என் மலர்
நீங்கள் தேடியது "congress"
- காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி.
- தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும்.
தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டி பெருமைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி எந்த திட்டமாக இருந்தாலும் சரி, பிரதம மந்திரி திட்டம் என்றுதான் அறிவித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் 125 நாட்களாக அதிகரித்து உள்ளார்.
அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார் என்று பலரை சொல்லலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் வைக்க சொல்லி போராடலாமே.
இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம். நாட்டில் இப்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது.
எனவே அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியது. மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இன்று நாடு அமைதியாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி. இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வருகிறது. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் ஜெயிப்போம் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நேரத்தில்தான் தி.மு.க. மக்களைப் பற்றி யோசிப்பது போல் பாசாங்கு காட்டுவார்கள்.
ஆசிரியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழி யர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என்று பலரும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் இதுவரை யோசிக்காத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது.
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும் பங்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகின்ற னர். ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அவர்களைப் பற்றி யோசிப்பது போல் வெளிக் காட்டுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
ஆனால் இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
- இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடம், முடிவெடுக்கட்டும். பொது வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று ஒரு தரப்பு பேசி வருகிறது.
காங்கிரசுக்குள் இப்படி 2 பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜனநாயகன் பொங்கல்' என்ற பெயரில் காங்கிரசில் ஒரு பிரிவினர் இன்று மாலை கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்த கோரிக்கையை விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோயம்பேட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதில் கூட்டணி விவகாரங்கள் பற்றி பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக தொண்டர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத்தான் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
கடலூர் மாநாட்டில் விஜயபிரபாகரன், விஜய்க்கு ஒரு ஆலோசனை சொல்வதாக சொல்லி காங்கிரஸ் பற்றி பேசியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் கொல்லை புறமாக செயல்படாது. இதைப்புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், ராம் மோகன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
"திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்" என்று காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
கடந்த 2004 இல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை, 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தான். அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பா.ஜ.க., தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் தி.மு.க.வுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
அகில இந்திய அளவில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பின்னால் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பா.ஜ.க.வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் மிகப்பெரிய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய அரசியல் பின்னணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதை கொள்கை ரீதியாக சிந்தித்து செயல்பட வேண்டுமென காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.
கூடலூருக்கு வருகை தரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல் விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
- கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
- தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாய்திறக்கவில்லை.
- காங்கிரஸின் தேசியத்தலைவரும், மாநிலத்தலைவரும் என்ன சொல்கிறார்களோ அதைப்பற்றிதான் திமுக பேசவேண்டும்
விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பல நடிகர்களும் இதுதொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸும் இந்த விவகாரத்தில் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்தற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"பாஜக, ஒன்றிய அரசுக்கு உட்பட்ட அனைத்து துறைகளிலும் தலையிட்டு, தங்களுடைய எதிரிகளை மடக்குவதற்கு, அவர்களை தன்வழிக்கு கொண்டுவருவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
பாஜக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதை தணிக்கைக்குழு மூலம் செய்கிறது. இதன் அடிப்படையில்தான் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக பாஜகவை விமர்சிக்கிறது. இதற்கும், கூட்டணிக்கும் தொடர்பு கிடையாது. காங்கிரஸின் தேசியத்தலைவரும், மாநிலத்தலைவரும் என்ன சொல்கிறார்களோ அதைப்பற்றிதான் திமுக பேசவேண்டும்." என தெரிவித்துள்ளார்.
- அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது
- கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம்
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் வசந்த் தனது பதிவில், "ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இன்று, பாஜக வேண்டுமென்றே 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதால், அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மெர்சல் படத்திற்கு ஆதரவாக 9 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி தனது பதிவில், "மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் திரைப்படத்தில் தலையிட்டு தமிழ் பெருமையை அசிங்கப்படுத்த முயற்சிக்காதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
- ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
- அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யுடியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விஷயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது ‘ஜன நாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார்.
- ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததே காரணம் என்றும் இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளதாகவும் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி அவரது வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், தற்போது 'ஜன நாயகன்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார். ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மெர்சல் படத்தில் தேவையின்றி தலையிட்டு தமிழர்களின் பெருமிதங்களை சிதைக்காதீர்கள் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.
- ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கலையொட்டி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படாததால் படம் நாளை வெளியாகாது என்றும் விரைவில் புதிய வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு அரசியல் காரணமே என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களைச் பரப்பும் படங்கள் மக்களிடம் எடுபடவில்லை, யாரும் அதை நம்பவும் இல்லை, பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை.
இந்தத் தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாத மோடி-ஷா அரசு, இப்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி சினிமாத் துறையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது. இப்போது அவர்களின் இலக்கில் சினிமாத் துறை சிக்கியுள்ளது
அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது.
சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தற்போது விஜயின் 'ஜன நாயகன்' படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பியுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டனர்.
- மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எதிர்வரும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கார்ஹி மற்றும் கன்னையா குமார் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அசாம் மாநில தேர்தல் பார்வையாளர்களாக பூபேஷ் பாகல், டி.கே. சிவக்குமார் மற்றும் பந்து திர்கே ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.






