search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் விற்பனை
    X

    ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் விற்பனை

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் வேளாண் பொருட்கள் ரூ.33.56 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 62.93½ குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 368தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.89-க்கும், குறைந்த விலையாக ரூ.20.69-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 47ஆயிரத்து 671-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 292.69½ குவிண்டால் எடை கொண்ட 628மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.75-க்கும், குறைந்த விலையாக ரூ.86.55-க்கும், சராசரி விலையாக ரூ.87.25-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.85-க்கும், குறைந்த விலையாக ரூ.72.16-க்கும், சராசரி விலையாக ரூ.72.16க்கும் என்று ரூ.62லட்சத்து 41ஆயிரத்து 14க்கு விற்பனை ஆனது.

    70.98குவிண்டால் எடை கொண்ட 95மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.115.91-க்கும், குறைந்த விலையாக ரூ92.99-க்கும், சராசரி விலையாக ரூ.108.09க்கும் என ரூ.7லட்சத்து 46ஆயிரத்து 651க்கு விற்பனையானது.

    ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், ஆகியவை ரூ.33லட்சத்து 56ஆயிரத்து 36க்கு விற்பனை ஆனது.

    Next Story
    ×