என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுகவை அழிக்க நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது- தம்பிதுரை
Byமாலை மலர்27 Oct 2018 4:07 AM GMT (Updated: 27 Oct 2018 4:07 AM GMT)
அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது என்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தம்பிதுரை பேசினார். #ADMK #ThambiDurai #Jayalalithaa
கரூர்:
கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் பதவியை இழந்து நிற்கிறார்கள். அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஜெயலலிதா வழியில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். அதற்கு பின்னரும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆட்சி செய்யும்.
கருணாநிதியுடன் தி.மு.க.வின் உதயசூரியனும் அஸ்தமனம் ஆகிவிட்டது. ஆகவே மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #Jayalalithaa
கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் பதவியை இழந்து நிற்கிறார்கள். அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஜெயலலிதா வழியில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். அதற்கு பின்னரும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆட்சி செய்யும்.
தி.முக.வில் குடும்ப அங்கத்தினருக்கே அதிகாரத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் டீக்கடை நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முதல்வர் ஆக்கினார். உண்மையாக உழைத்தால் அ.தி.மு.க.வில் உயர் பதவிக்கு வர முடியும். மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டுக்கு கூட வந்து பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #Jayalalithaa
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X