search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.

    மதுரை:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார், கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. 2-க்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பின் தங்கி உள்ள மக்களை கண்டறிந்து சிறப்பு சலுகைகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தான் உண்மையான சமூக நீதி. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தி.மு.க. சமூக நீதி பற்றி பேசக்கூடாது.

    சென்னையில் புயலுக்கு பிறகு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலர் பால், குடிநீர் கூட கிடைக்காமல் அவதியடைகிறார்கள். 2015-ம் ஆண்டு வந்த வெள்ளத்தை பார்த்த பிறகு இன்னும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிமேலும் கற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி நாசப்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் நீர்நிலைகளை தொழிலதிபர்களும், அரசும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஆனால் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். சென்னை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ரூ.1,900 கோடி செலவிட்டதாக சொல்கிறார். இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் பட்டியலின மக்கள் தாக்கப்படுகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். சென்னை வெள்ள பாதிப்புக்கு பா.ம.க. சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது.
    • ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி. மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும்.

    எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
    • அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது.

    திண்டிவனம்:

    அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

    சென்னையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். இன்னும் ஒரு நாள் சென்னையில் மழை பெய்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டிருக்கும். சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன்.

    அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது. செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதாளத்தில் விடப்பட்டுள்ளதா? ஒன்றுமே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார்.
    • தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபுதேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது.
    • சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன.

    சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாலும் மற்ற பகுதிகளை மாநகராட்சியோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை. மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை இல்லை.

    சென்னையில் பெய்துள்ள மழை ஒப்பீட்டளவில் அதிகம் இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் 800 கி.மீக்கும் கூடுதலான தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை நேற்றைய மழையில் பொய்த்துப் போயிருக்கிறது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதோ, இப்போதும் அதே அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    நேற்று மாலை தொடங்கி இரவு வரை மிக அதிக மழை பெய்தாலும், இரவில் மழை பெய்யவில்லை. ஆனாலும், மழை நீர் வடியவில்லை. இன்று காலை முதல் மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பது தான் உண்மை. எனவே, மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

    சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை-வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.
    • வா... உனக்கு ‘செல்பி’ தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார்.

    சென்னை:

    அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். இதில் வயது வித்தியாசம் என்பது கிடையாது.

    அரசியல் தலைவர்களும் அவ்வாறு வருபவர்களுடன் சளைக்காமல் போஸ் கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றி வைப்பது வாடிக்கை.

    அப்படியும் கூட்டத்தில் சிக்கி முண்டியடித்து போட்டோ எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்பவர்களும் உண்டு. அவ்வாறு ஏமாறுபவர்கள் பெரியவர்கள் என்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடுவார்கள்.

    சிறுவர்கள் என்றால் தாங்க முடியாமல் அழுதே விடுவார்கள். அப்படி அழுத சிறுவனை பார்த்து அன்புமணி நெகிழ்ந்த சம்பவம் பெண்ணாகரத்தில் நடந்தது. பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் பெண்ணாகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேடை அலங்கார பணியை ரமேஷ் என்பவர் செய்திருந்தார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் அவருடன் அவரது மகன் ஜெயம் உடன் சென்று உள்ளார். அவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.

    அதற்காக அடிக்கடி மேடை அருகே செல்வதும், என்னடா... இப்படி அங்கும் இங்கும் ஓடாதே என்று பெரியவர்கள் விரட்டுவதுமாக இருந்துள்ளது. இதை மேடையில் இருந்து கவனித்து கொண்டிருந்த அன்புமணி ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் ஏன் அழுகிறான் என்று தெரியாமல் அவனை மேடைக்கு அழைத்து வரும்படி கூறினார்.

    மேடைக்கு வந்ததும் அன்புடன் அவனை தட்டிக்கொடுத்த அன்புமணி ஏன் அழுகிறாய்...? நல்லாத்தானே ஓடிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார். அப்போது 'செல்பி' எடுக்கணும் என்று அழுதபடியே கூறியதை கேட்டதும் நெகிழ்ந்த அன்புமணி அவனை அருகில் அழைத்து அரவணைத்தபடியே கண்ணீரை துடைத்து விட்டார்.

    வா... உனக்கு 'செல்பி' தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார். ஆனால் அவன் மிகவும் குள்ளமாக இருந்ததால் அன்புமணியும் முட்டு போட்டு நின்றார். அப்போது அழாதேடா... சிரி என்று ஆசுவாசப்படுத்தி 'செல்பி' எடுத்துக்கொண்டார். அப்போது அந்த சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

    சிறுவனின் அன்பில் நெகிழ்ந்து அவனது ஆசையை நிறைவேற்றி வைத்த அன்புமணியை அனைவரும் பாராட்டினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங்குக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.

    சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி, அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி இலக்கை எட்டி, பாதுகாக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
    • வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.

    மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனாலும், தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் பார்க்கும் போது, இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும். அந்த வகையில் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

    இவற்றையெல்லாம் விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், காகிதக் குடுவைகளில் மது விற்பனை என்ற பெயரில், 90 மி.லி. மதுப்புட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமோ? என்பது தான்.

    90 மி.லி. மதுப்புட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகமாக இருக்கும்.

    90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது.

    அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் 90 மிலி மது வகை அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும்.

    தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு என்பது தான் மக்களின் விருப்பம். அரசின் திட்டமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு எதிரான வகையில், 90 மிலி காகிதக் குடுவையில் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலை முறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி, வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.
    • 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது.

    ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print