search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி ஆசிரியரின் மனைவி விஷம் குடித்து சாவு
    X

    தனியார் பள்ளி ஆசிரியரின் மனைவி விஷம் குடித்து சாவு

    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விஷம் குடித்து சுந்தரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் காலாப்பாறை பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சுந்தரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×