என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
- சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
ரவுனக் குர்ஜார் ஒரு முறை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் கொடுத்து காலணியாக தைக்குமாறு ரவுனக் குர்ஜார் கூறி உள்ளார். அதன்படி அந்த தொழிலாளி அவரது தோலை காலணியாக வடிவமைத்து கொடுக்க, அதனை அவர் தாய்க்கு பரிசாக வழங்கினார். சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். மேலும் ராமரின் கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறி உள்ளார். எனவே இந்த யோசனை என் மனதில் தோன்றியது. அதன்படி எனது தோலில் இருந்து காலணிகளை உருவாக்கி என் அம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்தேன். சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.
குர்ஜாரின் தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக கருதுகிறேன். கடவுள் அவரை எல்லா கஷ்டங்களில் இருந்தும் பாதுகாத்து எந்த துக்கமும் இல்லாத வாழ்க்கையை அவருக்கு ஆசீர்வதிக்கட்டும் என்றார்.
- எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
- அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.
அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.
மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.
அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது
இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.
நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.
இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.
வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது.
- தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- நான்கு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- மத்திய இணை மந்திரியாகவும் இருந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவரான சுரேஷ் பச்சோரி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறையின் இணை மந்திரியாக இருந்துள்ளார். மேலும், நான்கு முறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகெதி, முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் (சஞ்சய் சுக்லா, அர்ஜுன் பாலியா, விஷல் பட்டேல்) மற்றும் பலர் இன்று பா.ஜனதாவில் இணைந்தனர்.
காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் பச்சோரி. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குழுவில் உள்ள ஒரு நபராக இருந்தவர். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
முன்னாள் எம்.பி. ராஜுகெதி பழங்குடியினத்தின் முக்கிய தலைவர் ஆவார். இவர் தார் (பழங்குடியின தொகுதி) தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 1998, 1999 மற்றும் 2009-ல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாக 1990-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோகன் யாதவ்
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhavan), உள்ளது.
இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
#WATCH | On the incident of fire at Vallabh Bhavan State Secretariat in Bhopal, Madhya Pradesh CM Mohan Yadav says, "It has come to my knowledge that a fire broke out on the third floor of the old building of Vallabh Bhavan. On the basis of the information received from the… https://t.co/Is5f8TF7Mv pic.twitter.com/1pu23CA7ge
— ANI (@ANI) March 9, 2024
தற்போது வரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
- அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது
- 1983ல், ஜபல்பூர் பல்கலைக்கழகம் "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" என பெயர் மாற்றப்பட்டது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜபல்பூர் (Jabalpur) நகரம்.
99.63 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது.
இப்பல்கலைக்கழகம், 1983ல், "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" (Rani Durgavati Vishwavidyalaya) என பெயர் மாற்றப்பட்டது.
சுமார் 20 நாட்களுக்கு முன்னர், முதுநிலை கணினி அறிவியல் (M.Sc Computer Science) படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.
நேற்று முன் தினம் (மார்ச் 5) நடைபெறுவதாக இருந்த இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது.
இதையடுத்து தேர்விற்காக 20 நாட்களுக்கும் மேலாக படித்து வந்த மாணவர்கள், மார்ச் 5 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தனர். ஜபல்பூரை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல மாணவர்கள் அதிகாலையிலேயே புறப்பட்டு ஜபல்பூர் வந்திறங்கி, பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு வந்தனர்.
ஆனால், அங்கு தேர்விற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாதது கண்டு அதிர்ந்த மாணவர்கள், இது குறித்து பேராசிரியர்களிடமும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேர்வு ஏதும் இல்லை என்றும், கேள்வித்தாள் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்பதிலால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கள் கண்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை வேந்தர் சந்தித்தார்.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். கே. வர்மா, "தேர்வாணையர், (exam controller) தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த தகவலை மாணவர்களுக்கு முறைப்படி தெரிவிக்க அதிகாரிகளும், பேராசிரியர்களும் தவறி விட்டனர். யார் இச்சம்பவத்திற்கு பொறுப்பு என கண்டறிய ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்திய தேசிய மாணவர் சங்க (National Students' Union of India) தலைவர் சச்சின் ரஜக், "பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தையும் கவனக்குறைவையுமே இது காட்டுகிறது. ஒரு தேர்விற்கான கால அட்டவணையையும் தேர்விற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் எவ்வாறு மறக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
- பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தியது.
- ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்று திரண்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் "மோடி-மோடி" என கோஷமிட்டனர். இதை கேட்டு நடைபயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி, கோஷம் எழுப்பியவர்களுக்கு காற்றில் முத்தங்களை பறக்க விட்டார்.
பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பா.ஜ.க.-வை சேர்ந்த முகேஷ் தூபே தலைமையிலான ஆதரவாளர்கள் ராகுல் காந்தியை நோக்கி "மோடி-மோடி" என்ற கோஷங்களை எழுப்பினர்.
