என் மலர்tooltip icon
    • நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
    • திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.

    திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    * நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.

    * 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

    * ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.

    * திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    * இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார்.

    * பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார்.

    * மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்.

    * திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.

    * நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும்.
    • நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.

    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்திருந்தது.

    3-வது நாளான நேற்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், டிவான் கான்வே தொடர்ந்து பேட் செய்தனர். கான்வே 37 ரன்னில் ஒஜாய் ஷீல்டு பந்து வீச்சில் 'கேட்ச்' ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வீழ்ந்தார்.

    இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டாம் லாதமுடன் இணைந்தார். வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து அசத்தினர். தனது 14-வது சதத்தை அடித்த டாம் லாதம் 145 ரன்களிலும், 4-வது சதத்தை எட்டிய ரச்சின் ரவீந்திரா 176 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. வில் யங் 21 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 109 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 531 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 531 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் சீரான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜான் கம்பெல் 15 ரன்களிலும், டேகனரின் சந்தர்பால் 6 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து வந்த அலிக் அதானேஸ் 5 ரன்களிலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

    72 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் ஜஸ்டின் அரைசதம் கடந்தார்.

    இதன் மூலம் 4-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஹோப் 116 ரன்களுடனும், ஜஸ்டின் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
    • கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.

    இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

    • 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்மித் 827 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.

    • விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளன.

    விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தில் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சேவை பாதிப்புக்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நரகத்திற்கு போ இண்டிகோ! இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிலையங்களில் பயணிகள் பல நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் உங்கள் செயலி விமானங்கள் ஏறும் நேரத்தில் ரத்து செய்யும் வரை "சரியான நேரத்தில்" இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்ல - இது அலட்சியம்.

    புதிய DGCA விதிகள் நடைமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அட்டவணையை நீங்கள் சரிசெய்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய குழப்பம் அபத்தமானது. என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள், உங்களால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×