செய்திகள்

டெல்லி சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Published On 2018-08-05 14:07 GMT   |   Update On 2018-08-05 14:07 GMT
டெல்லி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. #Delhi Assembly
புதுடெல்லி:

டெல்லி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கு எதிராக பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், பஸ் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விவாதிக்க உள்ளோம். மேலும், என்.ஆர்.சி பட்டியலை டெல்லியில் தயாரிக்கவும் வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையே, டெல்லியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News