எனினும், அவர்களிடம் கைகுலுக்கி, பேச முற்பட்டார் ராகுல் காந்தி. அப்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். சிறிது நேரம் அங்கிருந்த ராகுல் காந்தி அதன்பிறகு தனது வாகனத்தில் ஏறி அவர்களை நோக்கி வணக்கம் தெரிவித்து, கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை முத்தங்களை காற்றில் பறக்க விட்டார்.
- "பணமதிப்பிழப்பு" மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) சிறு தொழில்களை அழித்து விட்டது
- வேலைவாய்ப்பின்மை பாகிஸ்தானில் 12 சதவீதம்; இந்தியாவில் 23 சதவீதம் என்றார் ராகுல்
"இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை" (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தின், குவாலியர் (Gwalior) நகரில், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
தனது உரையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"பணமதிப்பிழப்பு நடவடிக்கை" (demonetization) மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) ஆகியவை சிறு மற்றும் குறு தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்களை மோடி அடியோடு அழித்து விட்டார்.
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.
பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் நிலவுகிறது. இங்கு 23 சதவீதம்; அங்கு 12 சதவீதம்தான்.
வங்காள தேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட அதிகமாக வேலையில்லாத இளைஞர்கள் இங்கு உள்ளனர்.
இவையனைத்திற்கும் பிரதமர் மோடிதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குவாலியரில், இந்திய ராணுவத்தின் "அக்னிவீர்" (Agniveer) திட்டத்தில் இணைந்த வீரர்களுடனும், முன்னாள் ராணுவ வீரர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக நடக்கும் அநீதி ஆகிய தீமைகளுக்கு எதிராக போராடும் விதமாகவும், நாடு முழுவதும் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சிக்கு எதிராகவும் தனது யாத்திரையின் பெயரில் "நியாய்" எனும் வார்த்தை சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
- ம.பி.யின் விதிஷா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார்.
போபால்:
பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் போட்டியிடு கிறார். அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது 5-வது முறையாக அந்த தொகுதியில் நிற்கிறார்.
கடந்த 1996-ல் இந்த தொகுதியில் இருந்து தான் வாஜ்பாய் வெற்றிபெற்றார். இதேபோல், சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ல் இங்கு இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சவுகான் கூறுகையில், மத்திய பிரதேச மக்களின் நெஞ்சில் பிரதமர் மோடி இருக்கிறார். இதனால் பா.ஜ.க. 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.
- பா.ஜ.க. மக்களை ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிறது.
- காங்கிரஸ் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.
போபால்:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. இங்கு மொரேனா பகுதியில் இன்று நடந்த யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தித் துறை ஆகிய அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து செல்வங்களும் ஒரு சில தொழிலதிபர்கள் கையில் உள்ளது.
நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை பரவுவதற்கு என்ன காரணம் என மக்களிடம் கேட்டேன். அதற்குக் காரணம் அநீதி என அனைவரும் பதிலளித்தனர். நாட்டில் மக்களுக்கு பல்வேறு வழிகளில் அநீதி இழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்தியாவில் வெறுப்பு பரவுகிறது.
ஒரு பக்கம் ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பா.ஜ.க. பிரிக்கிறது. மறுபுறம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் புனித பூமிக்குள் நுழைந்துள்ளது.
நாட்டில் 50 சதவீதம் ஓபிசி, 15 சதவீதம் தலித் மற்றும் 8 சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட காணமுடியாது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை காங்கிரஸ் சட்டப்பூர்வமாக வழங்கும் என குறிப்பிட்டார்.
- கிராம மக்கள் ஒரு விழாவிற்குச் சென்று சொந்த ஊர் திரும்பிய போது வேன் விபத்தில் சிக்கியது.
- 21 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற வேன் (pickup vehicle) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்கள், தங்களது சொந்த ஊரான டெவாரி கிராமத்திற்கு வாகனத்தில திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு பட்ஜார் என்ற இடத்தில் அந்த வாகனம் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
- பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
- 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் உள்ள கண்காட்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2004- 2014 வரை சோனியா- மன்மோகன் அரசு மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 1,99,000 கோடி மட்டுமே வழங்கியது.
அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ. 7,74,000 கோடி கொடுத்தார். ஒவ்வொரு யாத்திரைத் தளங்களையும் பாஜக அரசு மேம்படுத்தியது.
நோய் வாய்ப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை உயிர்ப்பித்து வளர்ந்த மாநிலமாக மாற்றியது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் இந்தியா மீண்டும் மகத்துவம் பெறும்.
இந்தியா வல்லரசாக மாறும். மேலும், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.
இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு இணையான கட்சி. காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பைசா கூட திருடினார் என்று அவர்களால் குற்றம் சாட்ட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்