என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#Murder ஊத்தங்கரை அருகே பயங்கரம்: முதியவரை கொன்று மூதாட்டி பாலியல் வன்கொடுமை
- மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்த நிலையில் 70 வயது கணவனை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்த நிலையில் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






