என் மலர்
இந்தியா
- இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
- எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.
போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
முன்னதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை மற்றும் திடீர் மரணம் அடைந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட இறந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதே நேரத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்ட நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட 13 அதிகாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
நவம்பர் 4 முதல் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொதுமக்களிடையே பரவலான அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
- பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
- இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் சந்தைக்குச் சென்றபோது ஒரு பானி பூரி தள்ளுவண்டி கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடம்பெயர்ந்தது. பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
இதனால் அவர் கடுமையான வலியை சந்தித்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
எனவே அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடப்பெயர்வை அங்குள்ள மருத்துவர்கள் நீண்ட முயற்சியின் பின் சரி செய்தனர்.
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது.
- செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார்.
- தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 2023 டிசம்பரில் நடத்திய தேர்தல்களை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் சத்யவ்ரித் காடியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அப்போதைய WFI தேர்தலில், சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார். அனிதா ஷியோரானாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் ஆதரித்தனர்.
எனவே, WFI தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை என்றும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டி மல்யுத்த வீரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை, முந்தைய இரண்டு விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராகவில்லை. மனுதாரர்கள் தற்போதைய வழக்குகளைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
- பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது.
ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட உள்ளது. 'சேவா தீர்த்' என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.
கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான 'இந்தியா ஹவுஸ்' கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை 'கர்தவ்ய பாதை' என்றும், மத்திய செயலகம் 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.
- நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
"நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
- காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
- தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது.
மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்,
"பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த கூற்று ஏற்றுகொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி பூசல் என்பது வெறும் கண்துடைப்பு. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள், அதை நிறைவேற்றினார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும். திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எல்லா இடங்களிலும் போதைப்பொருள். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுப் போடுவார்களா?
யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. பீகார் போல இங்கும் மாற்றம் நிகழும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் எங்களுக்குதான் வரும். தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது. எண்பது வரலாறுகளில் கூட்டணி இல்லாமல் எம்ஜிஆர் எவ்வாறு வெற்றிப்பெற்றார்? அண்ணாமலை எங்கள் கட்சியில் இருந்தவர்.
கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கமாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எடப்பாடி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலவரத்தை தூண்டக்கூடிய கதாநாயகனாக சு.வெங்கடேசன் இருப்பார் என சந்தேகமாக இருக்கிறது. அப்படி கலவரம் நிகழ்ந்தால் சு. வெங்கடேசன்தான் பொறுப்பு. தீபம் ஏற்றுவதில் சு. வெங்கடேசனுக்கோ, அவரது குடும்பத்திற்கோ, அவர்சார்ந்த கட்சிக்கோ எதாவது பிரச்சனை இருக்கிறதா?" என தெரிவித்தார்.






