என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி விஷம் குடித்து சாவு
- அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ போலீஸ் சரகம் எளச்சிகிரி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது56). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
தனியாக வசித்து வந்த அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






