செய்திகள்

மத்திய அரசிடம் தைரியமாக கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் - துரைமுருகன்

Published On 2018-11-21 07:22 GMT   |   Update On 2018-11-21 07:22 GMT
மத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டினால் தேவையான நிதி கிடைக்காது என்றும் தைரியமாக கேட்டால் நிதி கிடைக்கும் என்றும் துரை முருகன் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #Centralgovt #GayaCyclone
சென்னை:

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து பேசினார்.

அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

அரசின் நிவாரணப் பணிக்கு ஓத்துழைப்போம் என்ற எண்ணத்தில் தான் முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கினோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக திமுக நிவாரண நிதி வழங்கியுள்ளது.


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற முதலில் சென்று வந்தவர் மு.க.ஸ்டாலின். பாதிக்கப்பட்ட இடத்தில் அரசியல் செய்யக்கூடாது.

மத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டினால் தேவையான நிதி கிடைக்காது, தைரியமாக கேட்டால் நிதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #DMK #DuraiMurugan #Centralgovt #GayaCyclone
Tags:    

Similar News