என் மலர்
ஆசிரியர் தேர்வு
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது.
- இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்கள் குவித்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ல் நமீபியா வீரர்கள் (70 ரன்கள்) படைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
- கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியது.
- இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர்
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சுமார் 5,800 பினே மெனாஷே சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தற்போது மொத்தமாக தங்களின் 'வாக்களிக்கப்பட்ட பூமி'யான இஸ்ரேலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
யார் இந்த பினே மெனாஷே?
இவர்கள் தங்களை விவிலியக் கதைகளில் வரும் இஸ்ரேலின் பத்து காணாமல் போன பழங்குடிகளில் ஒன்றான 'மெனாஷே' வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
விவிலியத்தின்படி, கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியபோது, அங்கிருந்த 12 பழங்குடியினக் குழுக்களில் 10 குழுக்கள் சிதறிப் போய் வரலாற்றில் இருந்து மறைந்தன.
அதில் ஒரு பிரிவினர் ஆப்கானிஸ்தான் வழியாக வடகிழக்கு இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வடகிழக்கு இந்தியாவின் குக்கி-சோ இனக்குழுவின் ஒரு பகுதியினராக இருந்த இவர்கள், 1951இல் முறையாகத் தங்களை யூதர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்பு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்தனர்.
2005-ஆம் ஆண்டில், இஸ்ரேலின் தலைமை ராபி இவர்களை இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

தற்போது சுமார் 5,000 பினே மெனாஷே மக்கள் ஏற்கனவே இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.
மீதமுள்ள 5,800 பேரையும் 2030-ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கு அழைத்து வர இஸ்ரேல் அமைச்சரவை கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்துக்கு அரசு, 27 மில்லியன் டாலர் (சுமார் ரூ.225 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.
தங்கள் நம்பிக்கைப்படி, 2,700 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் தாய்நாட்டிற்குத் திரும்பும் இந்த குடியேற்றத்தை இம்மக்கள் 'அலியா' என்று அழைக்கின்றனர்.
இவர்கள் இஸ்ரேலின் வடக்கு பகுதியான கலிலீ பகுதியில் குடியமர்த்தப்பட உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் அச்சத்தால் இப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பகுதியை மீண்டும் மேம்படுத்தவே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர்களுக்கான விமானக் கட்டணம், எபிரேய மொழி வகுப்புகள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை இஸ்ரேல் அரசு கவனித்துக் கொள்ளும். இவர்கள் 2026 முதல் 2030-க்குள் படிப்படியாக இஸ்ரேல் சென்றடைவார்கள்.
தற்போது பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இவர்களின் இடப்பெயர்வு குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- முன்னதாக NCERT புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
- சிவாஜி மன்னர் குறித்து ஒரேயொரு பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளிக் கூடங்களில் கடந்த 70 வருடங்களாக வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், எந்தவொரு முஸ்லிமும் முகாலாய மன்னர் அவுரங்கசீப்பை ஹீரொ என கருதிருக்கமாட்டார் என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டசபையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேசியதாவது:-
முன்னதாக NCERT புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. சிவாஜி மன்னர் குறித்து ஒரேயொரு பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது சிவாஜி மகாராஜாவுக்கு 20 பக்கங்களை உருவாக்கியுள்ளது.
கடந்த 70 வருடங்களில் வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுங்கரசீப்பை ஹீரோ என கருதியிருக்கமாட்டார். படையெடுத்தவர்களை ஹீரோக்களாகக் கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.
திப்பு சுல்தான் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதத்திற்கு நான் செல்லவிரும்பவில்லை. எனினும் திப்பு சுல்தான்- சிவாஜி மகாராஜா இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நாங்கள் எதிர்ப்போம். பிரிட்டீஷ்க்கு எதிராக திப்பு சுல்தான் போரிட்டிருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவ்வாறு செய்தார். எனினும், 75 இந்துக்கள், 33 ஆயிரம் நாயர்களையும் கொன்றார்.
