search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதனை"

    • தக்கலையில் சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் பேட்டி
    • முதியோர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி:

    சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக உலக முதியோர் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதியவர்களை மகிழ்ச்சியோடு வைத்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. முதியோர் இல்லங்கள் இன்று அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது. வயதாகும் போது நீடித்து நிலைக்கும் நோய்கள் உருவாகி முதியோர்களின் உடலுறுப்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு. இதனால், சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடும். அவர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    முதியோருக்கான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோருக்கான சுகாதார பராமரிப்பு தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது.

    பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முதியோர் பேரளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும், பாரபட்சமும், சமூக புறக்கணிப்பும் தொடர்கின்றன. சமூகப் பொருளாதார அளவில் செயல் திறனுடனும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் முதிர்ந்து வரும் மக்கள் கூட்டம் திகழுவதை உறுதிப்படுத்த நாம் இந்த பாரபட்சத்தை களைந்தே தீர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விக்கிரவாண்டி அருகே வி. மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தியின் மகன் ராஜேஷ் (வயது 21). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. எனவே சம்பவத்தன்று இவர் வேதனை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.பெருகி வரும் வாகனங்களால் சாலைகள் அகலப்படுத்தப்படுவது அவசியமான‌ஒன்று ஆகும்.

    இதில் கல்லணை திருவையாறு சாலை (மாநில சாலை எண்22) கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை
    அகலப்படுத்தும் பணிகளில் திருச்செனம் பூண்டி வரை முடிந்துள்ளது.

    முடிவடைந்த சாலைகளில் வெள்ளைக் கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள் பிரதிபலிப்பானகள் பொருத்தி உள்ளனர்.

    சாலை அருகில் பள்ளிகள் வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகள் வைத்து உள்ளனர்.

    இவை எல்லாம் வரவேற்புக்குரியவை.

    அதேசமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலை துறை வண்ணத்தில் வைத்து உள்ளனர்.

    அருமையான‌ ஆங்கில‌வாசகங்கள் மட்டுமே இந்த வகையான போர்டுகளில் உள்ளன.

    தமிழ் நாட்டில் மாநில‌நெடுஞ்சாலையில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள‌ விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம்.

    ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழி களிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம்.

    தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
    • லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

    திருச்சி :

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து உபரி நீர் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் வேளாண் நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த நான்கு நாட்களாக வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள் வெள்ளநீர் வழியா விட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அது மட்டுமல்லாமல் தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. கூகூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்ற விவசாயி கூறும்போது, எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கிக் கிடக்கிறது. குறுவை தொகுப்பு மூலம் அரசு வழங்கிய உதவிகள் விவசாயம் செய்தேன். ஆனால் தற்போது கஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது என கவலை தெரிவித்தார். அரசின் குறுவை தொகுப்பு வீணாகி விட்டதே என்றார்.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிட துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் சேதம் மதிப்பீடுகள் தொடங்கும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 59 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இன்று 94 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் விளைநிலங்களில் புகுந்த வெள்ள நீர் வடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரையில் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று காலை மாணவ, மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில்மழை நீர்குளம் போல் தேங்கியுள்ளது.

    இன்று காலை மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    இந்த மழை காரணமாக முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றிலும் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையொட்டி வைகை அணையில்இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டு வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மதுரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயப்ப ணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை வண்டியூர் கண்மாய், சுமார் 687 ஏக்கர் பரப்பளவு உடையது. இது முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

    எனவே வண்டியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு வந்து வேடிக்கை பார்த்து சொல்கின்றனர். ஒரு சிலர் தூண்டில் வலை போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    வண்டியூர் கண்மாய் நிரம்பியதால் கே.கே. நகர், அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

    அதே நேரத்தில் கண்மாயை சரியாக தூர்வாரி பராமரிக்காமல், விட்டுவிட்டதால் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    • தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கா ன்சாபுரம், அத்தி க்கோவில், வ.புதுப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், கோ ட்டையூர், இலந்தைகுளம், சுரைக்காய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் பல்ேவறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு தென்னையை வளர்த்து வருகின்றனர். தேங்காய் உற்பத்திக்கான செலவு, உர விலை ஆகியவை பன்மடங்கு உயர்த்துள்ள நிலையிலும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலையில் தேங்காய் விலை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதாவது கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு காய் தேங்காய் ரூ.7.10 வரை விற்கப்படுகிறது. உற்பத்தி செலவு, கூலி ஆட்கள், உரம் உள்பட பல்வேறு செலவுகளை வைத்து பார்க்கும் போது நஷ்டம் தான் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தென்னை சாகுபடி செய்து வருகிறோம்.

    கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×