என் மலர்

    நீங்கள் தேடியது "KS Alagiri"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.
    • இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலை வகித்தார்.

    கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

    நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் எல்லா சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியாரும், காமராஜரும் வலியுறுத்தினார்கள். அதன் நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.

    இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற்பட்டோர் பிரிவு மாநில துணை தலைவர்கள் துறைமுகம் ரவிராஜ், தீபன்பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் டி.கே.கண்ணன், செயலாளர் அருள்பிரசாத், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    • கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நவீன் முன்னிலையில் நாளை (25-ந்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
    • பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி வட்டார, நகர, நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டு கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இந்தி பேசும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்குவங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.

    தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சியை இந்தியா கூட்டணி கண்டிக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க தனது ஆட்சியின் நிறைவு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது.

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. அதனால்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தல் போல நடத்த மோடி முயன்று வருகிறார்.

    காவிரி பிரச்சனையை பொறுத்தவரையில் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. வறட்சியான காலகட்டங்களிலும், வெள்ள காலகட்டத்திலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைபாட்டிலேயே உள்ளோம்.

    ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.

    இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ந்தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருதுநகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.

    காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.

    இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாள்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது.

    சென்னை :

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜரின் முதல் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி, ஹால்டா சந்திப்பு அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன் தலைமையில் பொன். கிருஷ்ணமூர்த்தி, கே. சிரஞ்சீவி, எம்.பி.ரஞ்சன்குமார், இராம.சுகந்தன், அருள் அன்பரசு, முத்தழகன், வழக்கறிஞர் தாமோதரன், தளபதி எஸ்.பாஸ்கர், விருகை பட்டாபி, எஸ்.எம். குமார், ஆர். சுந்தரமூர்த்தி, ஆர்.ஜி.பகத்சிங், பிரபுதாஸ், அக்ராவரம் கே.பாஸ்கர், ஒ.வி.ஆர். ரஞ்ஜித் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.
    • பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், பாராளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறையும் 9 தொகுதிகள் குறையாமல் தி.மு.க.விடம் கேட்டு பெற தீர்மானித்துள்ளார்கள்.

    கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், வைகோ மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே ஓரிரு தொகுதி மாறலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மாறினால் வேறு எந்த தொகுதியை கேட்பது என்றும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    கட்சி வலுவிழந்து இருப்பதால் தான் தி.மு.க.விடம் சீட்டுக்கு போராட வேண்டி உள்ளது. எனவே பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    மேலும் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே எம்.பி.க்களாக இருப்பவர்கள் விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
    • கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. கட்சி மேலிடம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இதனால் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். அப்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

    கடந்த சில நாட்களாக காங்கிரஸ் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார். பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா நடந்தது.
    • இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    நீட் தேர்வு குறித்து ஆளுநர் வரம்பு மீறி பேசுகிறார். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை, ஒருமுறைக்கு இருமுறை அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரியை கைதுசெய்து, போலீஸ் நிலையத்தில் அமர வைத்தாரா இல்லையா?

    ஆளுநரின் பேச்சும் செயலும் தவறானது. எங்கள் கூட்டணி கட்சிகள், அவரது தேநீர் விருந்துக்கு வரமாட்டோம் எனக் கூறினோம். அவர் மழையே பெய்யாத போதும், மழை காரணமாக தேநீர் விருந்தை தள்ளி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர்களை வருகிற 4-ந்தேதி டெல்லிக்கு வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அழைத்துள்ளார்.

    மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, 8 எம்.பி.க்கள் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    இவர்களுடன் டெல்லியில் அகில இந்திய தலைவர் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும் கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print