search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து சாவு"

    • உடல்நலக் குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள தர்மாபுரம் குளக் கரை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 63), உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார்.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து விட் டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட் டார்.

    இது தொடர்பாக இவருடைய மகன் சக்திவேல் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல் நலக்குறைவால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் சமுத்திரம் (வயது 39), இவரது மனைவி தேவி (27) இவர்கள் குடும்பத்துடன் செய்யாறு அருகே உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    தேவிக்கு கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த தேவி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அவரது கணவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காம ல்தேவி பரிதாபமாக இறந்து விட்டார்.இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சென்னியப்பன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (39). இவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சு டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னியப்பன் பள்ளிபாளையம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதாகவும், இதனால் அவருக்கு கடன் ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையொட்டி அவர் கடந்த சில நாட்களாக கடனை கட்ட முடியாமல் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து சென்னியப்பன் அந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைக்கலாம் என்று தனது மனைவியிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்,
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம், தேவகியம்மாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 38 ) இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு முருகேஸ்வரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வெங்கடேசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது . சண்டையிடும் போதெல்லாம் நான் தூக்கு மாட்டி அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    அதன்படி சம்பவத்தன்று வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் வாயில் நுரையுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விஷம் குடித்து சுந்தரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் காலாப்பாறை பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சுந்தரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ போலீஸ் சரகம் எளச்சிகிரி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது56). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

    தனியாக வசித்து வந்த அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
    • போலீஸ் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் பஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46) தொழிலாளி. இவர் கடந்த 4 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தன் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.
    • கிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் ஓசூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.

    கிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் காரிமங்கலம்-திப்பம்பட்டி சாலையில் கிருஷ்ணன் பிணமாக கிடப்பதாக தெரியவந்தது.

    இது பற்றி தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் கிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×