என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்கு எண்ணிக்கை நாளில் தி.மு.க. வெற்றி என Flash News வரவேண்டும்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
- விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாசக்கார கோவை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சந்தித்த அனைவரும் நாம் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்.
நான் இன்று சந்தித்த கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் 200 சதவீதம் தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் ஆற்றல் தான் எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது. இவர் எதிராளிகளுக்கு சிம்மசொப்பனம்.
நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் நெஞ்சுரத்துடன் கட்சிக்கும் நாட்டிற்கும் செந்தில் பாலாஜி பணியாற்றுகிறார்.
நான் இங்கு வந்தது உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல உங்களை பார்த்து நான் உற்சாகமடையத்தான்.
திமுக கூட்டணி வெற்றி பெற்றது என வாக்கு எண்ணிக்கை நாளில் Flash News வரவேண்டும்.
பல்வேறு இடர்பாடுகளை கடந்து அத்திக்கடவு- அவினாசி திட்டம், அவினாசி சாலை மேம்பாலம், விசைத்தறி 100 யூனிட் மின்சாரம் நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, அதனை இம்முறை மாற்றிக்காட்ட வேண்டும்.
உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம், தொல்லியல் ஆய்வு, தோழி விடுதி, புதிய இ-பஸ் திட்டங்கள் வரவிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






