search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்-  அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் மனுதாக்கல்
    X

    பாராளுமன்ற தேர்தல்- அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் மனுதாக்கல்

    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். #LSPolls #ADMK #DMK #congress
    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனுதாக்கல் செய்தார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் கலெக்டர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மனுதாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    தென்காசி தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் மனுதாக்கல் செய்தார். திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் கலெக்டர் சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார்.

    சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.

    ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன் மனுதாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனுதாக்கல் செய்தார்.

    திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். #LSPolls #ADMK #DMK #congress #BJP
    Next Story
    ×