search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரபாண்டி"

    • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி பேசிய நிலையில், வீரபாண்டி பேருந்துநிலையத்திலிருந்து ஜே.ஜே.நகர் செல்லும் வரை 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. அங்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர், எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.
    • மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 4 மட்டுமே உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மொத்தமாக 1975 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 11ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் மொத்தம் 38.இதில் பணிபுரிவோர்கள் 33.காலிப்பணியிடம் 5 உள்ளது.

    அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். அப்படிெயன்றால் 50ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 33 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வகுப்பறைகள் இருப்பது 22.வகுப்பறைகள் தேவை 21.மேல்நிலை கல்விக்கு தேவையான இயற்பியல். வேதியியல். உயிரியல் உட்பட்ட எந்த ஆய்வகமும் இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை.900க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை.மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 10. ஆனால் 4கழிப்பிடம் மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம் 10.ஆனால் 2 கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் தேவை இருக்கிறது.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பள்ளியில் வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
    • குறைபாடுகள் கண்டறியப்பட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருப்பூர்  :

    திருப்பூர் 54-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சி .அருணாச்சலம் தலைமையில், மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். 54 -வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பாரதி, ஜெயக்குமார், ஜீவானந்தம், ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.

    சிகிச்சை முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கு ம் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.
    • மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக செல்லும் சாலைபோக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் ஏ.எஸ்.என். மருத்துவமனை அருகே சாலையை கடந்து செல்லும் மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையாகும். இந்த மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்உள்ளது. இது குறித்து வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×