இவ்வாறு தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.
- கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
- உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே இந்த விதிகள் வகுக்கப்பட்டன. இதில் என்ன தவறு இருக்கிறது?
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரித்து வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி அன்று தமிழக அரசு அரசியல் நிகழ்வுகளுக்காக வெளியிட்ட அரசாணையில் உள்ள சில நிபந்தனைகள் தன்னிச்சையானவை மற்றும் பாரபட்சமானவை என தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், கரூர் சம்பவத்திற்குப் பிறகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே இந்த விதிகள் வகுக்கப்பட்டன. இதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தவெக மனு தொடர்பாக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான்.
- தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது.
கோவில்பட்டி:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள். திசை மாறி போனார்கள். இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலையை இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் பார்க்கப் போகிறோம்.
சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை கட்சியில் உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து வாக்களித்தால் ,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில ரூ.10 ஆயிரம் வந்து விழும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று பெரிய அறிவாளியாக இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க 2 பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த 2 பூஜ்ஜியத்திற்கு முன்னாடி 2 சேர்த்து 200 வாங்குவோம்.
தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை.
இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவு.
- ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் விலைமதிப்பற்ற வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக மக்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டுமென்றால், வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிய மனுக்களை விசாரித்தபோது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்தது.
மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய, கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஒரு கட்டாய நடைமுறை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவாக இருப்பதாக தனது அனுபவத்தில் உணர்வதாக நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.
கிராமங்களில் வாக்குப்பதிவு நாள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, குழுவாகப் பாட்டுப் பாடியும் ஆடியும் வாக்குச்சாவடிகளுக்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், "நோட்டா முறையினால் வாக்குப்பதிவு சதவீதத்திலோ அல்லது வேட்பாளர்களின் தரத்திலோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியது.
ஒரே ஒரு வேட்பாளர் போட்டியிடும் இடத்தில், அந்த வேட்பாளருக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம்.
- வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினாத்தாளில் தவறு, பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தவறு குறித்து புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
- ‘ஓ பட்டர்பிளை’ படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மேலும், 'ஓ பட்டர்பிளை' படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 2.28 நிமிடங்கள் கொண்ட டிரெய்லரில் தம்பதிக்குள் ஏற்படும் பிரச்சனை, இதனிடையே, அவர்களுக்கிடையே வரும் கதாநாயகியின் முன்னாள் காதலனால் ஏற்படும் பிரச்சனை அதனால் நடைபெறும் கொலை என முடிவடைகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
- மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கினார்.
- எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கேட்ஸைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரி உள்ளார்.
இதுதொடர்பாக, அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய டவுன் ஹால் கூட்டத்தின்போது பில்கேட்ஸ் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டவுன் ஹாலில் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷிய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என தெளிவுபடுத்தினார்.
எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு எனக்கூறிய பில்கேட்ஸ், நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தைச் செலவிட்டதாகவும் பில்கேட்ஸ் கூறினார். நான் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதில்லை என்பதை உறுதிபடுத்தினார் என தெரிவித்துள்ளது.
- ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகின்றன.
- இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்றார்.
முலீம் ஆன்தெர்ரூர்:
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முலீம் ஆன்தெர்ரூர் நகரில் நடைபெற உள்ளன.
இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் மெத்வதேவ் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதுகிறார்.
- கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார்.
- அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தியாகச் செம்மல் தோழர் நல்லக்கண்ணு, வயதுமுதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.
கட்சியின் தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி,
"அடிதட்டு மக்கள், தொண்டர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நல்லகண்ணு அவர்கள் நினைவு கூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அதேபோல், அவரது எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது ஆறுதல்கள் எப்போதும் அவரது குடும்பத்தினருடனும், தொண்டர்களுடனும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி,
"தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த வாழ்க்கை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கானது.
கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக (90 ஆண்டுகள்), அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார். அவருடைய குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.






