என் மலர்
நீங்கள் தேடியது "Congress"
- நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.
- இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் எல்லா சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியாரும், காமராஜரும் வலியுறுத்தினார்கள். அதன் நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.
இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிற்பட்டோர் பிரிவு மாநில துணை தலைவர்கள் துறைமுகம் ரவிராஜ், தீபன்பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் டி.கே.கண்ணன், செயலாளர் அருள்பிரசாத், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
- தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருது நகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நவீன் முன்னிலையில் நாளை (25-ந்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.
- மக்கள் இதை கண்டு கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
- பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்பட்டது, பா.ஜ.க. ஏன் இதில் இத்தனை அவசரம் காட்டியது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவே இல்லை. பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இந்தியா vs பாரத் பற்றிய விவாதத்திற்கு தான் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், மக்கள் இதை கண்டுக்கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். மேலும் சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தனர்."
"நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்தோம். பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முறையாக எல்லைகளை கட்டமைத்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. உண்மையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமலுக்கு கொண்டுவர முடியும்."
"ஆனால், பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகளுக்கு தாமதப்படுத்த நினைக்கிறது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெறக் கூடாது என்றும் பா.ஜ.க. நினைக்கிறது," என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
- மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
- இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.
நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.)எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்கள் 90 பேரில் 3 அதிகாரிகள் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஓ.பி.சி. பற்றி பேசுகிறார், ஆனால் அவர் ஓ.பி.சி. பிரிவினருக்கு என்ன செய்தார்?
நாட்டில் 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சதவீத மக்களுக்கு சட்டத்தை உருவாக்குகிறார்கள். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இதற்கு 10 ஆண்டுகளாவது ஆகும். சிறப்பு கூட்ட தொடரின் நோக்கமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாதான். எனவே இந்த மசோதாவை உடனே செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.
இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது. எனவே காங்கிரஸ் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெற உள் ஒதுக்கீடு அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
- பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி வட்டார, நகர, நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டு கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தி பேசும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்குவங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.
தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சியை இந்தியா கூட்டணி கண்டிக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க தனது ஆட்சியின் நிறைவு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. அதனால்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தல் போல நடத்த மோடி முயன்று வருகிறார்.
காவிரி பிரச்சனையை பொறுத்தவரையில் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. வறட்சியான காலகட்டங்களிலும், வெள்ள காலகட்டத்திலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைபாட்டிலேயே உள்ளோம்.
ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் போர்ட்டர்களை சந்தித்தார்.
- போர்ட்டர்களுக்கான சிகப்பு சட்டை அணிந்து லக்கேஜ் தூக்கினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது பல்வேறு தரப்பு மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாற்றினார்.
திடீரென விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டுதல், டூவீலரை ரிப்பேர் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
அந்த வகையில் இன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் சென்றார். அங்கு அவர் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் (porters) உரையாடினார். பின்னர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிகப்பு நிற சட்டையை அணிந்து, கையில் சுமையையும் தூக்கினார்.
இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் ''மக்களின் தலைவன் ராகுல் காந்தி அவருடைய போர்ட்டர் நண்பர்களை சந்தித்தார். சமீபத்தில், ரெயில் நிலைய போர்ட்டர் நண்பர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இன்று ராகுல் காந்தி அவர்களை சந்தித்தார். அவர்கள் பணி குறித்து கேட்டறிந்தார். பாரத் ஜோடோ பயணம் தொடர்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளது.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
- நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார். மேலும், இந்த மசோதா முழுமை பெறாமல் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இகு குறித்து பேசும் போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்."
"ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.
- 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
- உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.
- காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ந்தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருதுநகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.
காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.