search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    வைகோ இருந்த கூட்டணி இதுவரையிலும் வெற்றி பெற்றது கிடையாது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    தென்திருப்பேரை:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். பாரதியஜனதா அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. வரிசையில் நிற்கவேண்டாம். இடைத்தரகர்கள் கிடையாது. நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல். ஆனால் மோடி ஆட்சியில் ஒரு ஊழல் கூற முடியுமா?

     தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார். 5 முறை தமிழகத்தை ஆண்ட நீங்கள் ஏன் வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்.



    மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இது வரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது.

    ஆனாலும் அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு விட்டு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு ம.தி.மு.க. தயாராகி விட்டது. தி.மு.க.வினர் பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நாம் ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம்.

    தென் திருப்பேரை கரிசல் மண் அல்ல. காவி மண். நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    Next Story
    ×