search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பொருட்கள்"

    • மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
    • எராளனோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மாவட்ட துணை இயக்குனர் கண்ணகி தலைமையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் வேளாண்மை அலுவலர் பிரதிபா முன்னிலை வகித்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அனைத்து விவசாயக் பண்ணைக்கருவிகள் தார்பாலின், ஜிப்சம், ஜிங்சல்பேட், விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கண்ணகி தெரிவித்தார்.

    அதேபோல நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிரிட தேவையான உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கம் வட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி கேட்டுக் கொண்டார்.

    இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், சரவணன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.00 1/2குவிண்டால் எடை கொண்ட 6993 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.49-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.61ஆயிரத்து 194-க்கு விற்பனையானது.

    அதேபோல் 244.57குவிண்டால் எடை கொண்ட 503-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.12-க்கும், சராசரி விலையாக ரூ.75.75-க்கும் என மொத்தம் ரூ.18லட்சத்து 60ஆயிரத்து 696-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19லட்சத்து 21 ஆயிரத்து890-க்கு விற்பனையானது.

    • நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 79.27 குவிண்டால் எடை கொண்ட 22ஆயிரத்து 416 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.26.15-க்கும், குறைந்த விலையாக ரூ.20.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.46-க்கும் என ரூ.ஒரு லட்சத்து76ஆயிரத்து 304க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 214.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.86.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.39-க்கும், சராசரி விலையாக ரூ.85.80ம், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.60-க்கும், குறைந்த விலையாக ரூ.73.89க்-கும், சராசரி விலையாக ரூ.79.29-க்கும் என்று ரூ.17 லட்சத்து 29 ஆயிரத்து 152க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    • முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் துவங்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சங்கம் சார்பில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள சங்க வளாகத்தில் விவசாய குழுக்கள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு சந்தை என்ற பெயரில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் செயல்படுகின்றன.அதன் பின்னர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை சங்க பிரதிநிதிகள் காலை 9 மணி வரை விற்பனை செய்வர். அதன் தொகை, உற்பத்தியாளர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இதில் காய்கறி வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கூட்டுறவு சந்தை முறையை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது.

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் வேளாண் பொருட்கள் ரூ.33.56 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 62.93½ குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 368தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.89-க்கும், குறைந்த விலையாக ரூ.20.69-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 47ஆயிரத்து 671-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 292.69½ குவிண்டால் எடை கொண்ட 628மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.75-க்கும், குறைந்த விலையாக ரூ.86.55-க்கும், சராசரி விலையாக ரூ.87.25-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.85-க்கும், குறைந்த விலையாக ரூ.72.16-க்கும், சராசரி விலையாக ரூ.72.16க்கும் என்று ரூ.62லட்சத்து 41ஆயிரத்து 14க்கு விற்பனை ஆனது.

    70.98குவிண்டால் எடை கொண்ட 95மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.115.91-க்கும், குறைந்த விலையாக ரூ92.99-க்கும், சராசரி விலையாக ரூ.108.09க்கும் என ரூ.7லட்சத்து 46ஆயிரத்து 651க்கு விற்பனையானது.

    ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், ஆகியவை ரூ.33லட்சத்து 56ஆயிரத்து 36க்கு விற்பனை ஆனது.

    ×