என் மலர்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.815-ம் சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 520-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
05-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
04-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
05-03-2026- ஒரு கிராம் ரூ.295
04-03-2026- ஒரு கிராம் ரூ.295
- நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 3-வது முறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
3-வது முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது, டி20 வடிவத்தில் எந்த அணியும் இதைச் செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள்.
அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் கிரிக்கெட்டின் சிறப்பு பிராண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்கள். அகமதாபாத்தில் இந்திய அணிக்கு கிடைத்த அபார வெற்றி. போட்டி முழுவதும்விளையாடிய அதிரடி கிரிக்கெட். கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து போராடி மீண்டும் உலக சாம்பியன்களாக மாற இந்திய வீரர்கள் காட்டிய அற்புதமான குணம். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து வீரர்களுக்கும் நிர்வாகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
- மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்த நிலையில் 70 வயது கணவனை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்த நிலையில் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது.
- அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது.
ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
மேலும், இது ஆறுதலாக இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் காயமடைந்து தற்போது அல் கார்ஜில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"நேற்று மாலை அல் கார்ஜில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயம். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. ஆலோசகர் (CW) ஸ்ரீ ஒய். சபீர் நேற்று இரவு அல் கார்ஜுக்கு சென்று இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த இந்தியரை சந்தித்தார்," என்று இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதியை தாக்கிய குறிப்பிடப்படாத ராணுவ ஏவுகணையால் ஒரு இந்தியரும் ஒரு வங்கதேச நாட்டவரும் கொல்லப்பட்டதாக சவுதியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் முன்பு கூறியிருந்தது.
அல் கார்ஜ் ஒரு பெரிய விமான தளத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு தெஹ்ரான் வளைகுடாவைத் தாக்கியதால் கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதி மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.
- சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
- டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற டீம் இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மீண்டும் சாம்பியன்கள்!
டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மைதானத்தில் உள்ள மன உறுதி முதல் மைதானத்தில் துடிக்கும் மில்லியன் கணக்கான இதயங்கள் வரை, இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது.
உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
- இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டி எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் கம்பீரை தோனி கலாய்த்ததால் அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு 'கில்லர் காம்போ'. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா எக்ஸ் தள பக்கத்தில் "இந்தியா தி சாம்பியன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 'என்ன ஒரு அணி, என்ன ஒரு சிறப்பான ஆட்டம்... நாட்டிற்கு என்ன ஒரு பெருமையான தருணம். டி20 உலகக் கோப்பையை வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், 'நாம ஜெயிச்சிட்டோம், என்ன ஒரு போட்டி' என தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் எக்ஸ் தள பக்கத்தில், சக்திவாய்ந்த அணியின் சக்திவாய்ந்த வெற்றி பல சாதனைகளை முறியடித்துள்ளது. சஞ்சு, பும்ரா, இஷான், ஹார்டின், வருண், ஆக்சர் துபே, அபிஷேக் மற்றும் சூர்யாவை நேசிக்கிறேன்... என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம்பிரபு, 'டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்' என்று கூறியுள்ளார்.
- இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
- அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை விசாரித்த கோர்ட்டு, இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியின் ஆதரவாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஏற்கனவே இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் சிறையில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். பெங்களூருவில் கட்டப்பட்டு இருந்த கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றது அந்த விழாவுக்கு வந்தவர்களை திணறடித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். மருத்துமனையை திறந்து வைக்கும் தகவல் அறிந்து அங்கு கூடிய ரசிகர்களால் பரபரப்பான சூழல் உருவானது. மிகக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் திரண்டதால், மருத்துவமனைக்குள் தள்ளுமுள்ளு சூழல் உருவானது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் விழா ஏற்பட்டாளர்கள் திணறினர்.
இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ காண ஒன்று திரண்ட ரசிகர்களால் திறப்பு விழாவுக்காக தயாராகி இருந்த நகரும் படிக்கட்டுகள் உள்பட மருத்துவமனை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தது.
புதிய மருத்துவமனை திறப்பு விழாவின் போது திடீரென அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியது, அங்கு கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
- கொலை முயற்சி வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார்.
சிவங்கை மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
இவரை போலீசார் அடித்தேக் கொன்றதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஸ்டடி மரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் இருவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் காவல் துறை விசாரணையின் போது ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.







