செய்திகள்

பனிச்சரிவில் ராணுவ வீரர் பலி: விஜயகாந்த் இரங்கல்

Published On 2017-12-23 07:42 GMT   |   Update On 2017-12-23 07:42 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனச்சரிவில் சிக்கி கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்ததற்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம், குரெஸ் பகுதியில் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கொசூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நம் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வீர மரணம் அடைந்த மூர்த்தி ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News