆன்-லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வினியோகம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்-லைன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைந்து சேவையை வழங்கி வருகின்றனர்.
ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு வாலிபர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஆஹ்சன் கர்பாய் என்ற வாலிபர் பிளிப்கார்டில் ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் ஸ்லிப்பர்களை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார். ஆனால் அவை உடனடியாக வினியோகம் செய்யப்படவில்லை.
பல ஆண்டுகளாக அவரது ஆர்டர் நிலை 'இன்று வந்து சேர்ந்துவிடும்' என்று காட்டி உள்ளது. ஆனால் அந்த நிலை மட்டும் மாறாமலேயே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் திடீரென பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த ரூ.485 மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பு வினியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.
அதன்படி அவருக்கு அந்த ஆர்டர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தனது அனுபவத்தை அவர் எக்ஸ் தளத்தில் தனது ஆர்டரின் வரலாற்றுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார்.
அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
- ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
- பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு மந்தனா என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள் அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர். ஆனால் இந்த கணக்கு 2016-ம் ஆண்டு செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில் அந்த நிறுவனம் ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் செய்தது.
புகாரின் பேரில் மந்தனா நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தனா நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 140-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், 5 லாக்கர்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் லெக்சஸ் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 உயர்ரக கார்களும் ரோலக்ஸ், ஹூப்லாட் போன் பிரபல பிராண்டுகளின் கைக்கடிகா ரங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- இன்று அதையும் தாண்டி 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று 79 ஆயிரத்தை கடந்த 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இது இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று குறைந்த பட்சமாக 78,467.34 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இன்று இதுவரை இல்லாத வகையில் 24,087.45 புள்ளிகளை எட்டி வர்த்தகம் ஆனது. நேற்று 23,868.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,881.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய குறைந்த வர்த்தகம் 23,805.40 புள்ளிகள் ஆனது.
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.
- மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை
- மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை
மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்று தகவலை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்லும் நிலையில், மாட்டின் செயல் பயனர்களை கவர்ந்துள்ளது.
- வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 700-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
நகரப்பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து இடையூறு ஏற்படுத்துவதோடு, பொது மக்கள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் புனேவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் மாடு ஒன்று போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு சிக்னலுக்காக பொறுமையாக காத்து நிற்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
புனே போக்குவரத்து போலீசார் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருப்பதையும், இதைப்பார்த்த மாடு, சிக்னல் பச்சை நிறமாக மாறும் வரை பொறுமையாக காத்து நிற்பது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 700-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்லும் நிலையில், மாட்டின் இந்த செயல் பயனர்களை கவர்ந்துள்ளது.
- நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
- பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய தொழிலதிபரும், டாட்டா சன்ஸ்ஸின் முன்னாள் தலைவருமானவர் ரத்தன் நவால் டாட்டா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மக்களிடம் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.
'நீங்கள் உதவினால் நான் மனதார பாராட்டுவேன்' என்னும் தலைப்பில் நாயின் புகைப்படத்துடன் பதிவை தொடங்கும் ரத்தன் டாட்டா, எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள 7 மாத நாய்க்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அந்த நாய் சந்தேகப்படும்படியான டிக் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மும்பையில் இருந்து நாய் ரத்த தானம் செய்பவர் அவசரமாக தேவை...
ரத்தம் வழங்கும் நாயானது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானதாகவும், 1 முதல் 8 வயது உடையதாகவும், எடை சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அந்த நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அந்த நாய் எந்த நோய்க்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார்.
- வீடியோவை இன்ஸ்டாகிராமில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர்.
தாயான பெண்மணிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பச் சுழலில் மூழ்கிப்போவார்கள். வெகுசிலரே வெளிப்பட்டு சாதனைப் பெண்மணிகளாக மிளிர்கிறார்கள்.
அப்படியொரு சாதனை தாய், இப்போது வலைத்தளங்களில் அதிகம் வைரலாகிறார். அவர் கையில் தனது 2 வயது குழந்தையை வைத்திருக்கிறார். மற்றொரு கையில் 2 பாட்டில்களை வைத்து மேலே சுழலவிட்டு பிடித்து சாகசம் செய்கிறார். அதேபோல பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார். இந்த சாகசத்தில் ஈடுபடும்போது அவர் புடவையே கட்டியிருக்கிறார். அந்த சாதனைப் பெண்மணி புனே நகரை சேர்ந்த கவிதா மேதார் என்று தெரியவந்தது. அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அவர் சாகசம் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர். 23 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட் ஏற்றம் கண்டன.
- மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சரிவை சந்தித்தன.
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்து வர்த்தகமானது.
சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தை வர்த்தகம் நேற்று 78,053.52 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,094.02 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல உயர்ந்து வண்ணம் இருந்தது. மதியம் 3 மணியளவில் 78,759.40 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். அதன்பின் சற்று குறைந்து வர்த்தகம் சென்செக்ஸ் 78,674.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.80 சதவீதம் உயர்ந்தது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவிற்கு 23,889.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகம் நிஃப்டி 23721.30 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,723.10 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
சற்று ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் புதிய உச்சமான 23,889.90 புள்ளிகளில் வர்த்தகமாகி 23,868.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட், சன் பார்மா, அதானி போர்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.
மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆசிய மார்க்கெட்டுகளான சியோல், டோக்கியோ, ஷாங்காள், ஹாங் காங் மார்கெட்டுகளும் இன்று உயர்ந்து காணப்பட்டன.
- நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
- எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள் சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
- ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
இன்றைய இளம் பருவத்தினர், சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை விட போன் மெசெஜ் மூலம் மற்றவர்களிடம் பேசுவதை விரும்புகிறார்கள். இதனாலேயே மொபைல் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்னாப்சாட் போன்றவை அதிகம் பிரபலமாக உள்ளன.
ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன.
இதுபோன்று கிடைக்கும் செயலிகளை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், மெசெஜிங் செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷட்ராவில் உள்ள தானே மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய தந்தை மொபைலில் ஸ்னாப்சாட் செயலியை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காததால் கோபம் அடைந்தார். இதையடுத்து சம்பவ நாளன்று குடும்பத்தில் அனைவரும் உறங்கியப்பின் அவளது பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி பல எல்லைகளை கடந்து வரும் சூழலில், அதன் மீது கொண்ட காதலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே இந்த 9152987821 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.
- இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
- கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்
பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான பாலியல் விழுப்புணர்வான குட் டச் பேட் டச் பயிற்சியின்மூலம் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த குட் டச் பேட் டச் விழுப்புணவர்வின்போது அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தான் தனது தந்தையாலும், ஒன்றுவிட்ட சகோதரனாலும், உறவினறாலும் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.உடனே இதுகுறித்து போலீசிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் தந்தையும், ஒன்றிவிட்ட சகோதரனும், உறவுக்கார அங்கிள்- உம் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
துன்புறுத்தலின்போது கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






