இந்தியா

இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாஜகவில் இணைந்தார்

Published On 2024-04-29 07:44 GMT   |   Update On 2024-04-29 07:44 GMT
  • வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திரும்பப் பெற்றார்.
  • இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.

பாஜக வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார்.

தற்போது இந்தூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News