செய்திகள்

ஆர்வக்கோளாறு ஆபத்தை ஏற்படுத்தும்- கமல்ஹாசனுக்கு ராமதாஸ் எதிர்ப்பு

Published On 2018-06-04 10:18 GMT   |   Update On 2018-06-04 10:18 GMT
காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு, காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்- அமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்.

காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #KamalHaasan
Tags:    

Similar News