search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎஸ் அழகிரி"

    • புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.
    • நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

    சென்னை:

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் எம்.பி. ரஞ்சன்குமார். இவர் தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணை தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

    2 பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலையில் அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அக்கடிதத்தை அவர் ஏற்கவில்லை.

    தற்போது புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக 6 மாவட்டங்களில் புதிதாக நிர்வாகிகளை நியமித்தார்.

    நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

    மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் கிழக்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்புக்குழு உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார்.

    இந்த நிலையில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட சர்க்கிள், வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.


    மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.

    பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
    • தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை 13,000 கோடி ரூபாய் பெறப்பட்ட மொத்த நன்கொடையில் ரூபாய் 6572 கோடியை பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது.

    இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

    தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூபாய் 1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6812. இதன்மூலம் ரூபாய் 6812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்டுகளுக்கு பா.ஜ.க. செய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. செய்த சட்டவிரோத உதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? இதன்மூலம் இந்திய ஜனநாயகம் தேர்தல் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதி வழங்கினாலும், மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



    எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ அதற்கு முன்பாக வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்று மோடி அரசின் பாசிச, ஜனநாயக விரோத போக்கை கண்டிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது.
    • கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில் உரையாற்றி இருக்கிறார்.

    சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பினால் பா.ஜ.க. தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது. 2018 முதல் 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூபாய் 9,200 கோடி. இதில் பா.ஜ.க. பெற்ற நன்கொடை மட்டும் ரூபாய் 5272 கோடி. இது மொத்த நன்கொடையில் 52 சதவிகிதமாகும்.


    கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி. என குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
    • தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தயாராக உள்ள விடுதலை சிறுத்தை 4 தொகுதிகளையும் ஒரு மேல்சபை எம்.பி.யும் கேட்க உள்ளனர்.

    திங்கட்கிழமை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வி.சி.க. அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியின் சின்னத்தில் நிற்காமல் தனி சின்னத்தில் முழுமையாக நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதியிலும் தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் பானை சின்னம் வாக்காளர்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதனால் இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிடவே திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.

    அதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை பானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு கணிசமாக வாக்குகள் பெறப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் சென்று தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டம் செல்கின்றனர்.

    நாளை (8-ந் தேதி) தஞ்சை-திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    9-ந் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல்கிறார்கள். 10-ந் தேதி கோவை, திருப்பூருக்கும், 11-ந் தேதி சேலம் செல்லும் வகையிலும் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ந் தேதி விழுப்புரம், 18-ந் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் இந்த குழுவினர் 21, 22, 23-ந் தேதிகளில் சென்னையில் பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    • ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.
    • இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் வின்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர்.

    இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


    22 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதில் அவர் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டு கூற முடியுமா ? அத்தகைய தியாக வரலாறு இல்லாத பின்னணியில் வந்த பிரதமர் மோடி, இந்தியாவின் விடுதலைக்காகவும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தை சிதைத்து விட்டால் தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.

    எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்து செல்கிற பிரதமர் மோடி அவர்களே, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்துங்கள். மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்யாதீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவித்து ஊழலை வளர்க்காதீர்கள், இந்திய பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 பொதுத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி ராமேஸ்வரம், தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, பயன்படுத்திய இரண்டு நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்கள்.

    பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப்பு படகு கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு-பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடி தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதை கண்டிக்கிற வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பஸ் நிலையம் அருகில் உள்ள அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் முன்பு மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
    • விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
    • கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேச பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமையும் மத்திய அரசிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கிறதோ அதனை தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களிடம் கேட்க உள்ளனர். இதற்காக அந்த குழுவின் சுற்றுப்பயண விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்கள். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரி உள்ள மாணிக்கம் மகாலில் இதற்கான கூட்டம் நடை பெற்றது.

    இதில் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செஞ்சி மஸ்தான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-


    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.

    இதில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய திட்டங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்படும்.

    பின்னர் இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கருத்துக்களும் கேட்கப்பட்டு தயாரிக்கப்படும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் தி.மு.க. குழுவினர் கருத்துக்களை கேட்டனர். பலரிடம் அவர்களது கோரிக்கைகள் மனுக்களாக எழுதி வாங்கப்பட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும், கப்பல் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தி.மு.க. குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இன்று காலை 10 மணி முதல் நீண்ட நேரம் விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    அவர்களது அடிப்படை தேவைகள், எந்தெந்த பகுதிகளில் அரசு திட்டங்கள் தேவைப்படுகிறது மற்றும் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது. இன்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

    இந்த குழு நாளை கன்னியாகுமரிக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி) மதுரைக்கும் செல்கிறது. தொடர்ந்து 8-ந்தேதி தஞ்சை, 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந் தேதி திருப்பூர். 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந் தேதி விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். இறுதியில் 21, 22, 23-ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துக்களை கேட்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும்.

    அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோவாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க.வை போலவே அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு குழு அமைத்துள்ளார்.


    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விசுவநாதன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற உள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து தங்களது பயணத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். வேலப்பன்சாவடியில் இன்று காலை அ.தி.மு.க. குழுவினர் கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    பொதுமக்களிடம் எழுத்து பூர்வமாகவும் கருத்துக்களை கோரிக்கைகளை அ.தி.மு.க. தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

    சென்னையை தொடர்ந்து வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக பிரித்து கருத்துக்களை பெற உள்ளனர். வருகிற 10-ந்தேதி கோவை மண்டலத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைய உள்ளது. அதன் பிறகு மக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் சமயத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும். அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு வரவும் வாய்ப்பு உண்டு. அரசியலில் கடைசி நேரம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அவரது இந்த கருத்து பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை கொள்கைகளை இழந்துவிட்டது. சுயமரியாதையை இழந்துவிட்டது. தமிழக நலனை இழந்து விட்டது. சிறுபான்மையினர் நலனை இழந்துவிட்டது. மோடியை மட்டுமே தலை குனிந்து வணங்கியதால் அவர்களது சுயமரியாதை தான் பறிபோனது.


    எங்களை பொறுத்தவரை கொள்கைரீதியாக மதசார் பற்ற அணியாக ஒன்றுபட்டு உள்ளோம். எங்கள் எண்ணம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை வேரறுக்க வேண்டும் என்பது தான்.

    தொகுதிகளை பொறுத்த வரை எந்த கட்சிக்கும் கூடுதலாகவும் கிடைக்காது. குறைத்தும் வழங்க மாட்டார்கள்.

    மகாபாரத போரில் கிருஷ்ணர் எப்படி வெற்றி இலக்கை நோக்கி தேரை ஓட்டினாரோ அதே போல் மு.க.ஸ்டாலினும் கடந்த தேர்தலில் அற்புதமாக கூட்டணி தேரை ஓட்டி வெற்றியை தேடி கொடுத்தார்.

    அதே போல் இந்த தேர்தலிலும் மதசார்பற்ற கூட்டணி தேரை அற்புதமாக ஓட்டி மகத்தான வெற்றி பெறுவார்.

    காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினர் குறைவாக இருந்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புள்ளி விவரம் வெளியிட்டு உள்ளார். எங்களுக்கும் புள்ளி விவரம் தெரியும்.

    இது ஆர்.எஸ்.எஸ். தயாரித்து கொடுத்த புள்ளி விவரம். எந்த காலத்திலும் சிறுபான்மை மக்கள் உங்களோடு கைகோர்க்க மாட்டார்கள். அ.தி.மு.க., பா.ஜ னதாவோடு கைகோர்த்ததால்தான் சிறுபான்மையினர் அவர்களை கைவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-

    மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×