இந்தியா

தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார்

Published On 2024-05-01 14:38 GMT   |   Update On 2024-05-01 14:38 GMT
  • தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
  • காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் இணைந்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், 32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருணா சாகர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர் அவரது மனைவி அஞ்சுவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் கருணா சாகர் காங்கிரசில் இணைந்தார்.

Tags:    

Similar News