உள்ளூர் செய்திகள்
ஜி.கே.வாசன்-கே.எஸ்.அழகிரி

ப.சிதம்பரத்துக்கு எம்.பி. பதவி- கே.எஸ்.அழகிரி ஏமாற்றம்

Published On 2022-05-30 06:45 GMT   |   Update On 2022-05-30 07:25 GMT
கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர்.
சென்னை:

மேல்சபை காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று மனுதாக்கலும் செய்து விட்டார்.

இந்த பதவியை கைப்பற்ற பலர் முயற்சித்தாலும் கடைசி வரை போராடியது ப.சிதம்பரமும், கே.எஸ்.அழகிரியும்தான். இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்தினார்கள். இருவரும் தனித்தனியாக சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். பொதுவாக காங்கிரஸ் தலைவராக யார் இருந்தாலும் அவரை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள். இப்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை.

எம்.பி. தேர்தலிலும், எம்.எல்.ஏ. தேர்தலிலும் காங்கிரசுக்கு குறிப்பிட்டத்தக்க வெற்றியும் கிடைத்தது. 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர்.

இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார். கடைசி நேரத்தில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை இந்த மாதிரி கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை சந்திப்பது இது 3-வது முறையாகும்.

1980 சட்டமன்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டார்.

அதே போல் 1984 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சிவாஜி மன்றத்தினர் பிடிவாதமாக அந்த தொகுதியை கேட்டதால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது.

3 முறை ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரம் 1991, 1996 ஆகிய 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ல் எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார்.

ஒரு காலத்தில் ப.சிதம்பரத்தின் சிஷ்யராக இருந்தவர்தான் கே.எஸ்.அழகிரி. இப்போது நடந்த போட்டியில் குரு வென்றுள்ளார்.

Tags:    

Similar News