என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தில் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்,

    "தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!

    தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!

    தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!"

    என்று தெரிவித்துள்ளார்.

    • "காசா எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "காசா பற்றி எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    "பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
    • ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதாக அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் படத்தை ரீரிலீஸ் செய்கிறார்.

    கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    தற்போது கார் ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.  

    • இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
    • ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

    ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.

    இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.  வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர்களான அடல் மற்றும் குர்பாஸ் முறையே ரன் எதுவும் எடுக்காமல் மற்றும் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் விளைவாக, வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், ஒருங்கிணைப்பு பற்றியும் பேசுவார் எனத் தகவல்.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் வாய்ப்பு.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா சந்தித்து பேசினார். அவருடன் தம்பிதுரை எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சென்றனர்.

    சில நாட்களுக்க முன்னதாக செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைவது தொடர்பாக பேசியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தங்குகிறார். நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    • ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடம் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

    அதன்படி, பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (735 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (731 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார்.

    ஹர்மன்பிரீத் கவுர் 12வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (725 புள்ளி) 2ம் இடத்திலும், மேஹன் ஸ்கட் (691 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடிக்கிறார்.

    • எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
    • நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.

    நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.

    பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.

    இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

    சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

    கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.

    • வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
    • வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.

    சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
    • மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றார்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    ×