search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது- இளங்கோவன்
    X

    ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது- இளங்கோவன்

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழை மக்களுக்கு போய் சேராது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #Elangovan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.

    அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கூட சரியான கூலி கொடுக்காமல் குறைந்த கூலியை கொடுக்கிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
    Next Story
    ×